மாவட்ட நீதிபதியிடம் பதில் அளித்து விட்டு தற்போது தெரியாது என்றால் என்ன? நீதிமன்றம் விளையாட்டு மைதானமா? – நீதிபதி கேள்வி
கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று ஆஜரான சுவாதி மீண்டும் பிறழ்சாட்சியம் அளித்ததால், அவர் உண்மையை ஒத்துக்கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கி விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததாக கூறி, கடந்த 2015-ம் ஆண்டு ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இதுதொடர்பான விசாரணையின் போது, நீதித்துறையின் மனசாட்சியை திருப்திப்படுத்தும் வகையில் சுவாதியை மீண்டும் சாட்சியாக விசாரிக்க விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.அதில் நீதிபதிகள் காட்டிய வீடியோவில் இருப்பது தான் இல்லை என தெரிவித்தார். மேலும் கோகுல்ராஜ் உறவினருடன் செல்போனில் பேசிய ஆடியோவை காட்டி கேட்டபோதும் அது தனது குரல் இல்லை என மறுத்துள்ளார். ஏற்கனவே 2018ஆம் ஆண்டு பிறழ்சாட்சியம் அளித்த நிலையில் மீண்டும் பிறழ்சாட்சியம் அளித்துள்ளார் சுவாதி.
இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி, “நீங்கள் பொய் சொன்னால் சிறைக்கு செல்ல நேரிடும். இந்த வழக்கு மிகவும் முக்கியமானது.
நீதிமன்றத்திற்கு, நீதிபதிகளுக்கு ஒன்றுமே தெரியாது என நினைக்கிறீர்களா? கடைசியில் சத்தியம் ஜெயிக்கும். உங்களை பார்த்தே உங்களுக்கு தெரியாது என்றால் என்ன செய்வது?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “நீங்கள் சொல்வது அப்பட்டமான பொய். சாதி, மதங்களை கடந்து செல்ல வேண்டும் நீதிபதிகள். மாவட்ட நீதிபதியிடம் பதில் அளித்து விட்டு தற்போது தெரியாது என்றால் என்ன? நீதிமன்றம் விளையாட்டு மைதானமா?” என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, “உண்மையை சொல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குகிறோம். உங்கள் மனசாட்சியே உங்களை சுடும். உங்களுக்கு ஏதாவது அழுத்தம் இருந்தால் கூறலாம்.” என தெரிவித்தார்.
சுவாதிக்கும், குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
Related Post
அருகம்புல்.. அனைத்து நோயை ஓட்டும் ஒரே மருந்து.. வெறும் வயிற்றில் அருகம்புல்லின் ஜூஸ் போதுமே.. அருமை
சென்னை: எல்லா விதமான நோய்களுக்கும் ஏற்ற மருந்து ஒன்று இருக்கிறதென்றால் அதுவும் இந்த அருகம்புல்தான்.. அத்தனையும் மருத்துவம்.. அத்தனையும் மகத்துவம்..!! வெறும் புல்தானே என்று இதை நினைத்து…
முரல் மீன்.. மீனிலேயே சூப்பர் இதுதான்.. எலும்புகளை உறுதியாக்கும் ஜிலேபி மீன்கள் தெரியுமா? அருமை
சென்னை: கடல்வாழ் உயிரினங்களில், ஏராளமான சத்துக்கள் நிறைந்திருந்தாலும், கால்சியம் தரக்கூடிய மீன்கள் என்னென்ன தெரியுமா? எலும்புகள் பலம் பெறுவதுடன் நன்றாக வளர்ச்சி பெறவும் உதவக்கூடிய கால்சியம் சத்துக்களை,…
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த திமுக, அவர்களுக்கு அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பணி நிரந்தரம் கோரி போராடிய பகுதிநேர ஆசிரியர்களை…
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை:கோரிக்கை நிறைவேறும்வரை பின்வாங்கப் போவதில்லை என உறுதி
பள்ளிக்கல்வித் துறைஅதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன் வைத்து, இடைநிலை பதிவுமூப்பு…
காதல் திருமணம் செய்த 2-வது நாளில் தாலியை கழற்றி கொடுத்து விட்டு உறவினர்களுடன் சென்ற இளம்பெண்
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி.நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் அருண் சக்ரவர்த்தி (வயது 28). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.…
Categories
- MEMES (12)
- Uncategorized (1)
- அரசியல் (184)
- இந்தியா (470)
- உலகம் (174)
- சினிமா (815)
- தமிழ்நாடு (1,087)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (285)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (85)
Recent Posts
- தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

- ஆட்சிக்கு வந்தால் இவ்வளவும் இருக்கும்.. தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!

- “பாலியல் வன்கொடுமை, போதைக் கலாச்சாரம் குற்றச்சாட்டுதான் இந்த ஆட்சி மீது இருக்கு..” மு.க.ஸ்டாலின் முன்பே பேசிய பிரேமலதா!

- கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

- திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!
