கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!

162 0

கூட்டணிக் கட்சிகளுக்குள் இருந்தே இபிஎஸ்-க்கு தொடர்ந்து அழுத்தம் வருவதால் அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் என்று பாஜக தலைகள் கூறிவந்த நிலையில், டிடிவி தினகரனும் கூட்டணி ஆட்சிதான் என்றும் யார் முதலமைச்சர் என்பதை அமித்ஷாதான் முடிவு செய்வார் என்றும் கூறியிருப்பது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

கூட்டணிக் கட்சிகளுக்குள் இருந்தே இபிஎஸ்-க்கு தொடர்ந்து அழுத்தம் வருவதால் அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கூட்டணி ஆட்சிக்கு எதிராக பேசும் ஈபிஎஸ்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளை இப்போதே அனைத்துக் கட்சிகளும் தொடங்கி விட்டன. ’ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பிரச்சாரத்தை திமுகவும், ’மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரத்தை அதிமுகவும் கையெலெடுத்து தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தன்னுடைய பிரச்சாரத்தின்போது அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தொடர்ந்து கூட்டணி ஆட்சிக்கு எதிராக பேசிவருகிறார்.

முன்னதாக அதிமுக – பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்தே பாஜகவினர் 2026-ல் தமிழ் நாட்டில் கூட்டணி ஆட்சி தான் என்று கூறிவருகின்றனர். அமித்ஷா, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை என தொடர்ந்து அனைவரும் கூட்டணி ஆட்சி என்பதையே வலியுறுத்தி வருகின்றனர்.

அண்மையில் ஒரு தனியார் நாளிதழுக்கு அமித்ஷா அளித்த பேட்டியில் 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்று கேள்வி எழுப்பியதற்கு அதிமுகவில் இருந்து ஒருவர்தான் என்று சொன்னார். இது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், கூட்டணி ஆட்சி அமைக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் இல்லை. 2026-ல் எங்கள் ஆட்சி தான் என்று பதிலடி கொடுத்து வருகிறார்.

பின்னணியில் அமித்ஷா

இசூழலில்தான் தேசியஜனநாயக கூட்டணியில் உள்ள டிடிவி தினகரன், 2026-ல் கூட்டணி ஆட்சிதான் என்று கூறியுள்ளார். அதேபோல், யார் முதலமைச்சர் என்பதை அமித்ஷா தேர்வு செய்வார் என்றும் கூட்டணி கட்சியில் இருக்கும் அனைவருக்கும் ஆட்சியில் பங்கு இருக்கும் என்று பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு பின்னணியில் அமித்ஷா இருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வளவு நாட்களாக பாஜக சார்பில் மட்டுமே கூட்டணி ஆட்சி என்று பேசி இபிஎஸ்-க்கு அழுத்தம் கொடுத்த நிலையில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் கட்சிகளையும் கூட்டணி ஆட்சி தொடர்பாக பேசசொல்லி பாஜக அசெண்மெண்ட் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இச்சூழலில், கூட்டணிக் கட்சிகளுக்குள் இருந்தே இபிஎஸ்-க்கு தொடர்ந்து அழுத்தம் வருவதால் அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Related Post

அதிமுகவுக்கு நயினார்… ஓபிஎஸ் – தினகரனுக்கு அண்ணாமலை!

Posted by - December 11, 2025 0
அதிமுக தலைமைக்குப் பிடிக்காத தினகரன், ஓபிஎஸ் ஆகியோருடன் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அதிக நெருக்கமாக இருப்பதில் யாருக்கும் வியப்பில்லை. ஆனால், தங்களுக்குப் பிடிக்காத நபரான…

அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

Posted by - December 23, 2025 0
சென்னை: பழைய ஓய்வூதியம் திட்டம் உட்பட முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்…
Generated Image November 17 2025 4 00PM

நாளை முதல் SIR பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த்துறை சங்கம் அதிரடி அறிவிப்பு! காரணம் என்ன?

Posted by - November 17, 2025 0
அதீத பணி நெருக்கடி காரணமாக SIR பணிகளை புறக்கணிப்பதாக வருவாய்த் துறை சங்கங்கள் அறிவித்துள்ளன. SIR பணிகளை நாளை (நவம்பர் 18) முதல் புறக்கணிக்க உள்ளதாக வருவாய்த்துறை…
qw

TVK ‘இன்ஸ்டன்ட்’ வெற்றிக்கு வித்திட்ட இன்ஸ்டாகிராம் ..

Posted by - May 5, 2026 0
தமிழக அரசியலில் 2024 – 2026 காலகட்டம் ஒரு மாபெரும் டிஜிட்டல் மாற்றத்துக்கான சாட்சியாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்…
Generated Image November 15 2025 10 41AM

பீகார் முடிவு… செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது

Posted by - November 15, 2025 0
பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாஜக கூட்டணியிடம் காங்கிரஸ் படு தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *