அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

173 0

ஜூலை 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு, இந்த அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப் படியை உயர்த்தி, முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதன்படி, 55 சதவீதமாக இருந்த அகவிலைப் படி, 58 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.  ஜூலை 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு, இந்த அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழ்நாட்டு மக்கள் நலனில் அன்பும் அக்கறையும் கொண்டு, பல சீரிய முன்னோடி நலத் திட்டங்களைத் தீட்டி தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகின்றது. மக்களுக்காக வகுக்கப்படும் பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டுவதிலும். அத்திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் களப்பணியாற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்.

58 சதவீதமாக உயர்வு

அத்தமைய அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் 01.07.2025 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அகவிலைப் படிக்கு இணையாக உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார். இதனால் தற்போது 55 சதவீதமாக உள்ள அக விலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 01.07.2025 முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

ஆண்டுக்கு ரூ.1,829 கோடி கூடுதல் செலவு

இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள் பயன்பெறுவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,829 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கரை ஆண்டு காலமாக கூறப்பட்டு வரும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் என்ன ஆகின? தேர்தல் நெருங்கும் சூழலில், இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதா? என்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் குரல்கள் எழுந்து வருகின்றன.

Related Post

உங்களுக்கு ‘இந்த’ அறிகுறிகள் இருக்கா? அப்ப இரும்புசத்து குறைபாடு இருக்க வாய்ப்பிருக்கு… உடனே இத சாப்பிடுங்க!

Posted by - October 25, 2023 0
நம் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் மிக அவசியம். ஒவ்வொரு ஊட்டச்சத்துக்களும், நம் உடலின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் இரும்புசத்து நம் உடலுக்கு மிகவும் அவசியமான…

மீனுடன் “இதை” சாப்பிடாதீங்க.. முள்ளங்கியுடன் சேர்க்க கூடாத பொருள் இதுதான்.. கீரை + தயிர் = விஷம்

Posted by - December 2, 2023 0
சென்னை: மீன்கள் பல நன்மைகளை நமக்கு தந்தாலும், எந்தெந்த பொருளுடன் மீனை சேர்த்து சாப்பிட கூடாது தெரியுமா? 2 வேறு உணவுப்பொருட்கள் ஒரே குணத்தை பெற்றிருந்தால், அவை…

“வெளியான Report – கலக்கத்தில் திமுக” ComeBack அதிமுக – பாஜக பூஸ்டில் EPS..!

Posted by - April 18, 2025 0
“தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருந்தாலும் தேர்தல் ஆணையத்தின் ரிப்போர்ட் சொல்லும் முடிவுகள் அதிமுகவிற்கு சாதகமாக இருப்பது, திமுகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தும் விஷயமாகவே அமைந்துள்ளது” 2026 தேர்தல்…

”பாஜக மேலிடம் சொல்லித்தான் அண்ணாமலை பேசுகிறாரா?” கேள்விகளை அடுக்கிய ஜெயக்குமார்

Posted by - September 18, 2023 0
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்…

நாடு முழுவதும் தீவிரமாய் பரவும் காய்ச்சல்… இந்த மாத்திரைகளை சாப்பிடாதீங்க… மருத்துவ சங்கம் அறிவுறுத்தல்..!

Posted by - March 4, 2023 0
மக்கள் சுயக்கட்டுப்பாட்டை கடைபிடித்து நோய் தொற்று பரவலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சமீப நாட்களாக நாடு முழுவதும் காய்ச்சல், சளி, இருமல் தொல்லை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *