மனைவியை அடித்துக்கொன்று பிரீசரில் அடைத்த கணவர்? பரபரப்பு புகார்- போலீசார் விசாரணை

347 0

போபால்:

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தை சேர்ந்தவர் பாரத் மிஸ்ரா. இவரது மனைவி சுமித்ரி (வயது40). சுமித்ரி கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 30-ந்தேதி சுமித்ரி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு பாரத் மிஸ்ரா போன் செய்து கூறியுள்ளார்.Suggestions for making the Police Investigation more effective and  efficient with minimal scope of any lapse – Radhey Krishna Legal Aid  Foundation

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சுமித்ரியின் குடும்பத்தினர் அவரது வீட்டுக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் பாரத் மிஸ்ரா தனது மனைவியின் உடலை பிரீசரில் வைத்து விட்டாராம். இது சுமித்ரியின் குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவரது சகோதரர் அபய் திவாரி கோட்வாலி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அந்த புகாரில் தனது மைத்துனருக்கும், எனது சகோதரிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் தான் எனது சகோதரி மர்மமான முறையில் இறந்துள்ளார். உடனடியாக அவர் எனது குடும்பத்தினருக்கோ, உறவினர்களுக்கோ தகவல் தெரிவிக்காமல் தாமதமாக கூறியுள்ளார். அவர் எனது சகோதரியை அடித்து கொலை செய்திருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.

இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார். புகாரின் பேரில் போலீசார் பாரத் மிஸ்ராவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சுமித்ரி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும், அவரது இறுதி சடங்குக்காக தங்கள் மகன் மும்பையில் இருந்து திரும்ப வேண்டி இருந்ததால் மனைவியின் உடலை பிரீசரில் வைத்து இருந்ததாகவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து சுமித்ரியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். டெல்லியில் இளம்பெண் ஸ்ரத்தா உடலை அவரது காதலன் துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் அடைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதன் பிறகு சில நகரங்களில் இதே பாணியில் நடைபெற்ற கொலைகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில் அதே போல இந்த சம்பவத்திலும் சுமித்ரியை அவரது கணவர் கொன்று பிரீசலில் அடைத்து வைத்ததாக புகார் கூறப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Post

ChatGPT எப்படி நமக்கு உதவும்?ChatGPT AI – உங்கள் கையிலும் இப்போது!

Posted by - December 20, 2025 0
இன்றைய டிஜிட்டல் உலகில், Artificial Intelligence (AI) ஒரு முக்கிய கருவியாக வளர்ந்து வருகிறது. அதில் ChatGPT ஒரு பிரபலமான AI மெஷின் ஆகும். தமிழர்கள் குறிப்பாக…

2018-ல் இருந்து வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் மரணம்: மத்திய அரசு தகவல்

Posted by - December 8, 2023 0
இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாடுகளில் படித்து வருகின்றனர். உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியபோதுதான், இந்திய மாணவர்கள் இவ்வளவு எண்ணிக்கையில் படித்து வருகிறார்களா? என்பது தெரிய…

ஜெய்ப்பூரில் நில அதிர்வு- ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

Posted by - July 21, 2023 0
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை 4.09 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம்…

இமாச்சலில் கனமழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 88 பேர் உயிரிழப்பு

Posted by - July 13, 2023 0
சிம்லா: தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், அரியானா மாநிலங்களில…

ஜி20 மாநாடு எதிரொலி – பாதுகாப்பு பணியில் 1.30 லட்சம் போலீசார்

Posted by - September 8, 2023 0
புதுடெல்லி: ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப மாநாட்டு மையத்தில் செப்டம்பர் 9 மற்றும் 10…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *