அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வருக்கு செந்தில் பாலாஜி உருக்கமான கடிதம் …

376 0

சிறையில் இருந்துகொண்டே இலாகா இல்லாத அமைச்சராக தமிழக அமைச்சரவையில் நீடித்து வந்த செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில், சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரை விசாரித்து வரும் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தது.அவர் கைது செய்யப்பட்டதால் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரை இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து அமைச்சரவையில் வைத்திருந்தார்.

ஜாமீனில் வெளிவர செந்தில் பாலாஜி பலமுறை முயன்றும் அவரது ஜாமீன் மனு ஏற்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது சிறைக்கு சென்று ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்ட நிலையில், அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.இதற்கிடையே அவர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை மீண்டும் நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Post

வலுவிழந்த மாண்டஸ் புயல்… கரையை கடக்கும் போது சீறுமா..?

Posted by - December 9, 2022 0
Cyclone Mandous | வங்கக் கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் தீவிர புயலிலிருந்து புயலாக வலுவிழந்து உள்ளது. மாண்டஸ் தீவிர புயல் இன்று காலை வலுவிழந்து தற்போது சென்னையில் தெற்கு கிழக்கு…

செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா? – மகிழ்ச்சியில் மாணவர்கள்!

Posted by - August 31, 2023 0
4-12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.27 தேதி முதல் அக்.2ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும்…

கேதுவால் இந்த ஆண்டு இறுதிக்குள் செல்வந்த நிலையை அடையவுள்ள 3 ராசிகள்!

Posted by - December 7, 2024 0
2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். சில நல்ல செய்திகளும் வரும். எனவே கேது கிரகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்…

ஆரஞ்சு பழம் சீசன் வர போகுது! நல்லதுதான் செய்யும்! ஆனா மறந்தும் கூட “இந்த” உணவுகளுடன் சாப்பிடாதீர்!

Posted by - December 12, 2023 0
சென்னை: ஆரஞ்சு பழத்துடன் எப்போதும் இந்த பழத்தை சேர்த்து சாப்பிடவே கூடாது தெரியுமா? மேலும் ஆரஞ்ச் பழத்தின் நன்மைகளையும் தெரிந்து கொள்ளுங்கள். ரத்த குழாய்களில் சேரும் கெட்ட…

தொடரும் ஆசிரியர்கள் போராட்டம் – போர்களம் போல காட்சியளிக்கும் அன்பழகன் வளாகம் | Teachers Protest

Posted by - October 4, 2023 0
சம வேலைக்கு சம ஊதியம்: தொடரும் ஆசிரியர்கள் போராட்டம். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் நடத்திய இரண்டு சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *