பொங்கலுக்கு கொட்டப்போகுது பரிசு மழை.! ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.5ஆயிரமா.?

199 0

சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பாக தமிழக அரசு 5ஆயிரம் ரூபாய் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இது சாத்தியமா.? தமிழக அரசு கூறுவதென்ன.? என்பதை பார்ப்போம்.

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

தமிழர்களின் முக்கிய திருநாள் தை பொங்கலாகும், சூரியன், இயற்கை, கால்நடைகள் மற்றும் அறுவடைக்கு நன்றி செலுத்துவதே இந்த திருவிழாவில் முக்கிய நோக்கமாக உள்ளது. இது தை மாதத்தில் (ஜனவரி மாதம்) 4 நாட்கள் தொடர்ந்து விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய விழாவாகவும் உள்ளது. எனவே பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுதற்காகவே வெளியூரில் பணியாற்றுபவர்கள் தங்களது சொந்த ஊரில் உறவினர்கள், நண்பர்களோடு இணைந்து கொண்டாடுவார்கள்.

பொங்கல் பரிசு தொகுப்புகள்

எனவே தமிழக அரசும் பொங்கல் பண்டிகையையொட்டி பரிசு தொகுப்பையும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வந்த பொங்கல் பண்டிகையின் போது அதிமுக அரசு சார்பாக பொங்கல் பரிசாக 2500 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் அரிசி, சக்கரை. கரும்பு, வேட்டி மற்றும் சேலை வழங்கப்பட்டது.  இதனையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு 2022ஆம் ஆண்டு திமுக அரசு பொங்கல் பண்டிகைக்காக 20 பொருட்கள் கொண்ட தொகுப்பை வழங்கியது. அரிசி, சர்க்கரை, கரும்பு, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், கடலைப்பருப்பு, கடுகு, மிளகு, துளசி, சீரகம், கடலை மாவு, காபி பொடி போன்றவை வழங்கப்பட்டது. ஆனால் இந்த பரிசு பொருட்களில் தரம் இல்லையென பொதுமக்களால் விமர்சிக்கப்பட்டது.

இதனையடுத்து 2023 மற்றும் 2024ஆம் ஆண்டில் திமுக அரசு ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் சக்கரை, பச்சரிசி,கரும்பு, வேட்டி மற்றும் சேலை வழங்கியது. ஆனால் கடந்த 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசு நிதி பற்றாக்குறை காரணமாக ஆயிரம் ரூபாய் வழங்கவில்லை. வேட்டி, சேலை, பச்சரிசி, சக்கரை மற்றும் கரும்பு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கியது. இந்த நிலையில் வருகிற 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பாக ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 5ஆயிரம் ரூபாய் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பரிசாக 5ஆயிரம் ரூபாயா.?

இதனால் பொதுமக்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது  2026ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே மக்களின் வாக்கை கவர்வதற்காக திமுக அரசு 5000 ரூபாய் வழங்கும் என தகவல் கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகள் கூறும் போது தற்போது வரை 5ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை. ஏற்கனவே நிதி பற்றாக்குறையால் அரசு திணறி வருகிறது. ஒரு குடும்பத்திற்கு 5ஆயிரம் என அறிவிப்பு வெளியிட்டால் சுமார் 12ஆயிரம் கோடி அளவிற்கு நிதி ஒதுக்க வேண்டிய நிலை உருவாகும்.

தமிழக அரசின் நிதி பற்றாக்குறை

மேலும் மகளிர் உரிமை தொகை கேட்டு புதிதாக 30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கும் கூடுதலாக பணம் ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பொங்கல் பரிசு தொகுப்பாக 5ஆயிரம் ரூபாய் வழங்குவது சந்தேகம் தான் என தெரிவிக்கின்றனர். அதே நேரம் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு 1000 அல்லது 2500 ரூபாய் பணம் பரிசாக வழங்க வாய்ப்பு இருப்பதாகவும், இது தொடர்பாக டிசம்பர் மாதம் மத்தியில் நடைபெறும் கூட்டத்தில் தான் முடிவெடுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Related Post

இன்று தான் கடைசி.!

Posted by - March 4, 2026 0
ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முடிவடையவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுகிறதா.? இல்லையா என்பது இன்று மாலைக்குள் முடிவு வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது.…

ஜோசியமா? பழைய கர்மாவா? – அண்ணாமலை – மோடிக்கே கல்தா ஏன்?

Posted by - March 30, 2026 0
தமிழ்நாடு பாஜகவில் தலைவராக இருந்தபோது அண்ணாமலை எடுத்த நடவடிக்கைகளின் விளைவாகவே தற்போது அவர் ஓரங்கட்டப்படுவதாக கூறப்படுகிறது. Annamalai BJP TN Election 2026: கோவை வந்திருந்த பிரதமர் மோடியை…

”ஒரு கதை நியாபகம் வருகிறது’ திமுக குறித்து அதிமுக சொன்னது என்ன ?

Posted by - March 20, 2026 0
டெல்லியில் சென்று கூட்டணி பேசுகிறார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் புலம்ப ஆரம்பித்துவிட்டதாக, அதிமுக காட்டமாக விமர்சித்துள்ளது. ADMK Vs Stalin: காங்கிரசின் மிரட்டல்களுக்கு பணிந்தே திமுக கூடுதல் தொகுதிகளை…

கும்​பகோணம் த.வெ.க வேட்​பாளர் புது முயற்சி….

Posted by - April 14, 2026 0
ஹாலோகி​ராம்’ தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தி தவெக தலை​வர் விஜய் நேரில் பிரச்​சா​ரம் செய்​வது போல புதிய முயற்​சியை கும்​பகோணம் தவெக வேட்​பாளர் மேற்​கொண்​டுள்​ளார். தவெக தலை​வர் விஜய் தனது…

இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும்

Posted by - January 3, 2026 0
TN Govt TAPS Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *