Generated Image November 24 2025 10 39AM

கியூஆர் கோடு, புகைப்படத்துடன் புதிய ஆதார் அட்டை!

174 0

புதுடெல்லி: ஆ​தார் அட்டை தவறாக பயன்​படுத்​தப்​படு​வதை தடுக்க வரும் டிசம்​பரில் புதிய விதி​​களை அமல்​படுத்த இந்​திய தனித்​துவ அடை​யாள ஆணை​யம் (யுஐடிஏஐ) திட்​ட​மிட்டுள்​ளது. இதன்​படி வருங்​காலத்​தில் ஆதார் அட்​டை​யில் புகைப்​படம், கியூஆர் கோடு மட்​டுமே இடம்​பெறும்.

இதுகுறித்து, யுஐடிஏஐ தலைமை செயல் அதி​காரி புவனேஷ் குமார் அண்​மை​யில் ஆன்​லைன் மூலம் நடை​பெற்ற கருத்தரங்கில் கூறிய​தாவது: அரசு, தனி​யார் நிறு​வனங்​கள் சார்பில் பல்​வேறு பணி​களுக்​காக பொது​மக்​களிடம் ஆதார் அட்டை நகல்​கள் கோரப்​படு​கிறது. இதன்​மூலம் தனி​நபர், நிறுவனங்​களுக்கு பொது​மக்​களின் ஆதார் விவரங்​கள் கிடைக்கின்​றன. குறிப்​பாக ஓட்​டல்​கள், மொபைல் போன் சிம் விற்பனை​யாளர்​கள், கருத்​தரங்​கு​களை நடத்​து​வோருக்கு ஆதார் விவரங்​கள் கிடைக்​கின்​றன. இதை சிலர் தவறாக பயன்​படுத்தி ஆன்​லைன் மோசடிகளில் ஈடு​படு​கின்​றனர்.

ஆதார் அட்டை தவறாக பயன்​படுத்​தப்​படு​வதை தடுக்க வரும் டிசம்​பரில் புதிய விதி​கள், மாற்​றங்​களை அமல்​படுத்த திட்​ட​மிட்டு உள்​ளோம். முதல்​கட்​ட​மாக ஆதார் செயலி அறி​முகம் செய்​யப்பட உள்​ளது. தற்​போது நடை​முறை​யில் உள்ள எம்​ஆ​தா​ருக்கு பதிலாக புதிய செயலி அறி​முகம் செய்​யப்​படும். இதன்​மூலம் எந்​தவொரு இடத்​தி​லும் பொது​மக்​கள் ஆதார் நகலை கொடுக்க வேண்​டிய அவசி​யம் இருக்​காது. ஆதார் செயலி வாயி​லாக டிஜிட்​டல் முறையில் தகவல்​களை அளிக்க முடி​யும்.

அடுத்த கட்​ட​மாக ஆதார் அட்​டை​யில் புகைப்​படம் மற்​றும் கியூஆர் கோடு மட்​டுமே அச்​சிட்டு வழங்​கும் திட்​டம் செயல்​படுத்தப்​படும். குறிப்​பாக 12 இலக்க எண் ஆதார் அட்​டை​யில் அச்சிடப்​ப​டாது. எனினும் அட்​டை​தா​ரரின் பெயர் இடம்​பெற வாய்ப்​பிருக்​கிறது. ஆனால் நிச்​சய​மாக முகவரி இடம்​பெறாது. பிரத்​யேக செயலி அல்​லது யுஐடிஏஐ நிறு​வனத்​தால் அங்கீகரிக்கப்​பட்ட கரு​வி​யால் மட்​டுமே கியூஆர் கோடை ஸ்கேன் செய்து தகவல்​களை பெற முடி​யும். இதன்​மூலம் மோசடிகள் முழுமை​யாக தடுக்​கப்​படும்​.இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

Related Post

ஆந்திராவில் தவறான ஊசி போட்டதால் 100-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பலி

Posted by - June 19, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் பல நாடு மாவட்டம் முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நாய்களால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கு…

கண் இமைக்கும் நேரத்தில் உருக்குலைந்த ரெயில்கள்.. விபத்து நேர்ந்தது எப்படி…?

Posted by - June 3, 2023 0
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று மலை 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 250க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி…

திரும்பும் திசையெல்லாம் அழுகுரல் – வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நிதியுதவி..!!

Posted by - August 2, 2024 0
கேரள மாநிலம் வயநாடு அருகே ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களின் நிவாரண பணிக்காக பிரபல…

ஜெய்ப்பூரில் நில அதிர்வு- ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

Posted by - July 21, 2023 0
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை 4.09 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம்…

Post Office அக்கவுண்ட்டில் பணம் கட்ட க்யூவில் நிற்க வேண்டியிருக்கா..? வீட்டில் இருந்தே எந்நேரமும் பணம் செலுத்த எளிய வழி இதோ!

Posted by - December 21, 2022 0
போஸ்ட் ஆஃபிஸ் அட்டகாசமான வழி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இனி நீங்கள் வீட்டிலிருந்தபடியே போஸ்ட் ஆஃபிஸில் பரிவர்த்தனை செய்யலாம். சேமிப்பு என்பது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. பணத்தை செலவு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *