சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: பாமக, நாதக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு

88 0

சென்னை: சம வேலைக்கு சம ஊதி​யம் கோரிக்​கையை முன்​வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில் சென்​னை​யில் டிச.26 முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது.

8-வது நாளாக ஆசிரியர்கள் குடும்​பத்​தினருடன், சென்னை ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே சாலை​யில் அமர்ந்து நேற்று போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அவர்​களை போலீ​ஸார் கைது செய்​த​போது ஏற்​பட்ட தள்​ளு​முள்​ளு​வில் சிலருக்கு காயம் ஏற்​பட்​டது.

போராட்​டம் குறித்து எஸ்​எஸ்​ டிஏ பொதுச்​செய​லா​ளர் ஜே.​ராபர்ட் கூறும்​போது, ‘‘ஒற்றை கோரிக்​கையை வலி​யுறுத்தி போராடி வரு​கிறோம். கடந்த தேர்​தலின்​போது எங்​கள் கோரிக்​கையை ஏற்ற திமுக, அதை தேர்​தல் வாக்​குறு​தி​யாக​வும் அறி​வித்​தது.

ஆனால், இது​வரை நிறைவேற்​ற​வில்​லை. ஊதிய முரண்​பாடு களை​யப்​ப​டா​விட்​டால், பள்​ளி​கள் திறந்​த ​பிறகும் போராட்​டம் தொடரும். தமிழக

அரசு எங்​களை அழைத்துப் பேசி கோரிக்​கையை நிறைவேற்ற வேண்​டும்’’ என்​றார்.

இதற்​கிடையே இடைநிலை ஆசிரியர் மீதான கைது நடவடிக்​கை​யைக் கண்​டித்​துள்​ளதோடு, அவர்​களது கோரிக்​கையை நிறைவேற்ற வேண்​டும் என பாமக தலை​வர் அன்​புமணி, நாம் தமிழர் ஒருங்​கிணைப்​பாளர் சீமான் மற்​றும் தமிழ்​நாடு உயர்​நிலை, மேல்​நிலைப்​பள்ளி பட்​ட​தாரி ஆசிரியர் கழகத்​தின் நிறு​வனர் அ.மாய​வன், தமிழ்​நாடு மேல்​நிலைப்​பள்ளி தொழிற்​கல்வி ஆசிரியர் கழகத்​தின் தலை​வர் செ.​நா.ஜ​னார்த்​தனன் உள்​ளிட்​டோர்​ வலி​யுறுத்​தி​யுள்​ளனர்​.

Related Post

மக்களே எச்சரிக்கை..! அதிகரிக்கும் மர்ம காய்ச்சல்… இது கொரோனா வேரியன்டா?…

Posted by - March 6, 2023 0
H3N2 influenza Virus | வேகமாகப் பரவி வரும் H3N2 இன்ஃப்ளூயன்ஸாவிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள, கூட்டத்தைத் தவிர்ப்பது மற்றும் கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற சில…

பெண் தோழியுடன் தொடர்ந்த பழக்கம்… வழக்கறிஞரை கும்பலுடன் வந்து தாக்கிய கணவர் – நடந்தது என்ன?!

Posted by - August 7, 2023 0
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் செந்தில் குமார். இவர் சட்டப் படிப்பு படித்தபோது உடன் பயின்ற மதுரையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இவருக்கும் நீண்ட நாள்…

நோயெதிர்ப்பு சக்தி பலவீனமா இருக்கா? மழை வந்தாலே சளி பிடிக்குதா? அப்ப இந்த டீயை அடிக்கடி செஞ்சு குடிங்க..

Posted by - November 30, 2023 0
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. என்ன தான் சூரியன் கண்ணில் தென்பட்டாலும், திடீரென்று காலநிலை மாறி கன மழையும் பெய்து வருகிறது.…

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம்

Posted by - January 6, 2026 0
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும். இதனை எதிர்த்த மேல் முறையீட்டு மனுக்கள் முடித்து…

“பாஜக அரசுக்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர்கள் என்றால் வெறுப்பு“ – கடுமையாக விமர்சித்த முதல்வர்

Posted by - June 19, 2025 0
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கீழடி விவகாரத்தில் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். கடிதத்தின் விவரங்களை காணலாம். திமுக தலைவர் ஸ்டாலின்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *