இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ஆப்கானிஸ்தான்; சீனா, பாகிஸ்தானுடன் கைகோர்ப்பு – நடந்தது என்ன.?

188 0

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த வழித்தடத்தை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க இன்று 3 நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

சீனாவில் நடைபெற்ற கூட்டத்தின் போது, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை, ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க, மூன்று நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த திட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியாவிற்கு ஆதரவளித்த ஆப்கானிஸ்தான், தற்போது சீனாவுடன் கைகோர்த்துள்ளது.

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்

சீனா, பாகிஸ்தானில் ஏராளமான முதலீட்டை செய்துள்ளது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். அதில் முக்கியமான ஒன்று, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம். இது வடக்கு-தெற்கு பொருளாதார பாதை எனவும் அழைக்கப்படுகிறது. இந்த வழித்தடம், பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய முக்கியமான பொருளாதார பாலம். இதன் மொத்த கட்டுமானச் செலவு சுமார் 54 பில்லியன் டாலர்களாகும்.

சிபிஇசி என அழைக்கப்படும் இந்த வழித்தடம், சீனாவின் காசர் நகரையும், பாகிஸ்தானின் குவாடர் நகரையும் சாலை, குழாய்கள், இருப்புப் பாதை வழியே இணைக்கும் திட்டமாகும். இந்த பொருளாதார பாதை, பாகிஸ்தானின் உள்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவை பலப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படுகிறது. மேலும், உள்கட்டமைப்பு மட்டுமல்லாமல், சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கு இடையேயான ஒத்துழைப்புப் பகுதிகளையும் இத்திட்டம் கொண்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, இந்த வழித்தடத்தால், ஐரோப்பாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் மேம்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்கப்படும் சிபிஇசி

இந்த சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்கப்பட உள்ளது. இன்று சீனாவின் பெய்ஜிங்கில் மூன்று நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் பங்கேற்ற கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெறியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் மற்றும் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த முத்தரப்பு சந்திப்பின்போது, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை, ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க 3 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் தேசிய கண்ணியத் பாதுகாக்க சீனா ஆதரவளிப்பதாக, சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இத்தகவலை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் உறுதி செய்துள்ளார்.

Related Post

2 கருப்பைகள் கொண்ட பெண்: இரண்டிலும் கர்ப்பம் தரித்த அதிசயம்

Posted by - November 18, 2023 0
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்தவர் கெல்சி ஹேட்சர். 32 வயதான இவர் 2 கருப்பைகள் கொண்ட பெண்ணாக இருக்கிறார். பிறப்பிலேயே அரிய கருப்பை கொண்ட இவருக்கு காலேப்…

ட்ரம்புடன் கைகோர்ப்பு.. இந்தியாவிற்கு எதிராக பேசும் கனடா பிரதமர், ஊறுகாய் ஆகும் பாக்., பிரச்னை

Posted by - October 8, 2025 0
இந்தியா – பாகிஸ்தான் மோதலை குறிப்பிட்டு அமெரிக்க அதிபர் ட்ரம்பை, கனடா பிரதமர் பாராட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதலை அமெரிக்க…

இந்தியாவின் இருமுனை தாக்குதல் – ஒருபக்கம் ஆயுதம், மறுபக்கம் தண்ணீரா.?

Posted by - May 10, 2025 0
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், பாகிஸ்தான் மீது இருமுனை தாக்குதலாக, சலால் அணையிலிருந்து தண்ணீரை திறந்துள்ளது இந்தியா. இந்தியா –…

பணியின்போது அரசு அதிகாரிகள் ஐ போன் பயன்படுத்த தடை – சீனா அதிரடி

Posted by - September 7, 2023 0
பீஜிங்: உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை ஐபோன் மற்றும் ஐபேடு. சீனாவிலும் ஐ-போன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சீனர்களில் பலரும்…

ஜப்பான் கதிரியக்க நீரை வெளியேற்றியதும் சீனா எடுத்த அதிரடி முடிவு…!

Posted by - August 24, 2023 0
புகுஷிமா அணுஉலை நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை ஜப்பான் இன்று பசிபிக் கடலில் வெளியேற்றியது. ஜப்பான் வெளியேற்றிய நிலையில், அந்நாட்டு கடல் உணவுகள் இறக்குமதிக்கு, சீனாவின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *