Generated Image November 22 2025 5 51PM

“எஸ்ஐஆர் பூர்த்தி செய்யணும்! ஓடிபியை சொல்லுங்கள்”னு யார் கேட்டாலும் தராதீங்க! சைபர் கிரைம் வார்னிங்,…

176 0

புதுவை: வாக்காளர் திருத்த சிறப்பு தீவிர திருத்த பட்டியலை (SIR) நிரப்புவதற்காக யாராவது போன் செய்து ஓடிபி கேட்டால் கொடுக்க வேண்டாம் என புதுவை போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு யாராவது போன் செய்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தமிழகத்தை போல் புதுவையிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த எஸ்ஐஆர் படிவங்களை பிஎல்ஓ அதிகாரிகள் வீடு வீடாக கொடுத்து வருகிறார்கள். அதில் யாருக்காவது பூர்த்தி செய்ய தெரியாவிட்டால் அதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்று பூர்த்தி செய்து கொடுத்து விடலாம். இந்த படிவத்தில் பூர்த்தி செய்து அதிகாரிகள் சரிபார்த்தபிறகுதான் ஒவ்வொருவரது பெயரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த நிலையில் சிலருக்கு எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்வது தொடர்பாக பேசுவதாக கூறி ஓடிபி எண்களை கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு யார் ஓடிபி கேட்டாலும் கொடுக்க வேண்டாம். “எங்களுடைய வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் (பிஎல்ஓ) சென்று பூர்த்திச் செய்து கொள்கிறோம்” என கூறி இணைப்பை துண்டித்துவிடுங்கள்.உங்களை கட்டாயப்படுத்தி கேட்கும் பட்சத்தில் உங்களுக்கு அழைப்பு வந்த எண்ணை குறித்து வைத்துக் கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது சைபர் கிரைம் காவல் நிலையத்திலோ அல்லது சைபர் கிரைம் காவல் நிலையத்திலோ அல்லது 1930 மூலமாகவோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எனவே உங்கள் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலரின் பெயர், அவரின் தொலைப் பேசி எண் ஆகியவற்றை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். இது போல் யாராவது போன் செய்தால் பிஎல்ஓ அதிகாரிகளை தொடர்பு கொண்டு சந்தேகத்தை தீர்த்துக் கொண்டு தெளிவுப்படுத்திக் கொள்ளலாம். 0413 – 2276144, 94892 05246 மற்றும் ஆகிய இலவச எண்களிலும், ‘cybercell-police@py.gov.in’ மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம். இணையத்தில் புகார் அளிக்க ‘www.cybercrime.gov.in’ ஐ பயன்படுத்தவும் என தெரிவித்துள்ளனர்.

Related Post

`திருட்டுப்போன பைக்கை ஓட்டி வந்த போலீஸ்’ – தஞ்சாவூர் டி.ஐ.ஜி-யிடம் புகார் அளித்த விவசாயி

Posted by - December 2, 2022 0
“திருட்டுப்போன பைக்கை வாய்மேடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸ் ஒருவர் பயன்படுத்திவருவது தெரியவந்தது. போலீஸ் என்பதால் பயந்துபோன நான், பைக் குறித்து எதுவும் கேட்கவில்லை.” ஒரு வருடத்துக்கு…

விறகுக்கடை முதலாளியாக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் தளபதியாக மாறியது எப்படி?

Posted by - August 23, 2024 0
விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் நம்பிக்கைக்குரியவராக எப்படி மாறினார்? யார் இந்த புஸ்ஸி ஆனந்த்? விரிவாக பார்க்கலாம்.நடிகர் விஜய் தனது அரசியல்…

ரூ.1000 வந்துருக்கா.. வங்கி அக்கவுண்ட் பேலன்ஸ் செக் பண்ண எளிய வழி.!

Posted by - September 15, 2023 0
மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிரகாரிக்கப்பட்டால் மேல் முறையீடு செய்வதற்கு அரசு வழிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1 கோடியே 6…

மின் கட்டண உயர்வு: அண்ணாமலை கண்டனம்!

Posted by - July 16, 2024 0
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், பால் விலை, பத்திரப் பதிவு கட்டணம், என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி,…

மகா சிவராத்திரி: ராமேசுவரம் கோவிலில் நாளை இரவு முழுவதும் நடை திறந்திருக்கும்

Posted by - February 17, 2023 0
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா கடந்த 11-ந்தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சாமி புறப்பாடு நடைபெற்று வருகின்றது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *