‘ஜனநாயகன் பொங்கல் இல்லை’ சென்சார் வழக்கில் திடீர் திருப்பம்.

58 0

ஜனநாயகன்’ படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்க நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். தணிக்கை வாரியத் தலைவர் மேல்முறையீடு செய்த நிலையில், விசாரணை நடைபெற்றது.’ஜன நாயகன்’ படம் தொடர்பான பிரச்னைகளை, சீலிடப்பட்ட கவரில் தணிக்கை வாரியம் தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் நீதிபதி பி.டி.ஆஷா கேட்டறிந்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளித்தார்.நீதிபதி வெளியிட்ட தீர்ப்பில், “ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானது. அந்தப் புகாரை ஊக்கப்படுத்த முடியாது. ஒரு உறுப்பினரின் புகாரை கொண்டு படத்தை எப்படி மறு ஆய்வுக்கு அனுப்ப முடியும். படத்திற்கு யுஏ சான்றிதழ் அளித்த பிறகு தலைவருக்கான அதிகாரம் முடிந்தது. மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. விரைந்து யுஏ தணிக்கைச் சான்றிதழ் அளிக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியத் தலைவர் சார்பில் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், “மனுவாக தாக்கல் செய்துவிட்டு தெரிவியுங்கள், விசாரணைக்கு ஏற்பது குறித்து பரிசீலிக்கப்படும். பிற்பகல் விசாரணைக்கு எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.அதன்படி இந்த வழக்கு தொடர்பான விசாரணை உயர்நீதிமன்றத்தில் மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. அப்போது, ‘இன்றைய தினமே மேல் முறையீடு செய்ய என்ன அவசரம்?’ என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு தணிக்கை வாரியம் தரப்பில், “எங்களுக்கு உரிய கால அவகாசம் வழங்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தணிக்கை வாரிய தலைவரின் அதிகாரம் குறித்து நீதிபதி முடிவெடுத்துள்ளார். ஆனால் இது குறித்து விரிவாக விவாதித்திருக்க வேண்டும். நியாயமான அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.அதன்பின் பரிசீலித்திருக்க வேண்டும். படத்தை மறு ஆய்வு செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோராத நிலையில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்போது தலைமை நீதிபதி, “தணிக்கை வாரியத்துக்கு எதற்காக உரிய கால அவகாசம் வழங்காமல் 24 மணி நேரத்தில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதற்கான அவசியம் என்ன?” என கேள்வி எழுப்பினார். சென்சார் வாரியம் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கொடுக்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கை வரும் 21-ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி வரும் 21-ம் தேதி வரை படம் வெளியாக வாய்ப்பில்லை.

Related Post

விடாமுயற்சி: அஜித் குமாருடன் பிரச்சனை? படத்திலிருந்து விலகுகிறதா லைகா புரொடக்ஷன்ஸ்!

Posted by - August 24, 2023 0
துணிவு வெற்றிக்குப் பிறகு அஜித்குமாரின் அடுத்த படத்தை லைகா நிறுவன தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அஜித் மற்றும் தயாரிப்பு தரப்பிற்கு திரைக்கதை…

விஜய் தேவரகொண்டா அறிவிப்பு.. ராஷ்மிகாவா.. சமந்தாவா..? குழப்பத்தில் ரசிகர்கள்

Posted by - August 30, 2023 0
தெலுங்கு திரையுலகின் இளம் நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படம் வசூல் சாதனையை நிகழ்த்தியது. தொடர்ந்து இவர் நடிப்பில்…

ரீ ரிலீஸான தனுஷின் 3 – சிம்புவின் சிலம்பாட்டம்.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா?

Posted by - February 9, 2026 0
ரீ ரிலீஸ் தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக ரீ ரிலீஸ் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்கிறது. கில்லி, சச்சின், படையப்பா, மங்காத்தா ஆகிய…

ப்ளூ சட்டை மாறனை ட்வீட் மூலம் துவைத்தெடுத்த நடிகர் கலையரசன் – என்ன காரணம் தெரியுமா..!!

Posted by - November 4, 2024 0
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் கலையரசன் ப்ளூ சட்டை மாறனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது தற்போது செம வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…

அனைத்து காட்சிகளும் ரத்து! தியேட்டர் எடுத்த அதிர்ச்சி முடிவு

Posted by - May 13, 2023 0
ஃபர்ஹானா ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் ஃபர்ஹானா படம் நேற்று ரிலீஸ் ஆனது. அந்த படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *