Generated Image January 09 2026 10 45AM

பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!

83 0

ஜனநாயக உரிமைகள் பற்றி வாய்கிழியப் பேசும்  திமுக, பகுதி நேர ஆசிரியர்களின் உரிமைக்காக போராடுவதைக் கூட அனுமதிக்காமல் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறது – அன்புமணி.

பணி நிரந்தரம் கோரி போராடிய பகுதி நேர ஆசிரியர்களைத் தாக்கி கைது செய்வதா என்று கேள்வி எழுப்பி உள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ், அடக்குமுறைகளுக்கு தண்டனை தோல்வி என்று சாடியுள்ளார்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் 10 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து தலைநகர் சென்னை மற்றும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல பகுதிநேர ஆசிரியர்களும் போராடி வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களைக் காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர். இதற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்களை காவல் துறையினர் கொடூரமாகத் தாக்கி கைது செய்துள்ளனர்.

தலைமுடியை பிடித்து இழுத்து வாகனத்தில் ஏற்றுவதா?

சில பெண் ஆசிரியர்களின் தலைமுடியை பிடித்து இழுத்து  காவல்துறை வாகனத்தில் ஏற்றிய கொடுமையும் நடந்திருக்கிறது. ஆசிரியர்களுக்கு எதிரான திமுக அரசின் அடக்குமுறை கண்டிக்கத்தக்கது.

அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக  2012-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட  16,500-க்கும் கூடுதலான பகுதி நேர சிறப்பாசிரியர்களில் இப்போது சுமார் 12 ஆயிரம் பேர் மட்டுமே இப்போது பணியாற்றி வருகின்றனர். இவ்வளவு காலத்திற்கு பிறகும் மாதம் ரூ.12,500 மட்டுமே ஊதியம் பெறும் அவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோருவது மிகவும்  நியாயமானது.

அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதா?

ஆனால், ஜனநாயக உரிமைகள் பற்றி வாய்கிழியப் பேசும்  திமுக, பகுதி நேர ஆசிரியர்களின் உரிமைக்காக போராடுவதைக் கூட அனுமதிக்காமல் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறது.

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத திமுக அரசு, போராடும் ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப் போவதாக எச்சரித்திருக்கிறது. அரசு ஆசிரியர்களுக்கு மோசடியான ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்து, அதையும்  செயல்படுத்தாமல் ஏமாற்றி வருகிறது.

ஆசிரியர்கள் மீது அடக்குமுறையா?

ஆட்சியும், அதிகாரமும் கைகளில் இருக்கும் திமிரில்  திமுக ஆட்சியாளர்கள்,  அரசு ஊழியர்கள் மீதும், ஆசிரியர்கள் மீதும் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர். இதன் மூலம் போராட்டங்களை முடக்கி விடலாம் என்று கனவு காண்கின்றனர்.

மக்கள் சக்தியை அதிகாரத்தின் மூலம் ஒடுக்க முடியாது.  அதிகாரத் திமிரில் அடக்குமுறைகளை ஏவுபவர்களுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் படுதோல்வி எனும் தண்டனையை வழங்கவிருப்பது உறுதி’’ என்று அன்புமணி அதில் தெரிவித்துள்ளார்.

Related Post

Gemini Generated Image t4hwvit4hwvit4hw

500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?

Posted by - March 30, 2026 0
தங்கம், வெள்ளி, பணம், கார்கள்… தவெக தலைவர் விஜயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? தவெக தலைவர் விஜயின் அசையும் சொத்து மதிப்பு ரூ.404 கோடி (404,58,57,196)…

எல்லா பக்கமும் அணை கட்டிய ஈபிஎஸ்.. தவிக்கும் செங்கோட்டையன் – பதறியடித்து நோ சொல்ல காரணம் என்ன?

Posted by - September 26, 2025 0
அதிமுகவின் முழு அதிகாரமிக்க தலைமையாக எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்து இருப்பதால், போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் செய்வதறியாமல் தவித்து வருகிறாராம். எடப்பாடி பழனிசாமியை மேலும் பகைத்துக் கொள்ள வேண்டாம்…
vijay tour

TVK Vijay: வேளாங்கண்ணி டூர் கேன்சல்.. விஜய் சம்பவம்..

Posted by - May 2, 2026 0
விஜயை காண நேற்றிரவு முதல் பொதுமக்கள் வேளாங்கண்ணி ஆலயத்துக்கு படையெடுத்தனர். புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் அதிகாலை திருப்பலி நடக்கும்போது விஜய் வராமல் இருந்ததால் குழப்பமடைந்தனர். தமிழக…

பணப்பட்டுவாடாவில் முறைகேடு – கரூர் டீமை களமிறக்கிய செந்தில் பாலாஜி!

Posted by - May 1, 2026 0
கோவையில் திமுகவினர் முறையாக பணப்பட்டுவாடா செய்யவில்லை என கூறப்படும் நிலையில், அது குறித்து விசாரிக்க செந்தில் பாலாஜி கரூரில் இருந்து தனது ஆதரவாளர்களை களமிறக்கியுள்ளதாக கூறப்படுகிறது. .சட்டமன்ற…

யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? தவெக தலைவர் விஜய் கண்டனம்!

Posted by - December 30, 2025 0
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னை : திருத்தணி ரயில் சம்பவம் தமிழகத்தில் பெரும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *