திமுக கவுன்சிலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது…!!

369 0

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக கவுன்சிலர் போக்சோ சட்டத்தின்  கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுக நகரமன்ற உறுப்பினர்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பக்கிரிசாமி என்பவர் திமுக நகரமன்ற உறுப்பினராக உள்ளார்.  மேலும், சக்தி நகரில் உள்ள வைத்தியலிங்கா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் தாளாளருமாக இருந்தும் வருகிறார். இவர் இப்பள்ளியில் யூகேஜி படிக்கும் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த கொடூரனின் செயலால் பாதிக்கப்பட்டதை சிறுமி  அவரது பெற்றொரிடம் கூறியுள்ளார்.

தொடர் அலட்சியம்:

இது தொடர்பாக புகார் அளித்தும் பக்கிரிசாமி மீது வழக்கு பதிவு செய்யாமல் மகளிர் போலீசார் அலட்சியம் காட்டி வந்த நிலையில் இந்த விவகாரம் சட்டமன்றத்தில் பூதாகரமாக வெடித்தது.  இதன் தொடர்ச்சியாக திமுக கவுன்சிலர் பக்கிரிசாமியை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.  ஆனால் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்பட்டவில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டிய நிலையில்  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் மாஜி திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி.

சிறையில்:

இதனிடையே பக்கிரிசாமியை  காவல் நிலையத்தில் வைத்து  விசாரிக்காமல்  தனியார் சொகுசு மண்டபத்தில்  வைத்து போலீசார் விசாரணை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விருத்தாசலத்தில் இருந்து அழைத்து சென்று கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய  போலீசார்  பின்னர் நீதிபதி  உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

Related Post

சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட உள்ள 2 முக்கிய தீர்மானங்கள்

Posted by - February 14, 2024 0
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை எதிர்த்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக…

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பு: தக்காளி கிலோ ரூ.30 ஆக சரிவு

Posted by - August 21, 2023 0
போரூர்: தமிழகத்தில் கடந்த மாதம் தக்காளியின் விலை கிலோ ரூ.200 வரை உச்சத்தில் இருந்தது. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை…

3 பேரை திருமணம் செய்து மோசடி.எஸ்கேப்.. சிக்கிய கல்யாண ராணி..!

Posted by - April 18, 2023 0
2 குழந்தைகளுக்கு தாயானவர் புதுமணப் பெண் எனக் கூறி பல திருமணங்களை செய்து மோசடி செய்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம்,…

‘உதயநிதி ஸ்டாலின் எனும் நான்..’ அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்…

Posted by - December 14, 2022 0
Udayanidhi Stalin | தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழ்நாடு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார்.…

எதிர்வீட்டு பெண்ணுடன் சண்டை.. நாய்க்குட்டிகளை கொன்ற பெண்..

Posted by - March 7, 2026 0
கடந்த ஓராண்டாகவே மீனாட்சி, புவனேஸ்வரி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வாசலில் வாகனம் நிறுத்துவது தொடங்கி, தெருவை கூட்டி சுத்தம் செய்து கோலம் போடுவது வரை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *