ரூ.1 கோடி நஷ்டஈடு தரணும்.. அமைச்சர் மனோ தங்கராஜுக்கு நோட்டீஸ் அனுப்பிய அண்ணாமலை!

353 0

15 நாட்களில் மன்னிப்பு கேட்கவும், நஷ்ட ஈடு வழங்கவும் வலியுறுத்தியுள்ள அண்ணாமலை, தவறும் பட்சத்தில் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆவின் நிறுவனத்தில் முறைகேடு நடைபெறுவதாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.  அதற்கு செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக அண்ணாமலை செயல்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜுக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.மான நஷ்ட ஈடாக வழங்கப்படும் ஒரு கோடி ரூபாயை ஆவின் வைப்பு நிதிக்கு கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். மேலும், அமைச்சர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நோட்டீஸில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். 15 நாட்களில் மன்னிப்பு கேட்கவும், மான நஷ்ட ஈடு வழங்கவும் வலியுறுத்தியுள்ள அண்ணாமலை, தவறும் பட்சத்தில் சட்ட ரீதியாக வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Post

லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?

Posted by - July 18, 2025 0
அஜித்குமார் மரண வழக்கின் தாக்கம் குறைவதற்கு முன்பே, மயிலாடுதுறை டிஎஸ்பி உயர் அதிகாரிகள் மீது அளித்த குற்றச்சாட்டு திமுகவிற்கு பெரும் பின்னடைவை உண்டாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறையால் ஆளுங்கட்சியான…

உங்க இதயம் செயலிழக்காமல் இருக்க… மாரடைப்பு வராமல் தடுக்க… இந்த விஷயங்கள மறக்காம ஃபாலோ பண்ணுங்க!

Posted by - November 25, 2023 0
இதய செயலிழப்பு என்பது உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு முக்கியமான மருத்துவ நிலை. இது பொது சுகாதாரத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளது. உலகளவில்…

“அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு மருந்து” – விவகாரத்துக்கு விண்ணப்பித்த பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போட்ட முதல் பதிவு

Posted by - April 10, 2024 0
ஐஸ்வர்யா தனுஷ் அவருடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நடிகர் தனுஷும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் விவகரத்து கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், ஐஸ்வர்யா தனுஷ்…

தக்காளி விலையுடன் போட்டி போடும் சின்ன வெங்காயம்- கோவையில் கிலோ ரூ.180-க்கு விற்பனை

Posted by - July 10, 2023 0
கோவை: கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 5 பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறி சந்தைகள் உள்ளன. இங்கு வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து வெங்காயம், தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட…

ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் அலைந்த பரிதாபம்- ½ லிட்டர் பாலை 100 ரூபாய்க்கு விற்றனர்

Posted by - December 6, 2023 0
சென்னை: ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பெரும்பாலான இடங்களில் 3 அடி வரை மழைநீர் தேங்கியுள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *