வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்… இனி க்ரூப் சாட்டில் எவ்வளவு பேர் ஆன்லைனில் இருக்காங்கன்னு பார்க்கலாம்…

270 0

குரூப் சாட் செய்யும்போது க்ரூப்பில் ஆன்லைனில் உள்ளவர்களின் எண்ணிகையை பார்க்கும் வசதியை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

பிரபல வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியானது முக்கியமான இரண்டு புதிய வசதிகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. குரூப் சாட் செய்யும்போது க்ரூப்பில் ஆன்லைனில் உள்ளவர்களின் எண்ணிகையை பார்க்கும் வசதியையும், ஏதேனும் மெசேஜ் ரீட் செய்யாமல் இருந்தால் அதனை நினைவுப்படுத்தும் வசதியையும் வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் யூசர்களின் சாட் அனுபவம் மேம்படும் என வாட்ஸ் அப் நம்புகிறது.

ஆன்லைன் கவுன்ட்டர் ஃபார் குரூப் சாட்ஸ் (Online counter for group chats)வாட்ஸ் அப்பின் சோதனை நிலையில் உள்ள இந்த அப்டேட் மூலம் ஒரு குரூப் சாட்டில் எத்தனை பேர் தற்போது ஆன்லைனில் உள்ளனர் எனும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. வாட்ஸ் அப்பின் லேட்டஸ்ட் பீட்டா வெர்ஷன் ஆன வாட்ஸ்அப் பீட்டா ஃபார் ஆண்ட்ராய்டு 2.4.25 30 வெர்ஷனில் இந்த அப்டேட் சோதனை முறையில் உள்ளது. குரூப் சாட்டின் மேற்புறத்தில் கீழேயும் குரூப் பெயரின் சற்று கீழேயும் எந்த ஆன்லைன் கவுண்டர் எண்ணிக்கை காண்பிக்கப்படும்.

இந்த ஆன்லைன் கவுண்டரில் எத்தனை நபர்கள் தற்போது ஆன்லைனில் உள்ளனர் என்ற விவரம் காண்பிக்கப்படும். இதனைக் கொண்டு சில முக்கியமான செய்திகளை அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்கு ஏற்ற நேரத்தை நம்மால் தேர்வு செய்ய முடியும். அதே நேரத்தில் யூசர்களின் பிரைவசியை மதிக்கும் பொருட்டு, ஆன்லைன் செயல்பாட்டை மறைக்கும் வசதியையும் வாட்ஸ்அப் அளிக்கிறது. இவ்வாறு ஆன்லைன் விசிபிலிட்டியை யாரேனும் மறைத்திருந்தால், அவர்கள் ஆன்லைனில் இருந்தாலும் அவர்களின் பெயர் குழுவில் ஆன்லைனில் காண்பிக்காது.

இந்த புதிய அப்டேட்டில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் உள்ளன. அதாவது ஒரு நபர் வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்து அவரின் இன்டர்நெட் கனெக்ஷன் ஆக்டிவாக இருந்தால் அவர் ஆன்லைனில் உள்ளதாக வாட்ஸ் அப் எடுத்துக் கொள்ளும். அதனைக் கொண்டு அவர் ஆக்டிவாக சாட் செய்து கொண்டிருக்கிறார் என்று நாம் கருத முடியாது என்பதனை நினைவில் கொள்ளவும்.

ரு குழுவாக சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் அல்லது நிகழ்வுகளுக்கு இந்த வசதி மிகவும் உபயோகமானதாக இருக்கும். குழுவிலுள்ள பலருக்கும் ஒரு செய்தி சென்றடைய வேண்டும் எனும் பட்சத்தில் அனைவரும் ஆன்லைனில் இருக்கும்போது நீங்கள் இதனைப் பற்றி பேசி முடிவு செய்து கொள்ளலாம்.

மெசேஜ் ரிமைண்டர்

ஆன்லைன் கவுன்ட்டர் வசதியை அடுத்து இரண்டாவதாக அன்ரீடில் உள்ள மெசேஜ்களுக்கான நோட்டிபிகேஷன் வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வசதியும் மேலே சொன்ன ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் சோதனை முறையில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

ஏற்கனவே நாம் பார்க்காத ஸ்டேட்டஸ் அப்டேட்டுகள் மேலே முதலில் காண்பிக்கப்படுவதுபோல, இந்த புதிய அப்டேட்டில் இதுவரை நாம் படிக்காத வாட்ஸ் அப் மெசேஜ்கள் முதன்மையாக காண்பிக்கப்படும் என்று வாட்ஸ் அப் அறிவித்துள்ளது. இதன் மூலம் சில முக்கியமான செய்திகளை நீங்கள் தவற விடுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறையும்.அதிகமாக சாட் செய்யும் நபர்கள் அல்லது மெசேஜை அடிக்கடி படிக்காமல் தவறவிடும் நபர்களுக்கு இந்த அப்டேட் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

Related Post

எங்களால் இன்னும் 6 மாதங்களுக்கு போரை தீவிரமாக நடத்த முடியும்: ஈரான் அறிவிப்பு

Posted by - March 8, 2026 0
தெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக 6 மாதங்களுக்கு தங்களால் ஒரு தீவிரமான போரை நடத்த முடியும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல்…

நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்: ஒரே வரிசையில் 5 கிரகங்கள் காண நீங்கள் தயாரா?

Posted by - March 27, 2023 0
நியூயார்க் : இந்த வாரம் வானில் நிகழப்போகும் அதிசயத்தைக் காண நீங்கள் தயாரா என்று கேட்கின்றனர், வானியல் விஞ்ஞானிகள். அப்படி என்ன அதிசயம் நடக்கப்போகிறது என்று கேட்கிறீர்களா?…

”நாங்க மட்டும் இல்லைன்னா” இந்தியாவை வெறுப்பேற்றி பார்க்கும் அமெரிக்கா.. பாக்., உடனான உறவு

Posted by - August 13, 2025 0
இந்தியா மற்றும் பாகிஸ்தான் உடனான எங்களது உறவில் எந்த மாற்றமும் இல்லை என, அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அண்மைக்கால நடவடிக்கைகள் இந்தியாவை சீண்டிப்பார்க்கும் விதமாக குற்றச்சாட்டுகள்…

பணியின்போது அரசு அதிகாரிகள் ஐ போன் பயன்படுத்த தடை – சீனா அதிரடி

Posted by - September 7, 2023 0
பீஜிங்: உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை ஐபோன் மற்றும் ஐபேடு. சீனாவிலும் ஐ-போன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சீனர்களில் பலரும்…

உலகை அச்சுறுத்தும் புதிய கொரோனா உள்ளிட்ட 8 வைரஸ்கள்: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Posted by - October 30, 2023 0
கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனாவால் லட்சக்கணக்கான வீடுகளில் மரண ஓலம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *