qq

எந்தப் பிரச்சினைக்கும் போர் தீர்வாகாது!

265 0

ஈரான் முதலில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததற்கான தகவல்கள் இல்லை என அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பான பென்டகன் கூறியிருக்கிறது. ஈரானால் இஸ்ரேலுக்குத்தான் அச்சுறுத்தலே தவிர, அமெரிக்காவுக்கு அல்ல என்று ஜனநாயகக் கட்சியினரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

ஈரான் அணு ஆயுதத்தையும் ஏவுகணைகளையும் தயாரிப்பதைத் தடுப்பதுதான் நோக்கம் என டிரம்ப் அளித்திருக்கும் விளக்கமும் பலவீனமானது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இயற்கை யுரேனியத்துக்கு நிகராக நீர்த்துப்போகவைக்க ஈரான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் சமாதான முயற்சியில் ஈடுபட்ட ஓமன் சுட்டிக்காட்டியிருக்கிறது.

உச்சத் தலைவரையே இழந்துவிட்ட நிலையில், கட்டுப்பாடற்ற நிலைக்குச் சென்றிருக்கும் ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது மட்டுமல்லாமல் ஹோட்டல்கள், தூதரகங்கள் உள்ளிட்ட பிற கட்டிடங்களையும் தாக்கிவருகிறது; இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு எண்ணெய் எடுத்துச் செல்வதற்கான முதன்மை வழியான ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி பயங்கரவாத அமைப்பு செங்கடல் பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்திருக்கிறது. செங்கடல் வழியாக இந்தியாவின் 50% ஏற்றுமதி நடந்துவருகிறது; கச்சா எண்ணெய், புதைபடிவ எரிபொருள்கள் உள்ளிட்ட இறக்குமதிப் பொருள்கள் செங்கடல் வழியாகத்தான் இந்தியாவுக்கு வருகின்றன. ஏராளமான விமானங்கள் ரத்து, வான் எல்லை மூடல் என மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்திருக்கிறது.

மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள 90 லட்சம் இந்தியர்களின் பாதுகாப்பும் கேள்விக்குரியதாகி இருக்கிறது. காமேனி யதேச்சதிகார ஆட்சியை நடத்தியவர் என்கிற விமர்சனங்கள் இருந்தாலும், அவரது மறைவால் ஈரானில் சமூக அளவில் பெரிய மாற்றம் வரும் என எதிர்பார்க்க முடியாது. மறுபுறம், போர்களுக்கு முடிவுகட்டுவதாகப் பேசிவந்த டிரம்ப் அதற்கு முரணாகச் செயல்படுகிறார்.

வெனிசுலா, ஈரானைத் தொடர்ந்து கியூபா மீதும் டிரம்ப் கண்வைத்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரானுக்கு ஆதரவாகச் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளைக் குறிவைத்து, லெபனானிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது.

சீனா, ரஷ்யா, ஸ்பெயின் போன்ற சில நாடுகளே அமெரிக்காவையும் இஸ்ரேலையும் கண்டித்திருக்கின்றன. ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலும் இப்பிரச்சினை தொடர்பாக உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை.

இந்தப் பிரச்சினை தொடர உலக நாடுகள் அனுமதிக்கக் கூடாது. அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். போர்கள் அழிவைத் தவிர வேறு எந்த நன்மையையும் மனிதகுலத்துக்குத் தராது என்பதை அனைவரும் உணர வேண்டும்!

சீனா, ரஷ்யா, ஸ்பெயின் போன்ற சில நாடுகளே அமெரிக்காவையும் இஸ்ரேலையும் கண்டித்திருக்கின்றன. ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலும் இப்பிரச்சினை தொடர்பாக உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை.

இந்தப் பிரச்சினை தொடர உலக நாடுகள் அனுமதிக்கக் கூடாது. அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். போர்கள் அழிவைத் தவிர வேறு எந்த நன்மையையும் மனிதகுலத்துக்குத் தராது என்பதை அனைவரும் உணர வேண்டும்!

Related Post

இன்று உலக கிறிஸ்துமஸ் திருநாள்- ஒரு பார்வை

Posted by - December 25, 2023 0
உலகம் முழுவதும் மிகவும் ரசிக்கப்படும் பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் ஒன்றாகும். இந்த நாள் மகிழ்ச்சியையும் அன்பையும் குறிக்கிறது. எந்த மதத்தைப் பின்பற்றினாலும், அனைவராலும் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது.…

காசா முழுவதும் இஸ்ரேல் தாக்குதலில் ஒரே நாளில் 100 பேர் பலி

Posted by - December 20, 2023 0
இஸ்ரேல்- காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் இரண்டரை மாதங்களுக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது. இதில் காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி…

”நாங்க மட்டும் இல்லைன்னா” இந்தியாவை வெறுப்பேற்றி பார்க்கும் அமெரிக்கா.. பாக்., உடனான உறவு

Posted by - August 13, 2025 0
இந்தியா மற்றும் பாகிஸ்தான் உடனான எங்களது உறவில் எந்த மாற்றமும் இல்லை என, அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அண்மைக்கால நடவடிக்கைகள் இந்தியாவை சீண்டிப்பார்க்கும் விதமாக குற்றச்சாட்டுகள்…

இந்தியாவுக்காக களமிறங்கிய ரஷ்யா; அமெரிக்க வரி மிரட்டல் சட்டவிரோதமானது என சாடல்

Posted by - August 6, 2025 0
இந்தியாவிற்கு அமெரிக்கா விடுக்கும் வரி மிரட்டலும், வர்த்தக அழுத்தமும் சட்டவிரோதமானது என இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய…

நாடு முழுவதும் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

Posted by - December 25, 2023 0
நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வேளாங்கண்ணியில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் திரளானோர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *