அக்கப்போராக இருக்கும் ஆதிரை திருமணம்.. மட்டமான வேலையை பார்க்கும் குணசேகரன்

331 0
குணசேகரன் கேட்ட அந்த 40% சொத்தை அப்பத்தா உறுதியாக தர முடியாது என்று கூறிய நிலையில் அதை எப்படியாவது வாங்கி நிச்சயதார்த்தத்தை நடத்த வேண்டும் என்று விசாலாட்சி அப்பாதாவிடம் கெஞ்சுகிறார்

எல்லா சீரியல்களையும் பின்னுக்கு தள்ளி மக்களிடத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரே சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். ஆனால் தற்போது வரும் எபிசோடுகளை பார்த்து மக்கள் கொஞ்சம் நெகட்டிவ் கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். அதற்கு காரணம் ஆதிரையின் நிச்சயதார்த்தம் பல மாதங்களாக இழுத்து அடித்துக் கொண்டிருப்பதால் பார்க்கவே சலிப்பாக இருக்கிறது. அதிலும் நிச்சயதார்த்தம் என்கிற பெயரில் அவர்கள் செய்யும் வியாபாரத்தை பார்த்தாலே இந்த நாடகத்தை வெறுப்படையை செய்கிறது.

குணசேகரன் கேட்ட அந்த 40% சொத்தை அப்பத்தா உறுதியாக தர முடியாது என்று கூறிய நிலையில் அதை எப்படியாவது வாங்கி நிச்சயதார்த்தத்தை நடத்த வேண்டும் என்று விசாலாட்சி அப்பாதாவிடம் கெஞ்சுகிறார். அதற்கு அப்பத்தா நீ ஒழுங்கான முறையில் பிள்ளைகளை வளர்த்தால் இப்படி சுயநலமாக யோசித்து இருக்க மாட்டார்கள். உனக்கும் இந்த மாதிரியான நெற்கதியான சூழ்நிலை வந்திருக்காது என்று இவ்வளவு நாளாக மனதில் பூட்டி வைத்த பாரத்தை இறக்கி விடுகிறார்.

 

பின்பு விசாலாட்சி தன்னுடைய பிள்ளையின் நிலைமையை பார்த்து குணசேகரனிடம் கெஞ்சுகிறார். ஆனால் அவர் எதற்கும் அசராமல் சொத்து வந்தால் மேற்கொண்டு பேசலாம் என்று திட்டவட்டமாக கூறி போய்விட்டார். பிறகு அங்கிருந்த எஸ்கேஆர் குடும்பம் அருணை கூட்டிட்டு கிளம்புகிறார்கள். ஆதிரை ஒவ்வொருவர் காலிலும் விழுந்து கெஞ்சுகிறார். ஆனால் அதை கண்டுக்காமல் நாங்கள் கிளம்புகிறோம் என்று மண்டபத்தை விட்டு எஸ்கேஆர் குடும்பம் போய்விட்டது.

ஆனாலும் இந்த சீன் எல்லாம் பார்க்கும் பொழுது இது நாடகமாக இருந்தாலும் இந்த மாதிரியான விஷயங்கள் எங்கோ ஒரு மூலையில் நடக்கப் போய் தான் தொடர்களாக வருகிறது. இதை பார்க்கும் பொழுது மிகவும் கண்கலங்க வைக்கிறது. அதிலும் நேற்றைய எபிசோடில் அப்பத்தா விசாலாட்சி மற்றும் ஆதிரையின் நிலைமை பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

 

இதற்குப் பிறகு இன்றைய ஃப்ரோமோ படி ஜனனி சாருபாலாக்கு போன் பண்ணுகிறார். அதற்கு அவர் இனிமேல் பேசுறதுக்கு என்ன இருக்கிறது என்று கேட்டு கட் பண்ணுகிறார். அடுத்ததாக விசாலாட்சி அப்பத்தாவிடம் மனுசங்களை நம்பி மோசம் போனது போதும் என்று கோபத்தை வெளிக்காட்டுகிறார். அதற்கு அப்பத்தா பேசி முடிச்சிட்டியா விசாலாட்சி என்று கேட்கிறாய்.

இவர்களுடைய வியாபாரத்துக்கு நடுவில் ஆதிரையின் நிச்சயதார்த்தம் நின்று போய்விட்டது. இத்தனை நாளா ரொம்பவே ஜவ்வு மாதிரி இழுத்துட்டு வந்த இந்த நிச்சயதார்த்தம் ஒரு வழியாக முடிந்து விட்டு அடுத்து விறுவிறுப்பாக கொண்டு போவார் என்று எதிர்பார்த்து நிலையில் தற்போது முதலில் இருந்து ஆரம்பிப்பது போல் விட்டு இடத்துக்கு கதையை கொண்டு வந்து விட்டார்கள். பார்க்கலாம் ஆதிரையின் நிச்சயதார்த்தம் நடக்குமா அல்லது நேரடியாக திருமணம் ஆகுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Post

ஏழரை சனி : சனி பகவானின் அருளை பெறும் ராசியினர் யார் தெரியுமா?

Posted by - December 31, 2022 0
சோதிடத்தின்படி, சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கி இருப்பார். ஒரு ராசியை விட்டு ஒரு ராசிக்கு கடந்து செல்வதை சனிப் பெயர்ச்சி என்பர். ஏழரை…

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘ரிவால்வர் ரீட்டா’ பட டீசர் வெளியீடு..!!

Posted by - October 18, 2024 0
நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவான ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் டீசரை படக்குழு படக்குழு வெளியிட்டுள்ளது. தென்னிந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகைகளில்…

குக் வித் கோமாளியில் இருந்து விலகிய நடுவர்.. 5ம் சீசனில் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்

Posted by - February 24, 2024 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்து இருக்கும் நிலையில் அந்த ஷோவில் கலந்துகொண்ட பல…

ஏஜென்ட் டீமுக்கு அன்பு கட்டளை இட்ட மாயா.. நீங்க அவ்ளோ நல்லவங்களா இல்லையே!

Posted by - January 17, 2024 0
BB7 Tamil: இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும், மாயா பாஸ் என அது சரியாக இருக்கும். இந்த சீசன் முழுக்க என்ன நடக்க…

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா இப்படியா..

Posted by - January 29, 2024 0
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து பிரபலம் ஆனவர் காவ்யா அறிவுமணி. அவர் தற்போது ட்ரெண்டி உடையில் கொடுத்த போஸ் இதோ..

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *