திருப்பூர் உட்பட 16 நகரங்களில் இன்று முதல் ஜியோ 5 ஜி சேவை தொடக்கம் – 134 நகரங்களில் 5 ஜி அளித்து சாதனை

226 0

Jio 5G in Tiruppur : ஜியோ 5ஜி தமிழ்நாட்டின் திருப்பூர் உட்பட 16 நகரங்களில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

அதிவேக ஜியோ 5 ஜி இணையச் சேவை இன்று தமிழ்நாட்டின் திருப்பூர் உட்பட 16 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்தியாவில் மொத்தம் 134 நகரங்களில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது. அண்மையில், தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி உட்பட 6 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் அதிவேக சேவையை வழங்கும் ஜியோ நிறுவனம் இன்று (ஜனவரி 17) 7 மாநிலத்தில் 16 புதிய நகரங்களில் ட்ரு 5ஜி சேவையைத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் திருப்பூர், ஆந்திரா மாநிலத்தில் காக்கிநாடா, கர்னூல் நகரங்களில், அசாமில் சில்சார் நகரத்தில், கர்நாடக மாநிலத்தில் ஷிவமொக்கா, தாவணகெரே, ஹோஸ்பேட், பிதார், கடக்-பேத்தகிரி ஆகிய நகரங்களிலும், கேரளாவில் கன்னூர், கொட்டயம், பாலக்காடு நகரங்களிலும், தெலுங்கானாவில் கம்மம், நிஜாமாபாத், உத்தரப்பிரதேசத்தில் பரேலி ஆகிய நகரங்களில் இன்று ஜியோ 5 ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதனுடன் மொத்தம் 134 நகரங்களில் சேவையைத் தொடங்கி அதிக நகரங்களில் 5ஜி சேவையை வழங்குகின்ற ஒரே நிறுவனமாக ஜியோ உருவெடுத்துள்ளது. மேலும் இந்த நகரங்களிலுக்கு Jio’s Welcome Offer அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப்பரில் வாடிக்கையாளர்கள் 1 Gbps வேகத்தில் அளவற்ற இணையச் சேவையை அனுப்பவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோவில் 5 ஜி சேவை வழங்கப்படும் நகரங்களில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்களுக்கு Jio’s Welcome Offer பெறுவதற்கான இணைப்பு அனுப்பப்படும். அதன் மூலம் ரூ.239 திட்டம் அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 1 Gbps வேகத்தில் அளவற்ற 5ஜி சேவை எந்தவித கூடுதல் கட்டணமின்றி வழங்கப்படும்.

ஜியோவின் அதிவேக இணையச் சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் இ-கவர்ணஸ், கல்வி, அட்டோமொபைல், ஏஐ, இணைய விளையாட்டு, உடல்நலம், விவசாயம், ஐடி போன்ற பகுதிகளில் உள்ள வாய்ப்புகளினால் பயன்பெற்று வளர்ச்சி அடைய முடியும்.

மேலும் இது குறித்து ஜியோ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஜியோ 5 ஜி சேவையைத் துரிதமாக வளர்ச்சியடைய உறுதுணையாக இருந்த மாநிலங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 700 MHz,3500 MHz மற்றும் 26 GHz பேண்ட்களில் ஜியோ 5ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்கு 700 MHz பேண்டில் sub-GHz spectrum வழங்கும் ஒரே நிறுவனமாக ஜியோ செயல்படுகிறது.

Related Post

எருமைமாட்டுக்கு சேலை கட்டின மாதிரி இருக்கு.. மோசமாக பேசிய ஜனனிக்கு ரச்சிதாவின் கணவர் பதிலடி

Posted by - November 30, 2022 0
ரச்சிதாவை விமர்சித்த ஜனனி விஜய் டிவி சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் ரச்சிதா பிக் பாஸ் ஆறாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். அவர் இதற்கு முன்பு சீரியல்களில் நடிக்கும் போது…

பால் உற்பத்தியாளரை ஒருமையில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ்!

Posted by - November 22, 2025 0
பால் உற்பத்தியாளரை அமைச்சர் மனோ தங்கராஜ் தொலைத்து விடுவேன் என மரியாதை குறைவாகப் பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பாண்டியராஜபுரம்…

வலுவிழந்த மாண்டஸ் புயல்… கரையை கடக்கும் போது சீறுமா..?

Posted by - December 9, 2022 0
Cyclone Mandous | வங்கக் கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் தீவிர புயலிலிருந்து புயலாக வலுவிழந்து உள்ளது. மாண்டஸ் தீவிர புயல் இன்று காலை வலுவிழந்து தற்போது சென்னையில் தெற்கு கிழக்கு…

போதையால் சீரழிந்த THALAPATHY VIJAY-உடன் நடித்த நண்பன் போதையால் உள்ளே தள்ளிய போலீஸ் – நடந்தது என்ன?

Posted by - June 23, 2025 0
போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக நடிகர் ஸ்ரீகாந்த் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மதுபான விடுதியில் மோதல்…

இந்த ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

Posted by - January 27, 2024 0
சிவகங்கை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு, வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *