சிஎஸ்கே சாம்பியன் ஆனதும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு… தோனியின் மனதில் உள்ளது இதுதானா?

221 0

முக்கியமான கருத்துகளை பலமுறை யோசித்து கூறுபவராக தோனி இருக்கிறார்.

அந்த வகையில் முன்பு ஓய்வு பற்றி அவர் பேசாத நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 2 முறை அதுபற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்.கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்த அணியின் கேப்டன் தோனி 2 ஆவது முறையாக சூசகமாக அறிவித்துள்ளார்.நேற்று முன்தினம் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் பேசிய தோனி, , இங்கே கூடியிருக்கும் ரசிகர்களின் அன்பிற்கு நன்றி. அவர்கள் எனக்கு (Farewell) பிரியாவிடை கொடுப்பதற்காக இப்படித் திரண்டிருக்கக்கூடும். அவர்களின் ஆதரவிற்கு நன்றி என கூறினார்.சில வாரங்களுக்கு முன்பு தோனி அளித்த பேட்டியில் ஓய்வு குறித்த அறிவிப்பை கூறி பயிற்சியாளர் மற்றும் சென்னை அணி நிர்வாகத்தை நெருக்கடிக்கு தள்ள விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஓய்வு குறித்து 2 முறை மறைவாக தோனி அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.கடந்த சீசனின்போது கேப்டன்ஷிப் பொறுப்பை ரவிந்திர ஜடேஜாவிடம் தோனி அளித்திருந்தார்.ஜடேஜாவின் தலைமையின் கீழ் சென்னை அணி தடுமாறியதை தொடர்ந்து மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் தோனி.முக்கியமான கருத்துகளை பலமுறை யோசித்து கூறுபவராக தோனி இருக்கிறார். அந்த வகையில் முன்பு ஓய்வு பற்றி அவர் பேசாத நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 2 முறை அதுபற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்.இதனால் தோனி நடப்பு ஐபிஎல் சீசனுடன் ஓய்வை அறிவிப்பார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் சென்னை அணிக்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுத்தந்து விட்டு விடைபெறும் எண்ணம்தான் தோனிக்கு உள்ளது  என்றும் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

Related Post

ப்ளே ஆஃப் சுற்றை உறுதிசெய்யுமா சென்னை?

Posted by - May 20, 2023 0
சென்னை அணியைப் போன்றே, 15 புள்ளிகளைப் பெற்றுள்ள லக்னோ அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று பிளேஆப் சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்தும் முனைப்பில் உள்ளது. ஐபிஎல் ப்ளே-ஆப்…

CSK அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகல் – புதிய கேப்டன் யார் தெரியுமா..?

Posted by - March 21, 2024 0
13 வருடங்களாக சிஎஸ்கேவின் கேப்டனாக இருந்து வந்த எம்.எஸ். தோனி தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும்…

பலம், பலவீனம் என்ன?உலகக்கோப்பை யாருக்கு?

Posted by - June 29, 2024 0
 இறுதிப் போட்டியில் இந்தியா, தென்னாப்ரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் தொடங்கி அரையிறுதி வரை, வெற்றியை மட்டுமே வசப்படுத்திய சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும், இன்று…

மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை… ரோஹித் சர்மா சதம் வீண்!!

Posted by - April 15, 2024 0
ரோஹித் சர்மா 63 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 11 பவுண்டரியுடன் 105 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *