Generated Image January 23 2026 11 16AM

இன்று தமிழகம் வரும் மோடி.!

90 0

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக – பாஜக கூட்டணியின் முதல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட 8 கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

சூடு பிடிக்கும் தமிழக தேர்தல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. இதில் முதல் ஆளாக வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம், தேர்தல் அறிக்கை, கூட்டணி என அனைத்து பணிகளையும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது அதிமுக. இதற்கு ஏற்ப  கடந்த ஆண்டே பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்தது அதிமுக,

அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள்

அடுத்ததாக பாமக, அமமுக தமாகா, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம், ஐஜேகே என பல கட்சிகளும் அதிமுக- பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. அந்த வகையில் தமிழகம் வந்த பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் முன்னிலையில் கூட்டணியை இந்த கட்சிகள் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று தமிழகம் வரும் நிலையில், அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மேடையேறவுள்ளனர். இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடு அதிமுக மற்றும் பாஜக சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மதியம் 1.15 மணியளவில்  விமானத்தில் புறப்படும் மோடி,  2.15 மணியளவில் சென்னை பழைய விமான நிலையத்திற்கு வந்தடைகிறார்.

இன்று தமிழகம் வரும் மோடி

இதனையடுத்து ஹெலிகாப்டர் மாக்கமாக பொதுக்கூட்டம் நடைபெறும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சென்றடைகிறார். அங்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் முதல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள நிலையில், கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மேடையில் கைகோர்க்கவுள்ளனர்.

மீண்டும் கைகோர்க்கும் இபிஎஸ்- டிடிவி

எடப்பாடி பழனிசாமிக்கும், டிடிவி தினகரனக்கும்  இடையே உட்கட்சி மோதல் காரணமாக பல பிரிவாக அதிமுக பிரிந்து இருந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போதே டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க பாஜக தலைமை எவ்வளவோ முயற்சி செய்தது. ஆனால் இதனை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோல்வியை தழுவியது.

மேலும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக- பாஜக தனி தனி அணியாக போட்டியிட்டது. அப்போதும் வாக்குகள் பிரிந்து தோல்வி அடைந்தது. எனவே எதிர்ப்புவாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் தற்போது டிடிவி தினகரனோடு கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  எனவே வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க அதிமுக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

Related Post

Generated Image November 13 2025 5 02PM

பொங்கலுக்கு கொட்டப்போகுது பரிசு மழை.! ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.5ஆயிரமா.?

Posted by - November 13, 2025 0
சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பாக தமிழக அரசு 5ஆயிரம் ரூபாய் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இது சாத்தியமா.?…

புதுக்கட்சி தொடங்கிய ஓபிஎஸ்…..

Posted by - December 15, 2025 0
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சத்தமில்லாமல் புதுக்கட்சி தொடங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், அது குறித்து வரும் டிச.23-ம் தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து முறைப்படி அறிவிக்க திட்டமிட்டிருப்பதாக…
Gemini Generated Image 6nw0d46nw0d46nw0

தமிழகத்தை காப்பாற்ற அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் – இபிஎஸ் பரப்புரை

Posted by - April 11, 2026 0
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்று ஏதேனும் இருக்கிறதா என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்…
%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81

Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ – வெளுத்துவிட்ட உதயநிதி

Posted by - May 29, 2026 0
Udhayanidhi Stalin on CM Vijay: கடலூர் பெண் கொலைக்கு அதிர்ச்சி தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் நேரம் எடுத்து கற்றுக்கொண்டு வந்து சட்டம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *