ரெட் ஜெயின்ட் மூவிஸ் படங்களில் ‘உதயநிதி வழங்கும்’ என்ற வாசகத்தை நீக்க அறிவுறுத்தல்!

308 0

தற்போது உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்று இருப்பதால், ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிடும் படங்களின் போஸ்டர் மற்றும் விளம்பரங்களில் ரெட் ஜெயன் மூவிஸ் என்பது மட்டும் பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடும் படங்களின் விளம்பரங்களில் இனி உதயநிதி வழங்கும் என்ற வாசகம் வேண்டாம் என தயாரிப்பு நிறுவனங்களுக்கு அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உதயநிதி, கடந்த 2008-ம் ஆண்டு ரெட் ஜெயண்ட் மூவீஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன்மூலம் படங்களை தயாரிக்க தொடங்கினார். அந்த வகையில் அவர் தயாரித்த முதல் படம் குருவி. இதையடுத்து கமலின் மன்மதன் அம்பு, சூர்யா நடித்த ஆதவன் மற்றும் ஏழாம் அறிவு என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வந்தார் உதயநிதி.

இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படம் வெற்றியடைந்த பின் நடிப்பில் கவனம் செலுத்திய உதயநிதி, படங்கள் தயாரிப்பதை குறைத்துக் கொண்டார்.உதயநிதி ஸ்டாலின் நடிப்பை தாண்டி தயாரிப்பு மற்றும் சினிமா விநியோகம் ஆகியவற்றிலும் ஈடுபட்டு வந்தார்.  அவரின் ரெட் ஜெயின்ட் நிறுவன மூலம் பல திரைப்படங்களை தமிழகத்தில் வெளியிட்டு வருகிறார்.

இதுவரை ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிடும் படங்களில் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும்.  ஆனால் தற்போது உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்று இருப்பதால், ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிடும் படங்களின் போஸ்டர் மற்றும் விளம்பரங்களில் ரெட் ஜெயன் மூவிஸ் என்பது மட்டும் பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் என்ற வாசகம் நீக்கப்படுகிறது.  இனிவரும் காலங்களில் ரெட் ஜெயன் மூவிஸ் என்ற பெயர் மட்டுமே அந்நிறுவனம் வெளியிடும் படங்களின் விளம்பரங்களில் இடம்பெறும். இது சமீபத்தில் உருவாகியுள்ள செம்பி மற்றும் வாரிசு படங்களின் விளம்பரங்களில் இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.

Related Post

“மாப்பிள்ளைச் சம்பா சாப்பிட்டால், மாப்பிள்ளையாக இருக்கலாம் …” – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை!

Posted by - March 22, 2023 0
மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையாக இருக்கலாம்.! தங்க சம்பா சாப்பிட்டால் தங்கமாக இருக்கலாம் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்தார். வேளாண் நிதிநிலை தாக்கல் செய்த…

மார்கழி மாதம் கோயில்களில் தினம் தினம் பாடல்கள்: ஏன் இது முக்கியம்?

Posted by - December 20, 2025 0
மார்கழி மாதம் தமிழ் கலாச்சாரத்தில் மிகவும் புனிதமான காலம். இந்த மாதத்தில் கோயில்களில் தினமும் பக்தி பாடல்கள் ஒலிக்கின்றன. இதன் பின்னணி, நோக்கம் மற்றும் மக்களுக்கு ஏற்படும்…

TAC TV விவகாரம்: “அன்று ஹாத்வே இன்று அரசு கேபிள்” – திமுக அரசு மீது BJP தலைவர் அண்ணாமலை சாடல்

Posted by - November 23, 2022 0
திரு,அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இந்த இரண்டு நாள்கள் நமது மக்களுக்கு மீண்டும் 2006-2011 காலகட்ட கொடுங்கோல் குடும்ப ஆட்சியை நிச்சயமாக நினைவுபடுத்தியிருக்கும் தமிழ்நாடு முழுவதும் சுமார்…

நைட் பார்ட்டியில் கொக்கைன்.. சிக்கும் விஐபி நடிகர், நடிகைகள்.. வலைப்பேச்சு பிஸ்மி பேட்டி

Posted by - June 26, 2025 0
போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் ஸ்ரீகாந்த் கைதானது போன்று பல விஐபி நடிகர்கள், நடிகைகள் சிக்குவார்கள் என வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்தார். போதை பொருள் பயன்படுத்திய வழக்கில்…

அர்த்த மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இளையராஜா – விளக்கம் அளித்த ஆண்டாள் கோயில் நிர்வாகம்!

Posted by - December 16, 2024 0
அதைத் தொடர்ந்து அர்த்த மண்டப நுழைவு வாயிலில் வைத்து இளையராஜாவிற்கு மரியாதை அளித்தனர். அதன்பின் இளையராஜா வெளியே வந்து நின்று சாமி தரிசனம் செய்தார். மேலும் “திவ்ய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *