‘கூட்டணி ஆட்சியா? அமித் ஷாவுக்கு பதில் சொன்ன EPS’ பரபரப்பு Press Meet!

139 0

அதிமுக கூட்டணி வலிமையானதாகவும், ஒற்றுமையுடன் இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான அரசு 2026 அமைந்தால், அது கூட்டணி ஆட்சியாகதான் இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா பேசிய நிலையில், அதற்கு அதிமுகவினர் மறுப்பு தெரிவித்து பேசி வந்தனர். இந்நிலையில், இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா கருத்துக்கு நேரடியாக எந்த பதிலையும் சொல்லாமல், இருந்தாலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், தனித்தே அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும், கூட்டணி வலிமையானதாகவும் ஒற்றுமையுடனும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

திமுக மீது இபிஎஸ் விமர்சனம்

திமுக முன்னெடுத்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்து பேசியுள்ள எடப்பாடி பழனிசாமி, நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்களின் குறைகளை தீர்க்காமல், தேர்தல் வர இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில்ல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற பெயரில் ஒரு திட்டத்தை உருவாக்கி, குறைகளை நிவர்த்திச் செய்வதாக சொல்லி, பொய் பிரச்சாரத்தில் திமுக இறங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணியில் புதிய கட்சியா ?

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில், இன்னும் பலமான கூட்டணியை அதிமுக உருவாக்கும் என்றும், தங்களுடைய கூட்டணியில் புதிய கட்சிகள் பல வந்து சேரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கனிம வளம் மூலம் அரசு கொள்ளை

கனிம வளம் மூலம் திமுக அரசு அதிகமாக கொள்ளையடித்துக்கொண்டிருப்பதாகவும், கனிம வளத்துறையை வைத்தே அதிக கொள்ளை நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றும் பேசியுள்ளார். மேலும், திமுக ஆட்சி நிச்சயம் 2026 மீண்டும் வராது என்றும், அதற்காகதான் தொகுதி வாரியாக சென்று மக்களை தான் சந்தித்து வருவதாகவும் சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மக்கள் அமோக வரவேற்பு

தான் சுற்றுப்பயணம் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் தனக்கு அமோக வரவேற்பு கொடுத்து வருவதாகவும் அந்த வரவேற்பே மீண்டும் 2026ல் அதிமுக ஆட்சிக்கு வருவதை பிரதிபலிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Post

அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்ட நாளை துக்க நாளாக அனுசரிப்போம்! – ஆளுநர் ஆர்.என்.ரவி

Posted by - June 25, 2024 0
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 50 ஆண்டுகளுக்கு முன்பு, 1975ஆம் ஆண்டு இதே நாளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்தாக கூறியுள்ளார். அரசியலமைப்பை தூக்கியெறிந்து, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கிய…

அதிகாலையில் வந்த அலர்ட்! அடுத்த 3 மணி நேரம்.. சென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழை இருக்கு- வானிலை மையம்

Posted by - December 6, 2023 0
சென்னை: அடுத்த 3 மணி நேரத்திற்குச் சென்னை உட்பட மொத்தம் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் கடந்த…

ஆன்லைன் உணவு… திறக்க முடியாத பீரோல்… பொன்முடி வீட்டு சோதனையின்போது நடந்த சுவாரஸ்யங்கள்

Posted by - July 18, 2023 0
பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்ற ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து அதிகாரிகள் பொன்முடிக்கு வழங்கினர். அமைச்சர் பொன்முடி தொடர்பான இடங்களில், அமலாக்கத்துறையின் அதிரடி சோதனையில், சில…

கடையை சூறையாடிய திமுக கவுன்சிலர்! பூதாகரமான பண விவகாரம்!

Posted by - November 12, 2024 0
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் பலகார கடையை அடித்து நொறுக்கிய திமுக கவுன்சிலர். மதுரை மாவட்டம், திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி வணிக வளாக கட்டிடத்தில்…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை நீடிக்கும்

Posted by - November 28, 2023 0
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21-ந்தேதி தொடங்கியது. தொடா்ந்து காற்று சுழற்சி மற்றும் மேலடுக்கு சுழற்சிகளால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *