டெய்லி ‘இத்தனை’ மணி நேரத்திற்கு மேல உட்கார்ந்து இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்து காத்திருக்கிறதாம்!

200 0

இன்றைய நாளில் பெரும்பலான மக்கள் உட்கார்ந்த வாழ்க்கை முறையை கொண்டிருக்கிறார்கள். நீண்ட நேரம் உட்கார்ந்து செய்யும் வேலை மற்றும் வாழ்க்கை முறையால் ஆபத்தான சுகாதார நிலைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால், இரத்த உறைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. விமானம், கார், பேருந்து அல்லது ரயில் உட்பட வாகனத்தில் நான்கு மணிநேரத்திற்கு மேல் செலவழிக்கும் எந்தவொரு பயணியும், இரத்தக் கட்டிகளுக்கு அல்லது ஆழமான நரம்பு இரத்த உறைவுக்கு (DVT) ஆளாக நேரிடலாம்.டெய்லி 'இத்தனை' மணி நேரத்திற்கு மேல உட்கார்ந்து இருக்கீங்களா? அப்ப  உங்களுக்கு இந்த ஆபத்து காத்திருக்கிறதாம்! | What Happens To Your Body If  You Sit For Too ...

த்ரோம்போசிஸ்

த்ரோம்போசிஸ் என்பது இரத்த உறைவு என்று அழைக்கப்படுகிறது. விமானம், ஆட்டோமொபைல், பஸ் அல்லது ரயிலில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக பயணம் செய்பவர்களுக்கு இரத்த உறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. பயணத்தின் போது இது உங்கள் கால்களின் நரம்புகளில் உருவாகலாம். ஏனெனில் நீங்கள் நீண்ட நேரம் ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்திருப்பீர்கள்.

இருப்பினும், இரத்தக் கட்டியின் ஒரு பகுதி உடைந்து நுரையீரலுக்குச் செல்லும் போது ஒரு தீவிரமான சுகாதார நிலையை ஏற்படுத்தலாம். இது நுரையீரலில் பல்மோனரி எம்போலிசம் பாதிப்பை ஏற்படுத்தலாம். பல்மோனரி எம்போலிசம் என்பது நுரையீரலில் உள்ள தமனிக்கு இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் மற்றும் நிறுத்தும் ஒரு இரத்த உறைவு ஆகும்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இரத்த உறைவு காலில் ஒரு ஆழமான நரம்பு பகுதியில் தொடங்கி நுரையீரலுக்கு செல்கிறது. அரிதாக, உடலின் மற்றொரு பகுதியில் ஒரு நரம்பில் உறைவு உருவாகிறது. இந்த நிலை உயிருக்கு ஆபத்தானது. நல்ல செய்தி என்னவென்றால், பயணத்தின் போது நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும் சமயங்களில் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், இரத்த உறைவு அபாயத்தைக் குறைக்கவும் நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆபத்து காரணிகள்

சில உடல்நல காரணிகள் இரத்த உறைவுக்கான உங்கள் ஆபத்தை அதிகரிக்கலாம். பெரும்பாலான மக்களுக்கு இரத்தக் கட்டிகளை உருவாக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆபத்து காரணிகள் உள்ளன. அவை என்னென்ன என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • உடல் பருமன்
  • முதுமை (40 வயதிற்குப் பிறகு ஆபத்து அதிகரிக்கிறது)
  • சமீபத்திய அறுவை சிகிச்சை அல்லது காயம் (3 மாதங்களுக்குள்)
  • ஈஸ்ட்ரோஜன் கொண்ட கருத்தடைகளைப் பயன்படுத்துதல்.
  • ஹார்மோன் மாற்று சிகிச்சை (மாதவிடாய் நிறுத்தத்தின் விளைவுகளை குறைக்க ஹார்மோன்கள் வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை)
  • கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய காலம் (பிரசவத்திற்குப் பிறகு 3 மாதங்கள் வரை)
  • முந்தைய இரத்த உறைவு அல்லது இரத்தக் கட்டிகளின் குடும்ப வரலாறு
  • செயலில் உள்ள புற்றுநோய் அல்லது சமீபத்திய புற்றுநோய் சிகிச்சை
  • வீங்கிய மற்றும் வலிக்கிற நரம்புகள்

அறிகுறிகளை அறிதல்

ஆழமான நரம்பு இரத்த உறைவு (DVT) என்பது ஒரு ஆழமான நரம்பில் இரத்த உறைவு உருவாகும்போது ஏற்படும் ஒரு சுகாதார நிலை. இந்த கட்டிகள் பொதுவாக கீழ் கால், தொடை அல்லது இடுப்பு பகுதியில் உருவாகின்றன. சில சமயங்களில் அவை கைகளிலும் ஏற்படலாம். இந்த பிரச்சனை உள்ளவர்களில் 50% பேருக்கு எந்த அறிகுறிகளும் ஏற்படுவதில்லை. உடலின் பாதிக்கப்பட்ட பகுதியில் (கால்/கை/நுரையீரல்) ஏற்படும் இரத்தக் கட்டிகளின் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு.

  • கால் அல்லது கை வீக்கம்
  • நீங்கள் விளக்க முடியாத வலி அல்லது மென்மை
  • மூச்சுத்திணறல் ஏற்படுவது

எவ்வாறு பாதுகாப்பது

உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது மற்றும் உட்கார்ந்திருக்கும் நேரங்களில் இரத்த உறைவு ஏற்படும் அபாயத்தை எவ்வாறு குறைப்பது என்று நீங்கள் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டும். நீண்ட நேர பயணங்களின்போது உங்கள் கால்களை அடிக்கடி நகர்த்தவும் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உங்கள் தசைகளுக்கு உடற்பயிற்சி செய்யவும் வேண்டும்.

நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால், உங்கள் கால்களை நீட்டி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஒரு முழங்காலை மார்பை நோக்கி இழுத்து, 15 விநாடிகள் உங்கள் கீழ் காலில் கைகளால் பிடித்துக் கொள்ளுங்கள். நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும் நேரங்களில் இதை 10 முறை வரை மீண்டும் செய்வது உங்கள் கால்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

நீங்கள் ஆபத்தில் இருந்தால், இரத்தக் கட்டிகளை எவ்வாறு தடுப்பது என்பது பற்றி மேலும் அறிய உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள். உதாரணமாக, சுருக்க காலுறைகளை அணிவது சிலருக்கு உதவக்கூடும். தினமும் 30 நிமிடம் குறைந்தபட்ச உடல் செயல்பாடுகளை செய்வது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

Related Post

அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு – அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?

Posted by - May 27, 2025 0
#TNBJP #ANNAMALAI #MODI #TNPOLITICS #AIADMK #DMK #BJP #INDIA #CONGRESS #PIXELTV #PIXELMEDIA சென்னை திருவான்மியூரில் நடந்த பாஜக கருத்தரங்கிற்காக வைக்கப்பட்ட பேனர்களில் அண்ணாமலையின் படம்…

அதிகாலை வந்த பரபர அலர்ட்.. அடுத்த 3 மணி நேரம் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை!

Posted by - December 25, 2023 0
சென்னை: கிறிஸ்துமஸ் நாளான இன்று அடுத்த 3 மணி நேரத்திற்குச் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென்கிழக்கு பருவமழை…

‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரி 18-வது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் 1,000 பேர் கைது

Posted by - January 13, 2026 0
சென்னை: சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்க வலி​யுறுத்தி சென்​னை​யில் நேற்று 18-வது நாளாக போராட்​டத்​தில் ஈடு​பட்ட 1,000-க்​கும் மேற்​பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்​யப்​பட்​டனர். தமிழகத்​தில் கடந்த…

“தாய் மற்றும் மகள்களை ஆபாச வீடியோ எடுத்த கொத்தனார்” – தொடர்ந்து பாலியல் சைகை காட்டி டார்ச்சர்.. கைது செய்யப்பட்ட காமக்கொடூரன்!

Posted by - November 22, 2025 0
கன்னியாகுமரி மாவட்டம், மொட்டவிளை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் அதே பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களுக்கு…

“கமல்ஹாசன் அரசியல்வாதியே இல்லை… அவர் ஒரு பச்சோந்தி!” – ஈ.பி.எஸ். விமர்சனம்

Posted by - December 9, 2023 0
பச்சோந்தியை விட விரைவாக நிறம் மாறும் தலைவர் கமல்ஹாசன் – எடப்பாடி பழனிசாமி நடிகர் கமல்ஹாசனை அரசியல்வாதியாகவே தான் கருதவில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *