ஆண்டுதோறும் ரூ.2000 எக்ஸ்ட்ரா.! பேரவையில் சூப்பர் அறிவிப்பு

58 0

சட்டப்பேரவையில் இன்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் கீதா ஜீவன். இனி ஆண்டுதோறும் கோடைகால சிறப்புத் தொகையாக மகளிருக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஏற்கனவே, தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்தால், மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என திமுக அறிவித்துள்ள நிலையில், தற்போது இந்த அறிவிப்பும் மகளிருக்கு ஒரு ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.

பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை அரசிடம் முன்வைத்தார். அப்போது, 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது, மகளிர் உரிமைத் தொகை தடுக்கப்பட்டதாக என்றும், நடைமுறையில் இருக்கும் திட்டத்தை யார் தடுக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், நாங்களும் 2000 ரூபாய் தருவதாக அறிவித்துள்ள நிலையில், நாங்கள் எப்படி அதை தடுப்போம் என்றும் நிதியமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். அதோடு, தேர்தல் உஷ்ணத்தின் காரணமாகத் தான் கோடைகால சிறப்புத் தொகையாக 2000 ரூபாய் கொடுத்துள்ளீர்கள், கடந்த 4 ஆண்டுகளாக அதை கொடுத்தீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் கீதா ஜீவன் பதில்

எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் கீதா ஜீவன், பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த கேள்வியை கேட்பதால், அதன் அடிப்படையில் பதில் கூறுவதாக தெரிவித்து, இனி ஒவ்வொரு வருடமும் இந்த 2000 ரூபாய் கோடைகால சிறப்புத் தொகை அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தார். அமைச்சர் ஒருவர் கூறினால், அது அரசின் அறிவிப்பு போன்றது தான்.

அதனால், இதன் அடிப்படையில், திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் பட்சத்தில், இனி ஆண்டுதோறும் கோடை காலத்தில், மகளிருக்கு 2000 ரூபாய் சிறப்புத் தொகை வழங்கப்படும் என்பது உறுதியாகிறது.

இதேபோல், இது குறித்து பேசிய அமைச்சர் எ.வ. வேலு, ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் வருவதால், வெயில் காரணமாக மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். அதனால் தான், மகளிருக்கு கூடுதலாக கோடைகால சிறப்புத் தொகையாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது என்று கூறினார்.

மேலும், இந்த கோடைகால சிறப்புத் தொகை கொடுத்தது, எங்கள் ஆட்சியின் கொள்கை முடிவு என்றும் அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.

Related Post

5 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தது மட்டுமே திமுகவின் சாதனை – முன்னாள் அமைச்சர் தங்கமணி

Posted by - April 1, 2026 0
கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தது மட்டுமே திமுகவின் சாதனை என, முன்னாள் அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார். குமாரபாளையம் தொகுதி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான…

Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

Posted by - January 13, 2026 0
இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்க உடனடியாக அரசாணை வழங்க வேண்டும் என்று சீமான் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! – கதறும் பாஜக

Posted by - December 13, 2025 0
தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற அதிமுக – பாஜக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைக்க காய் நகர்த்தப்பட்டு வருகிறது. அதே நேரம் ஓபிஎஸ் மற்றும் டிடிவியை…

🔴LIVE | TN Budget 2026 | தொடங்கியது இடைக்கால பட்ஜெட் தொடக்கம் | MKStalin | TN Assembly

Posted by - February 17, 2026 0
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள, நிதி விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. Tamil Nadu Interim Budget 2026: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் உயர்கல்வித்துறைக்கு…

பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!

Posted by - January 9, 2026 0
ஜனநாயக உரிமைகள் பற்றி வாய்கிழியப் பேசும்  திமுக, பகுதி நேர ஆசிரியர்களின் உரிமைக்காக போராடுவதைக் கூட அனுமதிக்காமல் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறது – அன்புமணி. பணி நிரந்தரம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *