சிக்கிய சிஎஸ்கே.. ரோகித்-சூர்யா காட்டடி! சம்பவம் செய்த பல்தான்ஸ்.. மும்பை அபார வெற்றி

222 0

மும்பை அணி 15.4 ஓவரில் சென்னை நிர்ணயித்த இலக்கை சுலபமாக அடைந்தது, ரோகித் சர்மா 76 ரன்களும், சூர்யக்குமார் யாதவ் 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர்..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிப்பெற்றது.

சென்னை 176:

மும்பை அணிக்கு எதிராக போட்டியில் சென்னை அணி பேட்டிங் செய்தது, தொடக்க வீரர்களாக ஷேக் ரசீத் மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர், ரவீந்திரா 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற அறிமுக வீரர் மாத்ரே அதிரடியாக விளையாடி 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், ஷேக் ரசீத் 19 ரன்களுக்கு வெளியேற சென்னை அணி அடுத்த சில ஓவர்களுக்கு ரன் அடிக்க முடியாமல் திணறியது, 11 ஓவருக்கு பிறகு தான் சென்னை அணி அதிரடியாக ஆடத்தொடங்கியது. சென்னை தங்கள் இறுதி 9 ஓவர்களில் 103 ரன்களை எடுத்தது, சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

ரோகித் அதிரடி:

177 ரன்கள் என்கிற இழக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரிக்கல்டன் மற்றும் ரோகித் சர்மா அதிரடி தொடக்கம் தந்தனர், குறிப்பாக இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரோகித் சென்னை அணியின் பந்துவீச்சை பின்னியெடுத்தார், மறுமுனையில் ரிக்கல் நல்ல தொடக்கம் கொடுத்த மும்பை அணி முதல் விக்கெட்டுக்கு இந்த சீசனில் முதல் 50 விக்கெட் பார்ட்னர்சிப்பை அமைத்தது. ரவீந்திரா ஜடேஜாவின் ஓவரில் ரிக்கல்டன் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

சூர்யா-ரோகித் சம்பவம்:

அடுத்த சூர்யக்குமார் யாதவ் வந்தது முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தார், ஒரு ஒரு ஓவருக்கும் தலா ஒரு சிக்ஸ் அல்லது பவுண்டரியை மும்பை அணி பேட்ஸ்மென்கள் அடித்துக்கொண்டே இருந்தனர், சென்னை அணி கேப்டன் எம்.எஸ் தோனி பல பவுலிங் மாற்றங்களை செய்தும் சென்னை அணிக்கு பலன் கிடைக்கவில்லை, இதற்கிடையில் ரோகித் சர்மா அடித்து அசத்தினார். அதிரடியாக விளையாடிய சூர்யக்குமார் யாதவ் தனது அரைசதத்தை கடந்தார். \

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 6வது விக்கெட்டுக்கு முன்னேறியுள்ளது.

Related Post

மக்களவை தேர்தல் எதிரொலி… ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டிற்கு மாற்றப்படுகிறதா? – பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விளக்கம்

Posted by - March 18, 2024 0
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றாலும், ஐபிஎல் போட்டிகள் இந்தியாவிலேயேதான் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், மார்ச் 22ஆம் தேதி…

IPL 2023 : ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற சென்னை அணிக்கான வாய்ப்புகள் என்ன?

Posted by - May 17, 2023 0
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி ஏழு வெற்றிகளை பதிவு செய்து 15 புள்ளிகளோடு பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில்…

இறுதி ஓவரில் இரண்டு ஸ்டம்புகளை உடைத்த அர்ஷ்தீப் சிங்… அதன் விலை இத்தனை லட்சமா?

Posted by - April 23, 2023 0
மும்பைக்கு எதிரான போட்டியின் இறுதி ஓவரில் அர்ஷ்தீப் சிங் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில்,…

தோனிக்கு கிஃப்ட் கன்பார்ம் ……

Posted by - April 12, 2023 0
சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் ‘தல’ என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி இன்று ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பான மைல்கல்லை எட்டவுள்ளார். 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று…

ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. சூப்பர் ஓவர் த்ரில்.. ஸ்டார்க்கால் டெல்லி அபார வெற்றி

Posted by - April 17, 2025 0
ராஜஸ்தான் – டெல்லி அணி ஆடிய போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்ற நிலையில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் இன்று நடந்த போட்டியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *