நைட் பார்ட்டியில் கொக்கைன்.. சிக்கும் விஐபி நடிகர், நடிகைகள்.. வலைப்பேச்சு பிஸ்மி பேட்டி

226 0

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் ஸ்ரீகாந்த் கைதானது போன்று பல விஐபி நடிகர்கள், நடிகைகள் சிக்குவார்கள் என வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்தார்.

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவைர தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது ரத்த மாதிரி சோதனையில் போதை பொருள் உட்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ள நிலையில், போதை பொருள் விவகாரத்தில் விஐபி நடிகர்களும் சிக்குவார்கள் என சினிமா விமர்சகர் மற்றும் பத்திரிகையாளரான வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவில் போதை பொருள்

போதை பொருள் சம்பவம் தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த பிஸ்மி, சினிமாவில் முன்பை விட தற்போது போதை கலாச்சாரம் அதிகரித்து சீரழிந்து கிடக்கிறது. குறிப்பாக தமிழ், தெலுங்கு, மளையாள சினிமாக்களை காட்டிலும், பாலிவுட்டில் தான் போதை கலாச்சாரம் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு ஒரு முடிவு இல்லாத தொடர்கதையாக நீள்கிறது. இதை யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை வெளிப்படையாக அவர்களது பெயரை சொல்ல முடியாது. ஆனால், நாம் பார்த்து வியந்து போன நடிகர்கள் பலர் போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் கூறுவதை ஏற்க முடியாது

நடிகர் ஸ்ரீகாந்த் கொடுத்த வாக்குமூலத்தில் மன அழுத்தம், குடும்ப பிரச்னையால் போதை பொருளை பயன்படுத்தினேன் என்று கூறியுள்ளார். நான் விசாரித்த வரையில் ஸ்ரீகாந்த் மென்மையான மனிதர். அவர் நல்லவராகத்தான் இருந்திருக்கிறார். பட வாய்ப்புகள் குறையவும், குடும்பத்தில் பிரச்னை இதனை சமாளிக்க முடியாமல் போதை பொருள் பயன்படுத்தியிருப்பது தெரிகிறது. ஆனால், இங்கு யாருக்குத்தான் பிரச்னை இல்லை. நாள்தோறும் பல பிரச்னைகளோடுதான் மனிதர்கள் போராடுகிறார்கள். அவர்கள் நினைத்தால் கெட்ட வழிக்கு செல்லலாம். மன அழுத்தத்தால் போதை எடுத்துக்கொண்டேன் என்பதை ஏற்க முடியாது. அது சரியான வழியும் இல்லை என பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.

விஐபி நடிகர்கள், நடிகைகள்

ஒரு நடிகரின் படத்தின் வெற்றி விழா அல்லது பிறந்தநாள் பார்ட்டியில் இதுபோன்ற போதை பொருள் கிடைக்கும். ஆனால், இப்போது விலை உயர்ந்த போதை வஸ்தான கொக்கைன் போன்ற பொருட்களையும் நடிகர்கள் பயன்படுத்துவதாக எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரிவிக்கிறேன் என பிஸ்மி கூறியுள்ளார். மேலும், அதிமுகவை சேர்ந்த பிரகாஷ் கைது செய்யப்பட்ட பிறகுதான் இந்த விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது. அவர் அரசியல் பின்புலத்தில் இருப்பதால் இதுவும் அம்பலமாகியிருக்கிறது. இல்லையென்றால் அப்படி ஒரு விஷயமே நடந்தது போன்ற சுவடே இல்லாமல் போயிருக்கும். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் அரசியல் லாபத்திற்காக அல்லாமல் நேர்மையாக விசாரிப்பது நல்லது.

நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து கிருஷ்ணாவும் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த போதை பொருள் விவகாரத்தில் இன்னும் பல விஐபி நடிகர்கள், நடிகைகளும் சிக்குவார்கள் என பிஸ்மி தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் அரசியல் பழிவாங்கல் என்றே கூற முடியும்.

Related Post

மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் – அரசு அறிவிப்பு

Posted by - March 11, 2025 0
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் சுய உதவிக்குழு பெண்கள் இனி, லக்கேஜ்களுடனும் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுய உதவிக்குழு பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை எளிதாக சந்தைப்படுத்தும்…

சனி சஷ யோகம்: 2025-ல் பண வரவு முதல் புதிய வேலைவாய்ப்பு வரை.. அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்!

Posted by - November 12, 2024 0
சனி தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருக்கிறார். இது சஷ ராஜயோகத்தை உண்டாக்கும். இந்த காலம் மூன்று ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். வேத ஜோதிடத்தில்,…

பொன்முடி வழக்கில் திருப்பம் – தண்டனையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.. விவரம்!!

Posted by - March 11, 2024 0
தண்டனை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் பொன்முடி மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக வாய்ப்புள்ளது. மீண்டும் எம்எல்ஏ ஆவதால் அமைச்சர் ஆவதற்கும் பொன்முடிக்கு தடையில்லை..   சொத்துக்குவிப்பு வழக்கில்…

அமராவதி ஆற்றுப்படுகையை பாலைவனமாக்கும் கேரள அரசின் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்! – டிடிவி தினகரன்

Posted by - May 20, 2024 0
கேரள அரசால் கட்டப்படும் புதிய அணையால் திருப்பூர், கரூரில் விவசாயம் மட்டுமல்லாது குடிநீர் பஞ்சமும் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.கர்நாடகாவை தொடர்ந்து கேரளாவிடமும் தமிழகத்தின் உரிமையும், விவசாயிகளின்…

ஏங்க முருகன் உங்க கனவுல வந்து மாநாடு நடத்த சொன்னாரா..? – சீமான் விளாசல்..!!

Posted by - August 13, 2024 0
உண்மையிலேயே முருகனுக்கு மாநாடு நடத்துகிறீர்களா அல்லது சீமானுக்கு பயந்து நடத்துகிறீர்களா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *