இனிமே தாறுமாறா கரண்ட் பில் உயராது..

100 0

தமிழ்நாட்டில் திடீரென வீடுகளில் அபரிமிதமான மின்கட்டணம் வருவதை தடுக்க தமிழக அரசு புதிய நடைமுறையை செயல்படுத்த உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் தற்போது மின்மீட்டர் மூலமாக மின்சார அளவு கணக்கிடப்பட்டு அதற்கு ஏற்றாற்போ மின்கட்டணம் பெறப்பட்டு வருகிறது. ஆனால், பலரது வீடுகளிலும் மின் கட்டணம் அந்த வீட்டின் அளவு மற்றும் பயன்பாட்டிற்கு தொடர்பே இல்லாத அளவிற்கு மின்கட்டணம் அவ்வப்போது பதிவாகி வருகிறது.

திடீரென எகிறும் மின்கட்டணம்:

அதாவது, மின் விசிறி, தொலைக்காட்சி, மிக்சி, விளக்குகள் பயன்படுத்தும் சராசரியான வீட்டின் மின்கட்டணமே ரூபாய் 10 ஆயிரம் வந்த கொடுமை அரங்கேறியதும் தமிழ்நாட்டில் நடந்தது.கணக்கெடுப்பு தவறாக நடந்து இருந்து இந்த தவறு அரங்கேறியிருந்தாலே, மின் மீட்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் இந்த தவறு நடந்து இருந்தாலோ இதுபோன்று நடந்திருக்கலாம். இந்த கட்டணத்தை கணினியில் பதிவேற்றிவிட்டால் அந்த கட்டணத்தை பயனாளர் கட்ட வேண்டிய அவலமும் இருந்து வருகிறது.

தொடர் புகார்கள்:

தற்போதுள்ள நடைமுறையில் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டிற்கும் மின் கட்டணத்திற்கும் சம்பந்தமே இல்லை என்று தெரிந்தாலும், கட்டணத் தொகையை செலுத்திய பிறகே அதை புகாராக அளிக்க முடியும்.

அந்த புகார் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு கணக்கீடு தவறு என்று கண்டறியப்பட்டால் அடுத்தடுத்த மின்கட்டணத்தில் கழித்துக் கொள்ளப்படும். இந்த முறையில் எப்படியானாலும் நுகர்வோரே பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் இருந்து வருகிறது. இந்த சிக்கலால் தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரும் வேறு வழியின்றி அதிக மின்கட்டணத்தையும் செலுத்திய பரிதாபமும் நடந்தது.

தீர்வு கண்டுபிடித்த மின்வாரியம்:

அதன்படி, இந்த சிக்கலுக்கு தீர்வு காண மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வழக்கமாக மின்கட்டணம் வரும் வீட்டில் திடீரென தொடர்பே இல்லாமல் அபரிமிதமான மின்கட்டணம் வந்தால் அதாவது, 500 ரூபாய் கட்டணம் வரும் வீட்டில் ரூபாய் 5 ஆயிரம் மின்கட்டணம் வந்தால் மின் கட்டணத்திற்கான பதிவேட்டில் கணினி இனி பதிவு செய்யாது.

இதையடுத்து, மின் கட்டணம் அபரிமிதமாக வந்த வீட்டிற்கு மின்வாரிய அதிகாரி நேரில் சென்று ஆய்வு செய்வார். அதன்பின்பு, அந்த வீட்டில் பயன்படுத்தப்பட்ட அளவிற்கு மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்பட்டு மின்கட்டணம் வசூல் செய்யப்படும். இதனால், திடீர் திடீரென ஆயிரக்கணக்கில் மின்கட்டணம் வந்து அதிர்ச்சிக்குள்ளாகும் மக்கள் நிம்மதி அடைவார்கள்.

மென்பொருள்:

இதற்கான சாஃப்ட்வேர் எனப்படும் மென்பொருள் தயாரிக்கும் பணிகளை தமிழக அரசு விரைவுப்படுத்தியுள்ளது. அந்தந்த பயனாளர் எந்தளவு மின்சாரம் பயன்படுத்துவார் என்பதை அடிப்படையாக கொண்டு இந்த மென்பொருள் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. விரைவில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் இந்த நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

இடைநிலை ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டம்..பலர் மயக்கம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த விளக்கம்.

Posted by - December 29, 2022 0
சென்னை: ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் மூன்று நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விடிய விடிய முழக்கமிட்ட ஆசிரியர்களில் பலர்…

உடல், மனம் இரண்டும் சமநிலையை அடைய உதவும் பார்சுவ பகாசனம்

Posted by - March 2, 2023 0
வடமொழியில் ‘பகா’ என்பது நாரையைக் குறிக்கும் சொல். ஆனால், பகாசனம் என்பது Crow Pose என்றும் Crane Pose என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால், இரண்டும் வெவ்வேறு ஆசனங்கள்.…

பள்ளியில் கூல் லிப் பயன்படுத்தும் மாணவர்கள் – நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வேண்டுகோள்..!!

Posted by - August 24, 2024 0
சென்னையில் உள்ள பள்ளிகளில் கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்கள் சர்வசாதாரணமாக கிடைப்பதாக வெளிவரும் செய்திகள் பேரதிர்ச்சி அளிப்பதாக தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் .…

விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

Posted by - December 10, 2024 0
இதக்கூட கவனிக்க மாட்டிங்களா என்று உளவுத்துறை தலைமையை அழைத்த ஸ்டாலின் லெப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் வேங்கைவயல் விவகாரத்தை…

அன்றே மோசடி செய்த நிகிதா.. அதுவும் அவர் பேர்ல? அஜித்குமார் மரண வழக்கில் புதிய திருப்பம்

Posted by - July 3, 2025 0
2011ல் துணை முதலமைச்சரின் பிஏ-வை வைத்து வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கின் எஃப் ஐஆர் தற்போது வெளியாகியுள்ளது. திருப்புவனம் இளைஞர் அஜித்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *