“மாப்பிள்ளைச் சம்பா சாப்பிட்டால், மாப்பிள்ளையாக இருக்கலாம் …” – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை!

336 0

மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையாக இருக்கலாம்.! தங்க சம்பா சாப்பிட்டால் தங்கமாக இருக்கலாம் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

வேளாண் நிதிநிலை தாக்கல் செய்த போது மாப்பிள்ளை சம்பா அரிசி குறித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நகைச்சுவையோடு பேசியது, சட்டமன்ற உறுப்பினர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

ஏரினும் நன்றால் எருவிடுதல் என்ற திருக்குறளுடன் சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட் தாக்கலை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். 3 ஆவது முறையாக வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய, அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பச்சை துண்டு அணிந்து வந்தார். அவருக்கு உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முனைப்பாடியாரின் இன்சொல் விளைநிலமா என்ற அறநெறிச்சாரத்தை கூறி அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தனது உரையை தொடங்கினார். தனது உரையில் மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளை மாதிரி இருக்கலாம் என்றும் தங்க சம்பா சாப்பிட்டால் தங்கம் மாதிரி ஜொலிக்கலாம் என்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நகைச்சுவையோடு தெரிவித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் மெல்ல திரும்பி அமைச்சரை பார்த்து, லேசாக புன்னகைத்தார். உடனே குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு அப்போ எல்லோருக்கும் கொடுங்கள். சாப்பிட தயாராக இருக்கிறோம்” என்றார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.முன்னதாக, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கையை வைத்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, மலர் கொத்துக்கு பதிலாக சிறுதானிய பயிர்களின் கொத்தை பரிசாக அளித்தார்.

வேளாண்துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்தமைக்காக நன்றி தெரிவிக்கும் வகையில் முதலமைச்சருக்கு எம்எல்ஏ டிஆர்பி ராஜா மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் பொருட்களையும் பரிசாக வழங்கினார்.

வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலினும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வமும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Related Post

சூரி முதல் விஜயபாஸ்கர் வரை.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமாடிய விஐபிக்களின் காளைகள்…!

Posted by - January 18, 2023 0
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமிறங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சூரி உள்ளிட்டோரின் காளைகள் வெற்றிபெற்றன. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.…

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் ‘அய்யன்’ மொபைல் செயலி: DOWNLOAD APP LINK.

Posted by - December 26, 2023 0
சென்னை: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்நிலையில், மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் ‘அய்யன்’…

சனாதன தர்மம் என்றால் என்ன? அது சர்ச்சையாக்கப்பட்டது ஏன் ?

Posted by - September 6, 2023 0
சனாதன தர்மம் பற்றி பேச்சு தான் கடந்த இரண்டு நாட்களாக அரசியல் ரீதியான விவாதத்திற்குரிய முக்கிய விஷயமாக மாறி உள்ளது. இதனால் சனாதன தர்மம் என்றால் என்ன,…

பருவமழை தீவிரம்: தமிழகத்தில் மேலும் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

Posted by - November 23, 2023 0
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில்…

தமிழகத்தை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் : பள்ளிகளுக்கு விடுமுறையா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

Posted by - March 16, 2023 0
இன்புளூயன்சா காய்ச்சல் தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு இன்புளூயன்சா பாதிப்பு உள்ளதா என்பதை அறிய 476 நடமாடும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *