தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் இதுவா? தேர்தலில் மெர்சல் காட்ட விஜய் மாஸ்டர் ப்ளான்!

254 0

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்டோ சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தை அணுக அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு உள்ளது. ஆனால், 2025 பிறந்தது முதலே அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக, தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டுமொத்த நாடுமே உற்று நோக்கியுள்ளது. திமுக – அதிமுக என்ற இரு பெரும் கட்சிகளுக்கும் போட்டியாக இந்த முறை தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கியுள்ளது.

தவெக-வின் சின்னம் எது?

இதனால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தை பூத் கமிட்டி முதல் தலைமை நிர்வாகிகள் வரை வலுப்படுத்தி வருகிறார். விஜய் என்ற மிகப்பெரிய அஸ்திவாரம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இருந்தாலும், அக்கட்சிக்கு மக்கள் வாக்களிக்க சின்னம் மிகப்பெரிய அடையாளம் ஆகும்.

விஜய்க்கு நிகரான சக்தியாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு இருக்கப்போவது அந்த சின்னமே. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆட்டோ சின்னத்தை குறிவைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஆட்டோ, அகல் விளக்கு மற்றும் நட்சத்திரம் ஆகிய 3 சின்னங்களை அனுப்பி அதில் முதன்மை சின்னமாக ஆட்டோ சின்னத்தை தருமாறு தேர்தல் ஆணையத்தை அணுக தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆட்டோவை குறிவைத்தது ஏன்?

தமிழக வெற்றிக் கழகம் ஆட்டோ சின்னத்தை தேர்வு செய்வதற்கு முதன்மை காரணம் ஆட்டோ என்பது சாமானிய மக்களின் அடையாளங்களில் ஒன்றாகவே திகழ்கிறது. நடிகர் விஜய் வேட்டைக்காரன் படத்தில் ஆட்டோ ஓட்டுநராகவும் நடித்தார். ரஜினிகாந்த் பாட்ஷா படத்தில் ஆட்டோ ஓட்டுநராக நடித்த பிறகு ஆட்டோ ஓட்டுனர்களின் செல்வாக்கு தமிழ்நாட்டில் பன்மடங்கு அதிகரித்தது.

வேட்டைக்காரன் படம் பெரியளவு வெற்றி பெறாவிட்டாலும் ரஜினியைப் போலவே ஆட்டோக்களில் இடம்பெறும் அளவிற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் விஜய்யின் செல்வாக்கு அதிகரித்தது. இந்த காரணத்தாலும் சாமானிய மக்களின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் ஆட்டோவை விஜய் குறிவைத்திருப்பதாக கூறப்படுகிறது.

சின்னத்தை விளம்பரப்படுத்த உத்தரவு:

இந்த சின்னம் உறுதியானால் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள விஜய்யின் கடைசி படத்திலும் அந்த சின்னம் தொடர்பான காட்சிகள் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள விஜய், சின்னம் உறுதி செய்யப்பட்ட பிறகு தனது சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் உத்தரவிட உள்ளார். இதற்கான பணிகள் ஏற்கனவே ஒவ்வொரு மாவட்ட தலைமைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி கணக்கில் விஜய்:

கட்சியின் சின்னமே ஒரு கட்சியின் செல்வாக்கை மட்டுமின்றி அதன் அங்கீகாரத்தையும் உறுதிசெய்யும். இதனால், சின்னம் விவகாரத்தில் மிகவும் கவனமாக தமிழக வெற்றிக்கழகம் செயல்பட்டு வருகிறது.

தனது கடைசி படமான ஜனநாயகன் முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. விரைவில் சுற்றுப்பயணத்தில் இறங்க உள்ள விஜய் தற்போது கூட்டணிக்கான நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

 

Related Post

வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை

Posted by - January 13, 2024 0
சென்னை: தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பொங்கல் பண்டிகையானது வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று முதல் 5 நாட்களுக்கு…

திருப்பூர் உட்பட 16 நகரங்களில் இன்று முதல் ஜியோ 5 ஜி சேவை தொடக்கம் – 134 நகரங்களில் 5 ஜி அளித்து சாதனை

Posted by - January 19, 2023 0
Jio 5G in Tiruppur : ஜியோ 5ஜி தமிழ்நாட்டின் திருப்பூர் உட்பட 16 நகரங்களில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. அதிவேக ஜியோ 5 ஜி இணையச் சேவை…

“அதிமுக வரலாறு அண்ணாமலைக்கு தெரியாது.. அரசியலில் பக்குவப்படவில்லை” – கடம்பூர் ராஜூ விமர்சனம்

Posted by - March 8, 2023 0
ஒன்றிய அரசு என்று கூறும் திமுகவிற்கு எதிராக பேசி தான் வருகிறார் தவிர எந்த எதிர்வினையும் அவர் ஆற்றவில்லை என கடம்பூர் ராஜூ கேள்வி தானாக விரும்பி…

சூரி முதல் விஜயபாஸ்கர் வரை.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமாடிய விஐபிக்களின் காளைகள்…!

Posted by - January 18, 2023 0
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமிறங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சூரி உள்ளிட்டோரின் காளைகள் வெற்றிபெற்றன. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.…

பல்வேறு இடங்களில் கைவரிசை- காதலனுடன் ஜாலியாக இருக்க கொள்ளையடித்த இளம் பெண்

Posted by - August 15, 2023 0
கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே புது வள்ளியாம்பாளையம் பிரிவை சேர்ந்தவர் ஜோதி வெங்கட்ராமன்.விரதம் மனைவி கோமதி. இவர்கள் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகின்றனர்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *