பணக்கார பிச்சைக்காரர்…மாத வருமானம் ரூ 75000…நிகர சொத்து மதிப்பு மட்டும் 7.5 கோடியாம்…!

207 0

Bharat Jain The Indian Richest Beggar – பாரத் ஜெயின், மும்பையில்  வசிப்பவர்களுக்கு இவரை நிச்சயம் தெரிய வாய்ப்பு இருக்கிறது, மக்கள் அதிகமாக கூடும் சத்ரபதி மஹாராஜ் சிவாஜி முனையம் மற்றும் ஆசாத் மைதானத்தின் நெருக்கமான சந்தை பகுதிகளில், தனியாக அமைதியாக நின்று கொண்டு, சாலையில் செல்லும் யாரையும் அதிகமாக தொந்தரவு செய்யாமல் பிச்சை எடுத்துக் கொண்டு இருப்பார்.

பிச்சை தானே எடுக்கிறார், இவரிடம் என்ன இருந்து விட போகிறது என யாரும் தவறாக நினைத்து விட வேண்டும், மும்பையில் இரண்டு பிளாட்டுகள் சொந்தமாக வைத்து இருக்கிறார், இரண்டு கடைகளை மாதம் 30,000 ரூபாய்க்கு சந்தையில் வாடகைக்கு விட்டு இருக்கிறார், பணத்தை பல நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து இலாபகரமாக மாற்றி வருகிறார்.இவருடைய சொத்து மதிப்பு மட்டு தற்போதைய மதிப்பில் 7.5 கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது, இவர் ஒன்றும் அந்த அளவிற்கு பிறப்பிலேயே பணக்காரர் இல்லை, ஏழ்மையான குடும்பம் தானாம், நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 மணி நேரம் மக்கள் கூடும் இடங்களாக பார்த்து பிச்சை எடுப்பாராம், நாள் ஒன்றுக்கு ரூ 2000 முதல் ரூ 2500 வரை அதன் மூலம் வருமானம் ஈட்டுவாராம்.

மாதத்திற்கு என்று கணக்கிட்டால் ரூ 60,000 முதல் 75,000 வரை சம்பாதிப்பாராம், இவருடைய சம்பளத்தை இன்று இந்தியாவில் இருக்கும் 60% பொறியாளர்கள் கூட நெருங்க முடியாததாக இருக்கிறது, இவர் கிட்டத்தட்ட 40 வருடங்களாக பிச்சை எடுத்து வருகிறாராம், பிச்சை என்பதை ஒரு அன்பாக வேண்டுதலாக பாரத் ஜெயின் பார்ப்பதாக கூறுகிறார், இதன் மூலம் பலருக்கும் பல உதவிகளையும் செய்து வருவதாக தகவல்.

” பாரத் ஜெயின் மட்டும் அல்ல, சம்பாஜி காலே, லெட்சுமி தாஸ் உள்ளிட்ட பிச்சை காரர்களும் 1 கோடி முதல் 1.5 கோடி வரை நிகர சொத்துக்களை கொண்டு இருக்கிறார்களாம் “

Related Post

கேரள குண்டுவெடிப்பு: போலீசில் சரணடைவதற்கு முன்பு பேஸ்புக் லைவில் பேசிய மார்டின்- வைரலாகும் பரபரப்பு வீடியோ

Posted by - October 30, 2023 0
கேரளாவின் களமசேரியில் ஜெஹோவா’ஸ் விட்னெசஸ் சபையின் மத வழிபாட்டு கூட்டத்தில் இன்று காலை 9 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில்…

புதிதாக 126 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சற்று அதிகரிப்பு

Posted by - February 16, 2023 0
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 74 ஆக இருந்தது. நேற்று 102 ஆக உயர்ந்த நிலையில், இன்று புதிதாக 126 பேருக்கு தொற்று உறுதி…

குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொன்ற காதலி…!!

Posted by - April 17, 2023 0
குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலியே காதலனைக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர்  சஞ்சீவ் குமார்…

பங்குச் சந்தை சரிவிற்குப்பின் கவனம் பெற்ற பங்குகள்.. இன்னைக்கு கவனிக்காம விட்ராதீங்க!

Posted by - August 6, 2024 0
அமெரிக்க, ஜப்பான் பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியை தொடர்ந்து இந்திய பங்குச் சந்தை கடும் இழப்பை ஆகஸ்ட் 5 அன்று சந்தித்தது. இந்நிலையில் இன்று சந்தையில் கவனம் பெறப்போகும்…

நாகலாந்தில் நிலச்சரிவு: ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் சுக்குநூறாக நசுங்கிய கார்கள்- வைரலாகும் வீடியோ

Posted by - July 5, 2023 0
நாகலாந்தில் திமாபூர் மற்றும் கோஹிமா இடையே சுமோகெடிமா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 29-ல் நேற்று மாலை ஏற்பட்ட நிலச்சரிவில் பெரிய பாறைகள் மலையில் இருந்து உருண்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *