இனிமே தாறுமாறா கரண்ட் பில் உயராது..

98 0

தமிழ்நாட்டில் திடீரென வீடுகளில் அபரிமிதமான மின்கட்டணம் வருவதை தடுக்க தமிழக அரசு புதிய நடைமுறையை செயல்படுத்த உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் தற்போது மின்மீட்டர் மூலமாக மின்சார அளவு கணக்கிடப்பட்டு அதற்கு ஏற்றாற்போ மின்கட்டணம் பெறப்பட்டு வருகிறது. ஆனால், பலரது வீடுகளிலும் மின் கட்டணம் அந்த வீட்டின் அளவு மற்றும் பயன்பாட்டிற்கு தொடர்பே இல்லாத அளவிற்கு மின்கட்டணம் அவ்வப்போது பதிவாகி வருகிறது.

திடீரென எகிறும் மின்கட்டணம்:

அதாவது, மின் விசிறி, தொலைக்காட்சி, மிக்சி, விளக்குகள் பயன்படுத்தும் சராசரியான வீட்டின் மின்கட்டணமே ரூபாய் 10 ஆயிரம் வந்த கொடுமை அரங்கேறியதும் தமிழ்நாட்டில் நடந்தது.கணக்கெடுப்பு தவறாக நடந்து இருந்து இந்த தவறு அரங்கேறியிருந்தாலே, மின் மீட்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் இந்த தவறு நடந்து இருந்தாலோ இதுபோன்று நடந்திருக்கலாம். இந்த கட்டணத்தை கணினியில் பதிவேற்றிவிட்டால் அந்த கட்டணத்தை பயனாளர் கட்ட வேண்டிய அவலமும் இருந்து வருகிறது.

தொடர் புகார்கள்:

தற்போதுள்ள நடைமுறையில் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டிற்கும் மின் கட்டணத்திற்கும் சம்பந்தமே இல்லை என்று தெரிந்தாலும், கட்டணத் தொகையை செலுத்திய பிறகே அதை புகாராக அளிக்க முடியும்.

அந்த புகார் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு கணக்கீடு தவறு என்று கண்டறியப்பட்டால் அடுத்தடுத்த மின்கட்டணத்தில் கழித்துக் கொள்ளப்படும். இந்த முறையில் எப்படியானாலும் நுகர்வோரே பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் இருந்து வருகிறது. இந்த சிக்கலால் தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரும் வேறு வழியின்றி அதிக மின்கட்டணத்தையும் செலுத்திய பரிதாபமும் நடந்தது.

தீர்வு கண்டுபிடித்த மின்வாரியம்:

அதன்படி, இந்த சிக்கலுக்கு தீர்வு காண மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வழக்கமாக மின்கட்டணம் வரும் வீட்டில் திடீரென தொடர்பே இல்லாமல் அபரிமிதமான மின்கட்டணம் வந்தால் அதாவது, 500 ரூபாய் கட்டணம் வரும் வீட்டில் ரூபாய் 5 ஆயிரம் மின்கட்டணம் வந்தால் மின் கட்டணத்திற்கான பதிவேட்டில் கணினி இனி பதிவு செய்யாது.

இதையடுத்து, மின் கட்டணம் அபரிமிதமாக வந்த வீட்டிற்கு மின்வாரிய அதிகாரி நேரில் சென்று ஆய்வு செய்வார். அதன்பின்பு, அந்த வீட்டில் பயன்படுத்தப்பட்ட அளவிற்கு மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்பட்டு மின்கட்டணம் வசூல் செய்யப்படும். இதனால், திடீர் திடீரென ஆயிரக்கணக்கில் மின்கட்டணம் வந்து அதிர்ச்சிக்குள்ளாகும் மக்கள் நிம்மதி அடைவார்கள்.

மென்பொருள்:

இதற்கான சாஃப்ட்வேர் எனப்படும் மென்பொருள் தயாரிக்கும் பணிகளை தமிழக அரசு விரைவுப்படுத்தியுள்ளது. அந்தந்த பயனாளர் எந்தளவு மின்சாரம் பயன்படுத்துவார் என்பதை அடிப்படையாக கொண்டு இந்த மென்பொருள் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. விரைவில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் இந்த நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.2½ லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய அதிகாரி மீது வழக்குப்பதிவு

Posted by - November 4, 2023 0
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையில் போலீசார் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு…

தாய்க்கு தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லம் கட்டிய மகன்

Posted by - June 10, 2023 0
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் . இவரது மனைவி ஜெய்லானி பீவி. இவர்களுக்கு 4 மகள், 1 மகன் உள்ளனர். இவர்…

ஆட்டம் காணும் திமுக? அமைச்சர் கே.என். நேரு, மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை – நெருங்கும் தேர்தல்

Posted by - April 7, 2025 0
தமிழக அமைச்சர் கே.என். நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கே.என். நேரு…

சிவராத்திரி: வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி

Posted by - February 17, 2023 0
கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து…

தொகுதி வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்தில் ஒரு வார்ததை கூட பேசாத திமுக எம்.பி.க்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Posted by - April 10, 2024 0
வரும் நாடாளுமன்றத் தேர்தல், நமது  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்கவிருக்கும் தேர்தல். நாட்டை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *