அன்புமணிக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்..!

151 0

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை உள்ளது – மருத்துவர் ராமதாஸ்

விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்த அன்புமணி ராமதாஸ் பதவி மாற்றம் பணி செய்யப்பட்டு தலைவர் பதவியை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸே எடுத்துக்கொண்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பு திருப்பமாக பார்க்கப்படுகிறது.

செய்தியாளர் சந்திப்பில் அறிவித்த ராமதாஸ்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.,

2026 இல் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டும் பல்வேறு செயல் திட்டங்களை வகுத்து வருகிறேன். அதனை செயல்படுத்த வேண்டி கட்சி அமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என கருதி முழு மனதுடன் இந்த அறிவிப்பை நான் இன்று வெளியிடுகிறேன் என்று அன்புமணி குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

இனி அன்புமணி தலைவர் இல்லை – ராமதாஸ் அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் என்பது மட்டுமல்லாமல் தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக் கொள்கிறேன் என்றும் தேர்தல் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வரும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன் என்றும் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

அமைப்பு ரீதியாகவும் மாற்றம்

எனது பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பதவி வரிசை அறிவிப்பதில் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ், செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவதலைவர் ஜி கே மணி பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் பொருளாளர் திலகபாமா என அணி பொறுப்பாளர்கள் உள்ளவர்கள் அமைப்பு ரீதியாக செயல்படுவார்கள். இந்த அறிவிப்பை ஏற்று பாட்டாளி மக்கள் கட்சியினர் ஒன்றுபட்டு உணர்வோடு தீவிரமாக செயல்பட்டு தேர்தல் வெற்றிக்கு பணியாற்ற வேண்டும் என தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் மே 11 மாமல்லபுரத்தில் நடைபெறும் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு இதுவரை கண்டிராத அளவில் மாபெரும் வெற்றிமாறாக நடத்திட மாநாட்டு குழு தலைவராக நியமன செய்யப்பட்டுள்ள மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களோடு இணைந்து ஒன்றுபட்ட உணர்வோடு உழைக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் ராமதாஸ் தன்னுடைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

முற்றிய மோதல் – நீக்கப்பட்ட அன்புமணி – ராமதாஸ் ஆவேசம்

பாட்டாளி மக்கள் கட்சியை யார் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது என்பதில் நிறுவனரான ராமதாஸ்க்கும், தலைவரான அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில நாட்களாக பனிப்போர் நடைபெற்று வந்ததாகவும், அதுதான் கடந்த பொதுக்குழுவில் வெடித்து, இளைஞரணி தலைவர் பதவி குறித்து நிர்வாகிகள் மத்தியிலே இருவரும் காரசாரமாக விவாதிக்க காரணம் என கூறப்பட்டது. அப்போது, ஆவேசமான அன்புமணி தான் பேசிக்கொண்டிருந்த மைக்கை தூக்கி டேபிளில் போட்டார். அதன்பின்னரும் ராமதாஸ், கட்சி என்னுடையது இங்கு நான் சொல்பவர்கள் தான் இருக்க  வேண்டும், நான் சொல்வதைதான் கேட்க வேண்டும் என்று ஆத்திரத்துடன் பேசினார். அது இருவருக்குள்ளும் இருக்கும் கருத்து வேறுபாட்டை பட்டவர்தனமாக காட்டியது.

சமாதான படலம் தோல்வி – நீக்கப்பட்ட அன்புமணி

அதன்பின்னர், தைலாப்புரம் தோட்டத்தில் வைத்து அன்புமணியை சமாதானம் செய்ய நிர்வாகிகள் முயற்சித்தது பலனிக்களிக்கவில்லை. தன்னை கட்சியில் சுதந்திரமாக செயல்பட விட வேண்டும் என்றும், மாறி வரும் கள சூழலுக்கு ஏற்பவே முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அன்புமணி தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில், அதனை ஏற்காத ராமதாஸ், அவரை அந்த பதவியில் இருந்தே தூக்கி எறிந்துள்ளார்.

Related Post

ரஜினி, அஜித்துக்கு இன்று புகழாரம்.. அன்று வசைபாடு! சீமானை விளாசும் தவெக பாய்ஸ்..!

Posted by - September 16, 2025 0
சீமான் தனது கடந்த காலத்தில் ரஜினி, அஜித்தை விமர்சித்ததையும், விஜய்யை அரசியலுக்கு அழைத்த வீடியோவையும் தவெக தொண்டர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். தமிழ்நாட்டில் அரசியல் களம் நாளுக்கு…

இன்று தமிழகம் வரும் மோடி.!

Posted by - January 23, 2026 0
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக – பாஜக கூட்டணியின் முதல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே…

விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய ED? முடங்கும் SK-வின் பராசக்தி? தேர்தல் பரப்புரையாக வரும் “ஜனநாயகன்”

Posted by - May 19, 2025 0
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடந்திருக்கும் அமலாக்கத்துறை சோதனையால், விஜய்க்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடந்திருக்கும் அமலாக்கத்துறை…

“அப்பா எல்லாம் வீண் விளம்பரம்” கோவை கூட்டுப்பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்

Posted by - February 19, 2025 0
பாலியல் குற்றங்களைத் தடுக்க ஒரு துரும்பைக் கூட அள்ளிப்போடாத மு.க.ஸ்டாலின் வீண் விளம்பரத்திற்காக அப்பா, அண்ணன் என்று நாடகம் போடுவதால் என்ன பலன்? என்று அண்ணாமலை கேள்வி…

யாருடன் கூட்டணி.? பிரேமலதா போடும் அரசியல் கணக்கு

Posted by - February 3, 2026 0
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், யாருடன் கூட்டணி என எந்த முடிவும் அறிவிக்காமல் தேமுதிக இழுத்தடித்து வருகிறது, எனவே இ ன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *