ஆசிரியர்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர்; தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

204 0

TET தேர்வு வழக்கில், தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

TET தேர்வு வழக்கில், தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர் பணியில் தொடரவும் பதவி உயர்வு பெறவும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று அண்மையில் செப்டம்பர் 1ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதேபோல ஆசிரியர்கள் ஓய்வு பெற 5 ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அவர்கள் பணியை தொடரலாம் என்றும் இல்லையெனில் டெட் தேர்வில் 2 ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

வேலையை விட்டு வெளியேறலாம்

ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனில் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் டெட் தேர்வை கட்டாயம் ஆக்க முடியுமா? அதேபோல சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் கல்வி உரிமையை டெட் தேர்வு பாதிக்குமா? என்று விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் சார்பில் அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டது.

இதனால் 2012-ல் தமிழ்நாட்டில் டெட் தேர்வு கட்டாயம் ஆக்கப்படுவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் அரசு ஆசிரியர்கள் பக்கமே நிற்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி கூறி இருந்தார். ஆசிரியர் சங்கங்களுடனும் அவர் ஆலோசனை நடத்தி இருந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல்

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான செய்திக் குறிப்பில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அப்படியே பின்பற்றினால், தமிழ்நாட்டில் பெரிய அளவில் கட்டாய ஓய்வு அளிக்கப்பட வேண்டி இருக்கும் என்றும் இது ஆசிரியர்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தி, லட்சக்கணக்கான தமிழக மாணவர்களின் கற்றல் திறனை பாதிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய கால இடைவெளியில் புதிய, தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க முடியாது என்றும் அது வகுப்பறை கற்றலை பாதிப்பதுடன், பள்ளி அமைப்பின் நிலைத் தன்மையை பாதிக்கும் என்றும் அமைச்சர் அன்பில் கவலை தெரிவித்துள்ளார்.

புதிய ஆசிரியர் நியமனங்களுக்கு மட்டுமே

அதேபோல, ‘’கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, டெட் தேர்வு கட்டாயம் என்பது, புதிய ஆசிரியர் நியமனங்களுக்கு மட்டுமே. ஏற்கெனவே ஆசிரியர்களாக உள்ளவர்களுக்கு அது பொருந்தாது’’ என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Post

விடுதலை 2 திரைபார்வை..

Posted by - December 20, 2024 0
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிறது என்றால், மக்களிடம் பெரிதும் எதிர்பார்ப்பு இருக்கும். சமூக அக்கறை மற்றும் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை அழுத்தமாக பேசி வருகிறார்…

மறந்துட்டீங்களா முதல்வரே..! “மகளிர் கொள்கை” பேப்பரில் மட்டும் தான் இருக்கு, செயல் எங்கே?

Posted by - March 8, 2025 0
தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான கொள்கை திட்டம் அறிவித்து ஓராண்டகியும், அதை செயல்படுத்துவது தொடர்பாக இதுவரை ஒரு கூட்டம் கூட நடத்தப்படவில்லை. தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான கொள்கை திட்டம்…

கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! – தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் – என்ன விஷயம் தெரியுமா.?

Posted by - June 17, 2025 0
2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தேமுதிக ஒரு முக்கிய முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. அதன் வெளிப்பாடு தான் கூட்டணிக்கு 40 என்ற புதிய மந்திரம். அது என்ன…
erfgn e1778562351324

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

Posted by - May 12, 2026 0
சென்னை: வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுமாறு தமிழக முதல்வர் விஜய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *