“மாப்பிள்ளைச் சம்பா சாப்பிட்டால், மாப்பிள்ளையாக இருக்கலாம் …” – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை!

314 0

மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையாக இருக்கலாம்.! தங்க சம்பா சாப்பிட்டால் தங்கமாக இருக்கலாம் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

வேளாண் நிதிநிலை தாக்கல் செய்த போது மாப்பிள்ளை சம்பா அரிசி குறித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நகைச்சுவையோடு பேசியது, சட்டமன்ற உறுப்பினர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

ஏரினும் நன்றால் எருவிடுதல் என்ற திருக்குறளுடன் சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட் தாக்கலை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். 3 ஆவது முறையாக வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய, அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பச்சை துண்டு அணிந்து வந்தார். அவருக்கு உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முனைப்பாடியாரின் இன்சொல் விளைநிலமா என்ற அறநெறிச்சாரத்தை கூறி அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தனது உரையை தொடங்கினார். தனது உரையில் மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளை மாதிரி இருக்கலாம் என்றும் தங்க சம்பா சாப்பிட்டால் தங்கம் மாதிரி ஜொலிக்கலாம் என்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நகைச்சுவையோடு தெரிவித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் மெல்ல திரும்பி அமைச்சரை பார்த்து, லேசாக புன்னகைத்தார். உடனே குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு அப்போ எல்லோருக்கும் கொடுங்கள். சாப்பிட தயாராக இருக்கிறோம்” என்றார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.முன்னதாக, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கையை வைத்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, மலர் கொத்துக்கு பதிலாக சிறுதானிய பயிர்களின் கொத்தை பரிசாக அளித்தார்.

வேளாண்துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்தமைக்காக நன்றி தெரிவிக்கும் வகையில் முதலமைச்சருக்கு எம்எல்ஏ டிஆர்பி ராஜா மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் பொருட்களையும் பரிசாக வழங்கினார்.

வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலினும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வமும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Related Post

”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை – திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?

Posted by - December 30, 2024 0
ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்து பேசியது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். தவெக தலைவர் விஜய் அறிக்கை: தமிழக வெற்றிக்கழகம்…

மன்னார் வளைகுடா கடலில் சூறைக்காற்று: ராமேசுவரத்தில் 50 மீட்டர் உள்வாங்கிய கடல்

Posted by - September 8, 2023 0
ராமேசுவரம்: தமிழகத்தில் தென்கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன்…

“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..

Posted by - December 9, 2024 0
பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே இன்று சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கவுள்ள நிலையில், திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீது திமுகவினர்…

3 பேரின் பதவி பறிப்பு – காரணம் என்ன..?

Posted by - September 30, 2024 0
தமிழக அமைச்சரவையில் புதியதாக நான்கு பேர் இணைந்திருக்கும் நிலையில், மூன்று பேரின் பதவியும் பறிக்கப்பட்டிருக்கிறது. புதியவர்களுக்கு பதவி கிடைத்ததற்கான காரணம் குறித்தும், பழையவர்களின் பதவி பறிப்பிற்கான பின்னணி…

ஜிப்மரில் கணைய புற்று நோய்க்கு ‘ரோபோடிக்’ அறுவை சிகிச்சை- சிறு துவாரமிட்டு 10 மணி நேரம் செய்து சாதனை

Posted by - August 12, 2023 0
புதுச்சேரி: புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வயிற்று வலி காரணமாக 38 வயது பெண் அனுமதிக்கப்பட்டார். சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு கணைய புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *