குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் பரிசு..

124 0

குழந்தை இல்லாத  ஒரு பெண்ணை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் வரை வெகுமதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இலவச பாலியல் உறவு மற்றும் பணம் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் பல்வேறு ஆண்களும் ஆர்வம் காட்டினர்.

பீகார் மாநிலத்தில் குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் கிடைக்கும் என விளம்பரம் செய்து ஆண்களிடம் மிகப்பெரிய அளவில் மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட நிலையில் நாளுக்கு நாள் பல்வேறு வகையில் மோசடி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பீகார் மாநிலத்தில் விசித்திரமான முறையில் மோசடி நடைபெற்றுள்ளது. அங்கு நவாடா நகரில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ‘அகில இந்திய கர்ப்பிணி வேலை’ என்ற பெயரில் ஆன்லைன் விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அதில் குழந்தை இல்லாத  ஒரு பெண்ணை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் வரை வெகுமதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இலவச  பாலியல் உறவு மற்றும் பணம் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் பல்வேறு ஆண்களும் இதில் கலந்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

காரணம், இந்த விஷயத்தில் கலந்து கொள்ளும் நீங்கள்  தோல்வியடைந்தாலும், பாதி பணம்   கிடைக்கும் என்று அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. இதற்காக ஒரு குறிப்பிட்டத்தக்க தொகை வசூலிக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு பெண் மாடல்களின் புகைப்படங்கள் அனுப்பப்பட்டு மேலும் ஆசையை அந்த கும்பல் தூண்டியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பதிவு கட்டணம், ஹோட்டல் கட்டணங்கள் போன்றவற்றுக்கு ஆரம்ப கட்டணங்களை இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களிடம் பல்வேறு முறைகளில் வசூலிக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்தை ஈஸியாக பெறலாம் என நம்பி பலரும் பணத்தை செலுத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் தங்களிடம் இருந்த பணம் கரைந்ததை உணர்ந்த ஆண்கள், தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்துறையினரை அணுகினால் வீணாக நம்முடைய பெயர் அல்லது குடும்பத்தினருக்கு களங்கம் ஏற்படலாம் என்பதால் யாரிடமும் வாயை திறக்காமல் இருந்துள்ளனர். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் சென்ற நிலையில் சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையில் நவாடாவைச் சேர்ந்த ரஞ்சன் குமார் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக ஒரு சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடியில் நான்கு மொபைல் போன்கள் பயன்படுத்தப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்டது. பணம் மற்றும் பாலியல் தேடும் அனைத்து வயது ஆண்களையும் கவர்ந்திழுக்கும் ஒரு கும்பல் நவாடா மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ் திமான் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக ஊடகங்களில் வரும் இதுபோன்ற கவர்ச்சிகரமான மற்றும் நம்ப முடியாத கூற்றுகளை நம்ப வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த குற்றத்தில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Related Post

2 ரெயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து.. 15 பேர் உயிரிழப்பு

Posted by - October 24, 2023 0
வங்காளதேசத்தில் இரண்டு ரெயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள்…

நாகலாந்தில் நிலச்சரிவு: ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் சுக்குநூறாக நசுங்கிய கார்கள்- வைரலாகும் வீடியோ

Posted by - July 5, 2023 0
நாகலாந்தில் திமாபூர் மற்றும் கோஹிமா இடையே சுமோகெடிமா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 29-ல் நேற்று மாலை ஏற்பட்ட நிலச்சரிவில் பெரிய பாறைகள் மலையில் இருந்து உருண்டு…

மகாராஷ்டிராவில் சோகம் – 24 மணி நேரத்தில் அரசு மருத்துவமனையில் 18 நோயாளிகள் பலி

Posted by - August 14, 2023 0
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே உள்ள கல்வா பகுதியில் சத்ரபதி சிவாஜி மாநகராட்சி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரே…

பாகிஸ்தானில் கல்லறைக்கு பூட்டு அணிவிக்கப்பட்ட விவகாரத்தில் புது டுவிஸ்ட் – என்ன ஆச்சு தெரியுமா?

Posted by - May 1, 2023 0
பாகிஸ்தான் நாட்டில் பெற்றோர் தங்களது மகள்களின் கல்லறையை பூட்டியதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. கல்லறையில் இருக்கும் பெண் சடலங்களுடன் மர்ம ஆசாமிகள் உடலுறவு…

கோவில் உண்டியலில் ரூ.100 கோடிக்கு காசோலை செலுத்திய பக்தர் – அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்

Posted by - August 25, 2023 0
அமராவதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பண்ணா வராகலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. இந்நிலையில், கோவில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *