சந்தையை திறந்து விடுங்க.. சீனாகிட்ட இருந்து பிரிக்கணும் – இந்தியாவிற்கு அமெரிக்காவின் ஸ்கெட்ச்

199 0

அமெரிக்க எண்ணெய் பொருட்களுக்காக இந்திய சந்தையை திறக்க வேண்டும் என, புதிய தூதரக ட்ரம்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர் வலியுறுத்தியுள்ளார்.

India Us Trade: மோடியும் ட்ரம்பும் ஆழ்ந்த நட்புறவை கொண்டிருப்பதாக, செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.

”இந்திய சந்தையை திறந்துவிடுங்க”

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வலியுறுத்தி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவிகிதம் வரி விதித்துள்ளது. இதுபோக, இந்தியா மீது 100 சதவிகித வரி விதிக்க ஐரோப்பிய நாடுகளை ட்ரம்ப் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை தாமதமாகியுள்ளதோடு, உறவிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான், இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்பாக, இந்தியாவிற்கான புதிய தூதராக அதிபர் ட்ரம்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, அமெரிக்காவின் கச்சா எண்ணெய் பொருட்களுக்கு இந்தியா தனது சந்தையை திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

”தெளிவாக சொன்ன ட்ரம்ப்”

இதுதொடர்பாக பேசுகையில், “வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இந்தியா உடன் தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எல்என்ஜிக்கு அந்நாட்டின் சந்தையை திறந்துவிடுமாறு வலியுறுத்தி வருகிறோம். நடுத்தர மக்கள் நிறைந்த இந்தியா போன்ற சந்தைக்கு விரிவுபடுத்திக் கொள்ள எங்களிடம் பல வாய்ப்புகள் உள்ளன. அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். ரஷ்யாவிட்ம இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்பதை ட்ரம்ப் தெளிவாக வலியுறுத்தியுள்ளார்” என்றும் செர்ஜியோ பேசியுள்ளார்.

மோடி உடன் ஆழமான நட்பு

மேலும், “அதிபர் ட்ரம்ப் இந்தியாவின் செயல்பாடுகளை விமர்சித்து வந்தாலும், பிரதமர் மோடியைப் பாராட்ட அவர் தனது வழியை விட்டு வெளியேறவில்லை. அவர்கள் நம்பமுடியாத ஆழமான உறவைக் கொண்டுள்ளனர்” என விளக்கினார். வர்த்தகத்தைப் பொறுத்தவரை, இந்தியாவும் அமெரிக்காவும் வரிகள் தொடர்பான ஒப்பந்தத்தை எட்டுவதில் வெகு தொலைவில் இல்லை என்று கோர் தெளிவுபடுத்தினார். ரஷ்ய எரிசக்தி கொள்முதல்களைத் தொடர்வதற்கு இந்தியா மற்றும் சீனா மீது கடுமையான நடவடிக்கைகளை விதிக்க டிரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தினாலும், இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 50 சதவீத வரிகள் குறித்த தீர்மானத்தின் மீது சில வாரங்களில் முடிவு எட்டப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியா உடனான உறவு:

இருநாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து பேசுகையில், “இந்திய அரசாங்கத்துடனும் இந்திய மக்களுடனும் அமெரிக்காவின் உறவு பல தசாப்தங்களாக நீண்டுள்ளது. இது சீனர்களுடன் அவர்கள் கொண்ட உறவை விட மிகவும் அன்பான உறவாகும். இந்தியா நமது பக்கம் இழுக்கப்பட்டு சீனாவிடமிருந்து விலகி இருப்பதை நாங்கள் முதன்மையான முன்னுரிமையாகக் கருதுவோம்

பல பிரிக்ஸ் நாடுகள் பல ஆண்டுகளாக அமெரிக்க டாலரிலிருந்து விலகிச் செல்ல அழுத்தம் கொடுத்தபோது, ​​இந்தியா அதற்கு ஒரு தடையாக இருந்துள்ளது. பிரிக்ஸில் உள்ள மற்ற நாடுகளை விட இந்தியா எங்களுடன் ஈடுபட மிகவும் விருப்பமாகவும் திறந்ததாகவும் உள்ளது” என்று கோர் பாராட்டியுள்ளார்.  தனது உறுதிமொழி விசாரணையின் போது செனட் வெளியுறவுக் குழுவின் முன்பு கோர் இந்த கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

Related Post

காசாவில் சுகாதார பணியாளர்கள் உடனான தொடர்பை இழந்து விட்டோம்- WHO தலைவர் சொல்கிறார்

Posted by - October 28, 2023 0
ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது கடுமையான முறையில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல்…

அமெரிக்காவில் எலும்பை உறைய வைக்கும் குளிர்.. சமாளிக்க முடியாமல் 22 பேர் பலி!

Posted by - December 27, 2022 0
கடும் பனியுடன் மணிக்கு 65 மைல் வேகத்தில் காற்றும் வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள் முடக்கம் அமெரிக்காவில் வீசும் பனிப்புயலால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில்…

நீயா, நானா போட்டியில் மெட்டாவும், கனடாவும்: முற்றும் சச்சரவில் கூகுளும் சேருமா?

Posted by - July 6, 2023 0
நீயா, நானா போட்டியில் மெட்டாவும், கனடாவும்: முற்றும் சச்சரவில் கூகுளும் சேருமா?உலகின் மிகப்பெரிய இணையவழி சமூக வலைதளமான முகநூலை நடத்தி வரும் மெட்டா நிறுவனத்திற்கும் கனடா நாட்டிற்கும்…

சிம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி.. வருகிறது E-Sim.. ஆண்ட்ராய்டு போன் வைத்து உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

Posted by - January 19, 2023 0
Android 13 | இவை சாத்தியமானால், நிறுவனம் தனது செயல்பாட்டில் துரிதமாக எந்த தடை மற்றும் தாமதமின்றி செயல்பட வேண்டும். இதற்கு ஆப்பிள் நிறுவனமே மிகப்பெரிய உதாரணம்!…

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காலமானார்: தொண்டர்கள், ரசிகர்கள் கண்ணீர்

Posted by - December 28, 2023 0
சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *