விஜயகாந்தை விரும்பும் அனைவருக்கும் சமர்ப்பணம் – பத்மபூஷன் விருது பெற்றுக் கொண்ட பிரேமலதா

185 0

விஜயகாந்த் சார்பில் அவரது மனைவி பிரேமலதா விருதைப் பெற்றார். அப்போது விஜயகாந்தை நினைவுகூறும் வகையில் சில விநாடிகள் வானத்தை நோக்கினார்.

மறைந்த தேமுதி நிறுவன தலைவர் விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை, அவரது மனைவி பிரேமலதா, குடியரசுத் தலைவர் கையால் பெற்றுக் கொண்டார். பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா, நடிகர் சிரஞ்சீவி, போலியோவால் கை,கால்களை இழந்த நிலையிலும் தொழில் முனைவோராக உருவெடுத்த கர்நாடகாவின் ராஜண்ணாவுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும்,  132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் வெங்கையா நாயுடு உட்பட 65 பிரபலங்களுக்கு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த விழாவில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இதில் விடுபட்ட நடிகர் விஜயகாந்த் உள்ளிட்ட பிரபலங்களுக்கான பத்ம விருதுகளை டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

விஜயகாந்த் சார்பில் அவரது மனைவி பிரேமலதா விருதைப் பெற்றார். அப்போது விஜயகாந்தை நினைவுகூறும் வகையில் சில விநாடிகள் வானத்தை நோக்கினார்.  முன்னதாக நியூஸ் 18 தமிழ்நாடுக்கு பேட்டியளித்த பிரமலதா, விஜயகாந்தை விரும்பும் அனைவருக்கும் இந்த பத்ம விருது சமர்ப்பணம் என கூறினார்.இதேபோல், பழம்பெரும் நடிகையுமான வைஜெயந்தி மாலாவிற்கு பத்ம விபூஷன் விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார். தமிழ்நாட்டை சேர்ந்த பாரம்பரிய  வள்ளிக் கும்மி நடனக் கலைஞர் பத்ரப்பன், ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.போலியோவால் கை, கால்களை இழந்த நிலையிலும் தளராது தனது தன்னம்பிக்கையால் பொறியாளராகவும், தொழில் முனைவோராகவும் உருவாகி பல மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியதுடன் பாராலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்திய கர்நாடகாவின் கே.எஸ். ராஜண்ணாவுக்கு பத்ம ஸ்ரீவிருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.இதனிடையே, பத்ம விருதுகளை பெற்றவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சார்பில் இரவு சிறப்பு விருந்து டெல்லியில் அளிக்கப்பட்டது.

Related Post

இப்போ எங்க போனாரு நடிகர் சூர்யா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளாசல்!

Posted by - December 31, 2024 0
தமிழக மக்களுக்காக நடைபெற்ற அதிமுக ஆட்சியை மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று ஜீபூம்பா செய்து ஆட்சியை பிடித்து விட்டார். சிறைச்சாலை அதிமுகவினருக்காக கட்டப்பட்டது. நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை,…

சூப்பர்ஸ்டார்-னா ஒருத்தர் தான், தல-ன்னா.. லியோ மேடையில் விஜய் அதிரடி பேச்சு

Posted by - November 2, 2023 0
அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் என தொடர்ந்து சர்ச்சை வரும் நிலையில் அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார். சூப்பர்ஸ்டார் ஒருத்தர் தான்.. “புரட்சி தலைவர்-னா ஒருத்தர்…

எதிர்வீட்டு பெண்ணுடன் சண்டை.. நாய்க்குட்டிகளை கொன்ற பெண்..

Posted by - March 7, 2026 0
கடந்த ஓராண்டாகவே மீனாட்சி, புவனேஸ்வரி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வாசலில் வாகனம் நிறுத்துவது தொடங்கி, தெருவை கூட்டி சுத்தம் செய்து கோலம் போடுவது வரை…

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Posted by - June 9, 2023 0
டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்துவருகிறார். டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். குறுவை சாகுபடிக்காக…

மெட்ரோ ரெயில் பணி: ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

Posted by - February 21, 2023 0
திருப்போரூர்: சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டப்பணி 118.9 கி.மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. இதில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *