கியூஆர் கோடு, புகைப்படத்துடன் புதிய ஆதார் அட்டை!

139 0

புதுடெல்லி: ஆ​தார் அட்டை தவறாக பயன்​படுத்​தப்​படு​வதை தடுக்க வரும் டிசம்​பரில் புதிய விதி​​களை அமல்​படுத்த இந்​திய தனித்​துவ அடை​யாள ஆணை​யம் (யுஐடிஏஐ) திட்​ட​மிட்டுள்​ளது. இதன்​படி வருங்​காலத்​தில் ஆதார் அட்​டை​யில் புகைப்​படம், கியூஆர் கோடு மட்​டுமே இடம்​பெறும்.

இதுகுறித்து, யுஐடிஏஐ தலைமை செயல் அதி​காரி புவனேஷ் குமார் அண்​மை​யில் ஆன்​லைன் மூலம் நடை​பெற்ற கருத்தரங்கில் கூறிய​தாவது: அரசு, தனி​யார் நிறு​வனங்​கள் சார்பில் பல்​வேறு பணி​களுக்​காக பொது​மக்​களிடம் ஆதார் அட்டை நகல்​கள் கோரப்​படு​கிறது. இதன்​மூலம் தனி​நபர், நிறுவனங்​களுக்கு பொது​மக்​களின் ஆதார் விவரங்​கள் கிடைக்கின்​றன. குறிப்​பாக ஓட்​டல்​கள், மொபைல் போன் சிம் விற்பனை​யாளர்​கள், கருத்​தரங்​கு​களை நடத்​து​வோருக்கு ஆதார் விவரங்​கள் கிடைக்​கின்​றன. இதை சிலர் தவறாக பயன்​படுத்தி ஆன்​லைன் மோசடிகளில் ஈடு​படு​கின்​றனர்.

ஆதார் அட்டை தவறாக பயன்​படுத்​தப்​படு​வதை தடுக்க வரும் டிசம்​பரில் புதிய விதி​கள், மாற்​றங்​களை அமல்​படுத்த திட்​ட​மிட்டு உள்​ளோம். முதல்​கட்​ட​மாக ஆதார் செயலி அறி​முகம் செய்​யப்பட உள்​ளது. தற்​போது நடை​முறை​யில் உள்ள எம்​ஆ​தா​ருக்கு பதிலாக புதிய செயலி அறி​முகம் செய்​யப்​படும். இதன்​மூலம் எந்​தவொரு இடத்​தி​லும் பொது​மக்​கள் ஆதார் நகலை கொடுக்க வேண்​டிய அவசி​யம் இருக்​காது. ஆதார் செயலி வாயி​லாக டிஜிட்​டல் முறையில் தகவல்​களை அளிக்க முடி​யும்.

அடுத்த கட்​ட​மாக ஆதார் அட்​டை​யில் புகைப்​படம் மற்​றும் கியூஆர் கோடு மட்​டுமே அச்​சிட்டு வழங்​கும் திட்​டம் செயல்​படுத்தப்​படும். குறிப்​பாக 12 இலக்க எண் ஆதார் அட்​டை​யில் அச்சிடப்​ப​டாது. எனினும் அட்​டை​தா​ரரின் பெயர் இடம்​பெற வாய்ப்​பிருக்​கிறது. ஆனால் நிச்​சய​மாக முகவரி இடம்​பெறாது. பிரத்​யேக செயலி அல்​லது யுஐடிஏஐ நிறு​வனத்​தால் அங்கீகரிக்கப்​பட்ட கரு​வி​யால் மட்​டுமே கியூஆர் கோடை ஸ்கேன் செய்து தகவல்​களை பெற முடி​யும். இதன்​மூலம் மோசடிகள் முழுமை​யாக தடுக்​கப்​படும்​.இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

Related Post

இன்ஸ்டாவில் பழக்கம்: ரூம் போட்டு பிரிட்டிஷ் தோழியிடம் இந்தியர் செய்த லீலை! டெல்லியில் பரபரப்பு

Posted by - March 13, 2025 0
சமூக வலைதளங்களால் எந்த அளவுக்கு நன்மைகள் கொட்டிக்கிடக்கிறதோ அதே அளவுக்கு ஆபத்துகளும் சூழ்ந்திருக்கின்றன டெல்லி ஹோட்டலில் பிரிட்டிஷ் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் சந்தித்த நபரால் பாலியல் வன்கொடுமை…

கண் இமைக்கும் நேரத்தில் உருக்குலைந்த ரெயில்கள்.. விபத்து நேர்ந்தது எப்படி…?

Posted by - June 3, 2023 0
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று மலை 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 250க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி…

படுக்கையில் கட்டியணைத்தபடி கொடிய விஷப்பாம்புகளுடன் பயமின்றி தூங்கும் சிறுமி

Posted by - September 4, 2023 0
புதுடெல்லி: பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். சிலர் பாம்பை கையால் பிடித்தாலே பெரிய சாகசமாக நினைப்பது உண்டு. ஆனால் இதற்கெல்லாம் மேலாக அரியானா என்ற சிறுமி…

அய்யோ.. மீண்டும்.. மீண்டுமா? – சீனா செய்த பகீர் சம்பவம்.. புலம்பும் மக்கள்

Posted by - November 24, 2023 0
சீனாவில் நிமோனியா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு கண்காணிப்பு தகவல்களை பகிரும்படி WHO வலியுறுத்தல். சீனாவின் வடக்கு பகுதிகளில் குழந்தைகளுக்கு நிமோனியா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தொடர்ந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *