நாளை முதல் SIR பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த்துறை சங்கம் அதிரடி அறிவிப்பு! காரணம் என்ன?

147 0

அதீத பணி நெருக்கடி காரணமாக SIR பணிகளை புறக்கணிப்பதாக வருவாய்த் துறை சங்கங்கள் அறிவித்துள்ளன.

SIR பணிகளை நாளை (நவம்பர் 18) முதல் புறக்கணிக்க உள்ளதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

SIR-ஐப் புறக்கணிக்கும் வருவாய்த்துறை அலுவலர்கள்

போலி, மோசடி வாக்காளர்களைக் கண்டறிந்து களையெடுக்கும் நோக்கில், SIR எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் நாடு முழுவதும் தொடங்கி உள்ளது. எனினும் இது எதிர்க் கட்சிகளின் வாக்குகளைத் திட்டமிட்டு பறிக்கும் முயற்சி என்று திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், SIR பணிகளில் ஆசிரியர்கள், வருவாய்த் துறை ஊழியர்கள், அரசு ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோர் பிஎல்ஓ எனப்படும் வாக்குச்சாவடி அலுவலர்களாக ஈடுபட்டு வருகின்றனர். SIR படிவங்களை வீடுவீடாகச் சென்று கொடுத்து, அவற்றை நிரப்பி பெறும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

வருவாய்த்துறை சங்கங்கள் அறிவிப்பு

வழக்கமான அலுவல்களுக்கு மத்தியில் இந்தப் பணிகளை மேற்கொள்வது கடினமாக இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் நாளை முதல் SIR பணிகளை புறக்கணிக்க உள்ளதாக வருவாய்த்துறை சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

உரிய திட்டமிடல், பயிற்சிகள் அளிக்காமல், கூடுதல் பணிகளைச் சுமத்தி இருப்பதாலும், நிதி ஒதுக்கீடு வழங்காமல் அவசர கதியில் SIR பணிகளைச் செய்ய நிர்ப்பந்திப்பதாலும் தங்ககளுக்கு கடுமையான பணிச் சுமை ஏற்படுவதாக குற்றச்சாட்டும் தெரிவித்துள்ளனர்.

Related Post

நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போயுள்ளது – நயினார் நாகேந்திரன்

Posted by - October 11, 2025 0
நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போய் கிடப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,   பகுஜன்…

தன்னெழுச்சியாக சேரும் தவெக – அதிமுக தொண்டர்கள்! – கனவு சிதைவதால் கலங்கும் தினகரன்

Posted by - October 10, 2025 0
கரூர் சம்பவத்தில் இத்தனை நாளும் விஜய் மீது பழி சுமத்தாமல் பொதுவாகப் பேசி வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திடீரென விஜய் மீது பாய ஆரம்பித்திருக்கிறார். கூடவே,…

“சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை, எங்கே போனார் அப்பா.?“

Posted by - July 19, 2025 0
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு திருவாரூரில் பேசியபோது, திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். ‘மக்களை…

தமிழக அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஜென்ஸீ வாக்குகள் யாருக்கு?

Posted by - April 3, 2026 0
தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், ஜென் இசெட் (Gen Z) வாக்காளர்கள் முக்கியமான தீர்மான சக்தியாக உருவெடுத்துள்ளனர். சுமார் 1 கோடியே 18 லட்சம்…

அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெறவில்லை – இபிஎஸ்

Posted by - August 22, 2025 0
அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெறவில்லை என இபிஎஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் விஜய்-க்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அவர், அதிமுக யாரிடம் இருக்கிறது என்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *