டெய்லி ‘இத்தனை’ மணி நேரத்திற்கு மேல உட்கார்ந்து இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்து காத்திருக்கிறதாம்!

201 0

இன்றைய நாளில் பெரும்பலான மக்கள் உட்கார்ந்த வாழ்க்கை முறையை கொண்டிருக்கிறார்கள். நீண்ட நேரம் உட்கார்ந்து செய்யும் வேலை மற்றும் வாழ்க்கை முறையால் ஆபத்தான சுகாதார நிலைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால், இரத்த உறைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. விமானம், கார், பேருந்து அல்லது ரயில் உட்பட வாகனத்தில் நான்கு மணிநேரத்திற்கு மேல் செலவழிக்கும் எந்தவொரு பயணியும், இரத்தக் கட்டிகளுக்கு அல்லது ஆழமான நரம்பு இரத்த உறைவுக்கு (DVT) ஆளாக நேரிடலாம்.டெய்லி 'இத்தனை' மணி நேரத்திற்கு மேல உட்கார்ந்து இருக்கீங்களா? அப்ப  உங்களுக்கு இந்த ஆபத்து காத்திருக்கிறதாம்! | What Happens To Your Body If  You Sit For Too ...

த்ரோம்போசிஸ்

த்ரோம்போசிஸ் என்பது இரத்த உறைவு என்று அழைக்கப்படுகிறது. விமானம், ஆட்டோமொபைல், பஸ் அல்லது ரயிலில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக பயணம் செய்பவர்களுக்கு இரத்த உறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. பயணத்தின் போது இது உங்கள் கால்களின் நரம்புகளில் உருவாகலாம். ஏனெனில் நீங்கள் நீண்ட நேரம் ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்திருப்பீர்கள்.

இருப்பினும், இரத்தக் கட்டியின் ஒரு பகுதி உடைந்து நுரையீரலுக்குச் செல்லும் போது ஒரு தீவிரமான சுகாதார நிலையை ஏற்படுத்தலாம். இது நுரையீரலில் பல்மோனரி எம்போலிசம் பாதிப்பை ஏற்படுத்தலாம். பல்மோனரி எம்போலிசம் என்பது நுரையீரலில் உள்ள தமனிக்கு இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் மற்றும் நிறுத்தும் ஒரு இரத்த உறைவு ஆகும்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இரத்த உறைவு காலில் ஒரு ஆழமான நரம்பு பகுதியில் தொடங்கி நுரையீரலுக்கு செல்கிறது. அரிதாக, உடலின் மற்றொரு பகுதியில் ஒரு நரம்பில் உறைவு உருவாகிறது. இந்த நிலை உயிருக்கு ஆபத்தானது. நல்ல செய்தி என்னவென்றால், பயணத்தின் போது நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும் சமயங்களில் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், இரத்த உறைவு அபாயத்தைக் குறைக்கவும் நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆபத்து காரணிகள்

சில உடல்நல காரணிகள் இரத்த உறைவுக்கான உங்கள் ஆபத்தை அதிகரிக்கலாம். பெரும்பாலான மக்களுக்கு இரத்தக் கட்டிகளை உருவாக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆபத்து காரணிகள் உள்ளன. அவை என்னென்ன என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • உடல் பருமன்
  • முதுமை (40 வயதிற்குப் பிறகு ஆபத்து அதிகரிக்கிறது)
  • சமீபத்திய அறுவை சிகிச்சை அல்லது காயம் (3 மாதங்களுக்குள்)
  • ஈஸ்ட்ரோஜன் கொண்ட கருத்தடைகளைப் பயன்படுத்துதல்.
  • ஹார்மோன் மாற்று சிகிச்சை (மாதவிடாய் நிறுத்தத்தின் விளைவுகளை குறைக்க ஹார்மோன்கள் வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை)
  • கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய காலம் (பிரசவத்திற்குப் பிறகு 3 மாதங்கள் வரை)
  • முந்தைய இரத்த உறைவு அல்லது இரத்தக் கட்டிகளின் குடும்ப வரலாறு
  • செயலில் உள்ள புற்றுநோய் அல்லது சமீபத்திய புற்றுநோய் சிகிச்சை
  • வீங்கிய மற்றும் வலிக்கிற நரம்புகள்

அறிகுறிகளை அறிதல்

ஆழமான நரம்பு இரத்த உறைவு (DVT) என்பது ஒரு ஆழமான நரம்பில் இரத்த உறைவு உருவாகும்போது ஏற்படும் ஒரு சுகாதார நிலை. இந்த கட்டிகள் பொதுவாக கீழ் கால், தொடை அல்லது இடுப்பு பகுதியில் உருவாகின்றன. சில சமயங்களில் அவை கைகளிலும் ஏற்படலாம். இந்த பிரச்சனை உள்ளவர்களில் 50% பேருக்கு எந்த அறிகுறிகளும் ஏற்படுவதில்லை. உடலின் பாதிக்கப்பட்ட பகுதியில் (கால்/கை/நுரையீரல்) ஏற்படும் இரத்தக் கட்டிகளின் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு.

  • கால் அல்லது கை வீக்கம்
  • நீங்கள் விளக்க முடியாத வலி அல்லது மென்மை
  • மூச்சுத்திணறல் ஏற்படுவது

எவ்வாறு பாதுகாப்பது

உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது மற்றும் உட்கார்ந்திருக்கும் நேரங்களில் இரத்த உறைவு ஏற்படும் அபாயத்தை எவ்வாறு குறைப்பது என்று நீங்கள் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டும். நீண்ட நேர பயணங்களின்போது உங்கள் கால்களை அடிக்கடி நகர்த்தவும் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உங்கள் தசைகளுக்கு உடற்பயிற்சி செய்யவும் வேண்டும்.

நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால், உங்கள் கால்களை நீட்டி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஒரு முழங்காலை மார்பை நோக்கி இழுத்து, 15 விநாடிகள் உங்கள் கீழ் காலில் கைகளால் பிடித்துக் கொள்ளுங்கள். நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும் நேரங்களில் இதை 10 முறை வரை மீண்டும் செய்வது உங்கள் கால்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

நீங்கள் ஆபத்தில் இருந்தால், இரத்தக் கட்டிகளை எவ்வாறு தடுப்பது என்பது பற்றி மேலும் அறிய உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள். உதாரணமாக, சுருக்க காலுறைகளை அணிவது சிலருக்கு உதவக்கூடும். தினமும் 30 நிமிடம் குறைந்தபட்ச உடல் செயல்பாடுகளை செய்வது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

Related Post

சர்க்கரை நோயாளிகள்.. பேரீச்சம் பழம் சாப்பிடலாமா.. பேரீச்சம்பழம் சாப்பிட்டால் என்னாகும்? அட ஆச்சரியம்

Posted by - December 5, 2023 0
சென்னை: சர்க்கரை நோயாளிகள் இனிப்பு நிறைந்த பேரீச்சம் பழம் சாப்பிடலாமா? இந்த பழத்தை சாப்பிட்டால் என்னாகும்? தித்திப்பு நிறைந்த பழம் என்பதால், நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம் பழம்…

சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: பாமக, நாதக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு

Posted by - January 3, 2026 0
சென்னை: சம வேலைக்கு சம ஊதி​யம் கோரிக்​கையை முன்​வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில் சென்​னை​யில் டிச.26 முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. 8-வது…

இறுதி மூச்சு வரை ஸ்டாலின் தான் முதல்வர்.. நாக்கை நீட்டி வாக்கு சொன்ன அமைச்சரால் சிரிப்பலை

Posted by - December 17, 2022 0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் நிரந்தர முதலமைச்சர் என்றும், அவர் இறுதி மூச்சுவரை முதலமைச்சராக இருப்பார் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். இறுதி மூச்சு உள்ள வரை…

இனியும் பெண் கொடுக்க தயங்குவீர்களா…! ஒரே நாளில் ரூ.4 லட்சத்திற்கு தக்காளி விற்பனை செய்த விவசாயி

Posted by - August 2, 2023 0
திருப்பூர்: தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாகவே தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் தக்காளி விலை உயர்ந்து வருவதால், நடுத்தர…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு

Posted by - November 29, 2022 0
துணை ராணுவப் படை வீரர் குருமூர்த்தி குடும்பத்திருக்கு பாதுகாப்பு கோரி சந்திப்பு. தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாகவும் ஆளுநர் ரவியுடன் அண்ணாமலை பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *