”கேஸ் வாங்குறதுலாம் துணிக்கடைல கட்டப்பை வாங்குற மாதிரி..” மீண்டும் சர்ச்சையில் சிக்கும் டிடிஎஃப் வாசன்!

205 0

செம்ம வெறி ஆகிட்டேன். டிடிஎஃப் பிராண்ட் உருவாக்க போறேன். யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வராதா? – டிடிஎஃப் வாசன்

நம்மை விரட்டியே காவல்துறையினரே நம்மை ராஜ மரியாதையுடன் அமர வைப்பார்கள் என யூட்யூப் பிரபலம் டிடிஎஃப் வாசன் பேசியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு, கடலூர் புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குனர் செந்தில் செல்லம் என்பவரது கடலூர் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக வாசன் வந்திருந்தார். இதனை முன்கூட்டியே அறிந்த டிடிஎஃப் வாசன் (Youtuber TTF Vasan) ஆதரவாளர்கள் அப்பகுதியில் குவிந்தனர்.

2 சக்கர வாகனங்களில் அதிவேகமாக வந்து பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தவும் செய்தனர். இதனால் புதுப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

காரில் வந்த டிடிஎஃப் வாசன் அங்கு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புறப்பட்டபோது அவரை வழியனுப்புவதற்கு மீண்டும் 2 சக்கர வாகனங்களில் அதிக அளவில் ஒலி எழுப்பியவாறு அவரது ஆதரவாளர்கள் வந்து கொண்டிருந்தனர். அண்ணா மேம்பாலம் அருகே வரும்பொழுது சாலையில் சென்றவர்கள் மீது இரண்டு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ஆத்திரமடைந்த போலீசார் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை பிடித்தனர்.

200க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி அபராதம் விதித்து அவற்றை வசூல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் உடன் வந்து வாகனங்கள் அனைத்தையும் செல்போன் மூலம் படம் எடுத்து அந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

முதலில் காவல்துறையினர் மீது தவறு இல்லை. அவர்கள் நல்ல விதத்தில் நடந்து கொண்டனர் என கூறிய வாசன், தற்போது காவல்துறையினர் தன்னிடம் பொய் சொல்லிவிட்டதாக தனது ரசிகர்களிடம் விளக்கம் அளித்தார்.

யூட்யூப் லைவ்வில் பேசிய அவர், “நம்மல விரட்டுன போலிஸ்காரங்களே நம்மல ராஜ மரியாதையோட ஒக்கார வைப்பாங்க. இது வாய் வார்த்தையா சொல்றது இல்ல” என பேசினார்.

மேலும், “நம்ம மேல 5 வழக்கு போட்ருகாங்க. இதுக்கு வருத்தப்படல. நம்ம தான் துணிக்கடைல கட்டப்பை வாங்குற மாதிரி கேஸ் வாங்குறோமே. என்னை அடிச்சிருந்தா கூட மன்னிச்சிருப்பேன். ஆனா அவங்க பசங்க மேல கை வச்சுட்டாங்க. நான் போலீஸ்ட கேட்டதுக்கு அவங்க கல் எடுத்து அடிச்சாங்க தம்பினு போலீஸ் பொய் சொன்னாங்க.

செம்ம வெறி ஆகிட்டேன். டிடிஎஃப் பிராண்ட் உருவாக்க போறேன். யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வராதா?” என தெரிவித்தார்.

Related Post

திடீரென விற்கப்படும் விஜய் டிவி- போட்டிபோடும் TV நிறுவனம்…

Posted by - August 2, 2023 0
விஜய் டிவி தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கிறது விஜய். ஸ்டார் குழுமம் அந்த தொலைக்காட்சியை வாங்கியவுடன் ஸ்டார் விஜய் ஆனது, அதன்பின் அதை உலக அளவில்…

ரூ.1000 மகளிர் உரிமை தொகை மேல்முறையீடு.. இணையதளம் முடக்கம்.. தவிக்கும் பெண்கள்!

Posted by - September 22, 2023 0
 மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், இணையதளம் முடங்கியுள்ளதால் விண்ணப்பதாரர்கள்…

இந்த வருடமும் நாங்க தான்.. சம்பவம் செய்த மாணவிகள்-தேர்ச்சி விகிதம் இது தான்

Posted by - May 8, 2025 0
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த ஆண்டும் மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை விட அதிக சதவீகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் 12 ஆம்…

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

Posted by - November 13, 2025 0
ஜூலை 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு, இந்த அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட உள்ளது. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப் படியை உயர்த்தி,…

செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா? – மகிழ்ச்சியில் மாணவர்கள்!

Posted by - August 31, 2023 0
4-12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.27 தேதி முதல் அக்.2ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *