திமுகவுக்கு ஆதரவு… ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேச்சு! ஷாக்காகி பார்த்த விஜய்

141 0

நமது தலைவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து உங்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக சொன்னாரே எங்கள் தலைவர், உங்களுக்கு நன்றிக்கடன் இல்லையா என்று பேசியிருந்தார்.

2021 தேர்தலில் எங்கள் தலைவர் விஜய் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவுக்கு ஆதரவு என்று தவெக தேர்தல் மேலாண்மை பொது செயலாளர் பேசியது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

தவெக பொதுக்குழு:

தமிழக வெற்றி கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தனியார் விடுதியில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்து  முடிந்தது. இதில் தவெகவின் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆதவ் ஆர்ஜூனா பேச்சு:

இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூருக்கு விஜய் ஏன்  போகவில்லை என்கிற விமர்சனம் உள்ளது. அதற்கு நான் பதில் சொல்கிறேன், கரூர் காவல்துறை வினோதமான காவல்துறை. 8 நாட்களுக்கு முன்பு, அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு கொடுத்தோம். காவல்துறையை நாங்கள் நம்பியது தான் ஒரே தவறு. காவல்துறையை நம்பி தவறு செய்ததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம்.

டிஎஸ்பியை சாடிய ஆதவ்:

கரூரில் சிறப்பு வாய்ந்த டிஎஸ்பி., செல்வராஜ் உள்ளார். அவர் செந்தில் பாலாஜி தும்பினால், கட்சிப் படித்து செல்வார் அப்படிப்பட்ட ஒருவரை தான் டிஎஸ்பியாக போட்டு வைத்திருக்கிறார்கள். இருக்கட்டும் உங்கள் அப்பன் சி.பி.ஐ., வந்திருக்கிறார். சி.பி.ஐ., இந்த விவாகரத்தில் முதலமைச்சர் உட்பட அனைவரையும் விசாரிக்க வேண்டும் என்றார்.

காவல்துறை பத்திரமாக இந்த தெருவில் வாருங்கள் காவல்துறை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர். விஜய் வருவது தொடர்ந்து நேரலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. மக்களுடைய பாதுகாப்பு குறித்து தான் பேசிக் கொண்டிருக்கிறோம். திடீரென திருச்செந்தூர் கோவிலில் இருவது லட்சம் பேர் கூடினால் எப்படி முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமோ. அதேபோன்று பாதுகாப்பு ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

மக்களின் உயிரை வைத்து விளையாடாதீர்கள்

பத்து அல்லது இருவது சதவீத நிர்வாகிகள் மட்டும்தான் கூட்டத்தில் இருக்கிறார்கள் ‌. உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் உரிய பாதுகாப்பை கொடுக்க வேண்டும். என்னை கைது செய்யுங்கள், யாரை வேண்டுமென்றாலும் கைது செய்யுங்கள் ஆனால் மக்களின் உயிரை வைத்து விளையாடாதீர்கள். இதுதான் கேவலமான எண்ணம், மக்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் அதை வைத்து கட்சி இவர்கள் மீது பழி போடலாம் என செய்கிறார்கள்.

திமுகவுக்கு ஆதரவு  :

தொடர்ந்து பேசிய அவர்”உங்களிடம் பாவ மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன், எதிர்க்கட்சியாக இருந்த திமுகவுக்கு 10 ஆண்டுகள் வேலை பார்த்தற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், நமது தலைவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து உங்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக சொன்னாரே எங்கள் தலைவர், உங்களுக்கு நன்றிக்கடன் இல்லையா என்று பேசியிருந்தார்.தற்போது அவர் பேசியது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனால் 2021 தேர்தலின் போது விஜய் திமுகவுக்கு ஆதரவு கொடுத்தை ஆதவ் உறுதிப்படுத்தியதாக இணையவாசிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Post

”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்

Posted by - November 27, 2025 0
Vijay  vs Seeman: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை கடுமையாக சாடி பேசியுள்ளார். ஒரு வழக்கு போட்டதும்…

மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் – என்னென்ன?

Posted by - December 5, 2025 0
தொகுதிப் பங்கீடு குறித்து மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தமிழக காங்கிரஸ் குழு 3 நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடக்கிறது. அதற்கான…

கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!

Posted by - July 24, 2025 0
கூட்டணிக் கட்சிகளுக்குள் இருந்தே இபிஎஸ்-க்கு தொடர்ந்து அழுத்தம் வருவதால் அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான்…

திடீர் ட்விஸ்ட்.! திமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சி.!

Posted by - February 28, 2026 0
தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்து வரும் நிலையில், தற்போது எஸ்டிபிஐ கட்சியை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு திமுக…

யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? தவெக தலைவர் விஜய் கண்டனம்!

Posted by - December 30, 2025 0
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னை : திருத்தணி ரயில் சம்பவம் தமிழகத்தில் பெரும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *