Generated Image November 24 2025 10 39AM

கியூஆர் கோடு, புகைப்படத்துடன் புதிய ஆதார் அட்டை!

200 0

புதுடெல்லி: ஆ​தார் அட்டை தவறாக பயன்​படுத்​தப்​படு​வதை தடுக்க வரும் டிசம்​பரில் புதிய விதி​​களை அமல்​படுத்த இந்​திய தனித்​துவ அடை​யாள ஆணை​யம் (யுஐடிஏஐ) திட்​ட​மிட்டுள்​ளது. இதன்​படி வருங்​காலத்​தில் ஆதார் அட்​டை​யில் புகைப்​படம், கியூஆர் கோடு மட்​டுமே இடம்​பெறும்.

இதுகுறித்து, யுஐடிஏஐ தலைமை செயல் அதி​காரி புவனேஷ் குமார் அண்​மை​யில் ஆன்​லைன் மூலம் நடை​பெற்ற கருத்தரங்கில் கூறிய​தாவது: அரசு, தனி​யார் நிறு​வனங்​கள் சார்பில் பல்​வேறு பணி​களுக்​காக பொது​மக்​களிடம் ஆதார் அட்டை நகல்​கள் கோரப்​படு​கிறது. இதன்​மூலம் தனி​நபர், நிறுவனங்​களுக்கு பொது​மக்​களின் ஆதார் விவரங்​கள் கிடைக்கின்​றன. குறிப்​பாக ஓட்​டல்​கள், மொபைல் போன் சிம் விற்பனை​யாளர்​கள், கருத்​தரங்​கு​களை நடத்​து​வோருக்கு ஆதார் விவரங்​கள் கிடைக்​கின்​றன. இதை சிலர் தவறாக பயன்​படுத்தி ஆன்​லைன் மோசடிகளில் ஈடு​படு​கின்​றனர்.

ஆதார் அட்டை தவறாக பயன்​படுத்​தப்​படு​வதை தடுக்க வரும் டிசம்​பரில் புதிய விதி​கள், மாற்​றங்​களை அமல்​படுத்த திட்​ட​மிட்டு உள்​ளோம். முதல்​கட்​ட​மாக ஆதார் செயலி அறி​முகம் செய்​யப்பட உள்​ளது. தற்​போது நடை​முறை​யில் உள்ள எம்​ஆ​தா​ருக்கு பதிலாக புதிய செயலி அறி​முகம் செய்​யப்​படும். இதன்​மூலம் எந்​தவொரு இடத்​தி​லும் பொது​மக்​கள் ஆதார் நகலை கொடுக்க வேண்​டிய அவசி​யம் இருக்​காது. ஆதார் செயலி வாயி​லாக டிஜிட்​டல் முறையில் தகவல்​களை அளிக்க முடி​யும்.

அடுத்த கட்​ட​மாக ஆதார் அட்​டை​யில் புகைப்​படம் மற்​றும் கியூஆர் கோடு மட்​டுமே அச்​சிட்டு வழங்​கும் திட்​டம் செயல்​படுத்தப்​படும். குறிப்​பாக 12 இலக்க எண் ஆதார் அட்​டை​யில் அச்சிடப்​ப​டாது. எனினும் அட்​டை​தா​ரரின் பெயர் இடம்​பெற வாய்ப்​பிருக்​கிறது. ஆனால் நிச்​சய​மாக முகவரி இடம்​பெறாது. பிரத்​யேக செயலி அல்​லது யுஐடிஏஐ நிறு​வனத்​தால் அங்கீகரிக்கப்​பட்ட கரு​வி​யால் மட்​டுமே கியூஆர் கோடை ஸ்கேன் செய்து தகவல்​களை பெற முடி​யும். இதன்​மூலம் மோசடிகள் முழுமை​யாக தடுக்​கப்​படும்​.இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

Related Post

கடனை திருப்பி கொடுக்காவிட்டால் வீடு தேடி வரும் ‘சாக்லேட்’ பரிசு

Posted by - September 21, 2023 0
மும்பை: கடன் தவணையை உரிய தேதியில் திருப்பித் தராத வாடிக்கையாளர்களின் இல்லத்துக்கு சென்று ‘சாக்லேட்’ அளிக்கும் நூதன திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி…

தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. – காப்பாற்றுவது யார்?

Posted by - August 8, 2025 0
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள வரி காரணமாக தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு நடக்கும் 1.75 லட்சம் கோடி ஏற்றுமதி வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கும் அபாயம் உண்டாகியுள்ளது.…

கேரளாவில் புதிதாக 300 பேருக்கு கொரோனா பாதிப்பு- 3 பேர் உயிரிழப்பு

Posted by - December 21, 2023 0
நாட்டிலேயே அதிக அளவிளாக கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது…

பூரண மதுவிலக்கு – முதலமைச்சர் அதிரடி…

Posted by - March 13, 2025 0
சட்டசபையில் 2025-26-ம் நிதியாண்டிற்கு ரூ.13 ஆயிரத்து 600 கோடிக்கான பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பெண்கள், மாணவர்களுக்காக பல்வேறு…
idfc bank

590 கோடி மோசடி: IDFC First Bank பங்கு 20% சரிவு – முதலீட்டாளர்களுக்கு ₹14,000 கோடி இழப்பு!

Posted by - February 25, 2026 0
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான IDFC First Bank பெரிய மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ளது. வங்கியின் சண்டிகர் கிளையில் நடந்ததாக கூறப்படும் ₹590 கோடி முறைகேடு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *