அதிகாலையில் நில நடுக்கம்… மெகா சுனாமி அலர்ட்.?

176 0

ஜப்பானில் கடந்த திங்கட்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ஒரு வார காலத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் எனவும், இதன் காரணமாக மெகா சுனாமி உருவாக வாய்ப்பு இருப்பதாக அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் இன்று ஏற்பட்டுள்ள நில நடுக்கத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து நிலக்கடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி பல ஆயிரம் பேர் உயிரிழந்து வருகிறார்கள். இந்த நிலையில் சுனாமி அதிகளவில் தாக்கும் வாய்ப்புள்ள நாடுகளில் ஜப்பான் முக்கிய இடத்தில் உள்ளது. அந்த வகையில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 20ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அவ்வப்போது சுனாமி ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை ஜப்​பான் நாட்​டின் வட கடலோரப் பகு​தி​களான ஹொக்​காய்​டோ, ஹொன்ஷு தீவு​களில் ரிக்​டர் அளவு​கோலில் 7.5 புள்​ளி​களாக கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது.

98 அடி உயர சுனாமி அலர்ட்

இந்த நிலநடுக்கம் டோக்கியோ வரை (550 கிமீ தூரம்) அதிர்ச்சி உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 90ஆயிரம் மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் பெரிய அளவில் சுனாமி ஏற்படாத நிலையில், அலையின் சீற்றம் மட்டும் கடுமையாக இருந்தது. இதனையடுத்து ஒரு வார காலத்திற்குள் மீண்டும் மிகப்பெரிய அளவில் அதாவது 8 ரிக்​டர் அளவுகோளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டது. இதன் காரணமாக 98 அடி உயரத்திற்கு சுனாமி வர வாய்ப்பு இருப்பதாக ஜப்பான் அரசு சார்பாக அலர்ட் விடுக்கப்பட்டிருந்த்து.

இந்த நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது போல் இன்று ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது.ஹோன்ஷுவின் பிரதான தீவில் உள்ள இவாட் மாகாணத்தில் உள்ள குஜி நகரிலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே 8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது குறைவான அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் 3 அடி உயரத்திற்கு மட்டுமே சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் கடல்கரையோத்தில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

Related Post

அமெரிக்காவில் எலும்பை உறைய வைக்கும் குளிர்.. சமாளிக்க முடியாமல் 22 பேர் பலி!

Posted by - December 27, 2022 0
கடும் பனியுடன் மணிக்கு 65 மைல் வேகத்தில் காற்றும் வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள் முடக்கம் அமெரிக்காவில் வீசும் பனிப்புயலால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில்…

கிரீஸ் நாட்டில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 29 பேர் பலி- 85 பேர் படுகாயம்

Posted by - March 1, 2023 0
கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரெயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில்…

பின் வாசலால் சென்ற தமிழரசுக்கட்சி: அநுரவிடம் கேட்டது இதைத் தான்..! அம்பலப்படுத்திய தமிழ் எம்.பி

Posted by - November 22, 2025 0
ஒற்றையாட்சி அரசியலமைப்பையே தற்போது தமிழரசு கட்சி வலியுறுத்தி வருவதாக தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் (Colombo) நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில்…

உலகளவில் 67.82 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு

Posted by - February 17, 2023 0
அமெரிக்கா: உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா…

ஜெர்மனியில் 2-ம் உலகப்போர் வெடிகுண்டு கண்டெடுப்பு: 13 ஆயிரம் பேர் வெளியேற்றம்

Posted by - August 8, 2023 0
19-ம் நூற்றாண்டின் மத்தியில் 1939-லிருந்து 1945 வரை உலகின் பெரும்பாலான நாடுகள், ஆக்ஸிஸ் (Axis) மற்றும் அல்லீஸ் (Allies) என இரு அணிகளாக பிரிந்து நின்று போரிட்டன.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *