இறுதி ஓவரில் இரண்டு ஸ்டம்புகளை உடைத்த அர்ஷ்தீப் சிங்… அதன் விலை இத்தனை லட்சமா?

243 0

மும்பைக்கு எதிரான போட்டியின் இறுதி ஓவரில் அர்ஷ்தீப் சிங் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், மும்பை அணியும் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்கத்தில் பஞ்சாப் வீரர்கள் தடுமாறினாலும் இறுதியில் சாம் கரன், ஹர்ப்ரீத் சிங் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், இஷான் கிஷனும் களமிறங்கினர்.

இஷான் கிஷன் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து கேமரூன் க்ரின் களமிறங்கினார். ரோஹித் சர்மா, கேமரூன் இணை சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்தது. ரோஹித் 27 பந்துகளுக்கு 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக ஆடிய கேமரூன் 67 ரன்களைக் குவித்தார். முந்தைய போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி 57 ரன்களைக் குவித்தார்.

தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடினாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வியைத் தழுவியது மும்பை அணி. 20 ஓவர் முடிவில் 201 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பஞ்சாப் அணி வெற்றி பெற முக்கிய காரணம் அர்ஷ்தீப் சிங்தான்.

இறுதி ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் மும்பை அணியை கலங்கடித்து வெற்றிக் கனவை குழி தோண்டி புதைத்துவிட்டார். இறுதி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வெறும் 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங்.. குறிப்பாக, அர்ஷ்தீப் சிங் வீசிய மூன்றாவது பந்தை எதிர்கொண்ட திலக் வர்மா போல்டாகி வெளியேறினார். அர்ஷ்தீப் சிங் வீசிய அந்தப் பந்தில் மிடில் ஸ்டம்ப் இரண்டு துண்டாகியது.

Related Post

18 வருட காத்திருப்பு ஓவர் -? ஃபைனலில் பெங்களூரு – பஞ்சாப்

Posted by - June 2, 2025 0
18 வருட காத்திருப்பை முடித்து முதல் கோப்பையை வெல்லப்போவாது யார் என்பது? பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை பந்தாடிய பஞ்சாப்: நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு…

IPL2024-வெற்றியுடன் ஐபிஎல் தொடரை ஆரம்பித்த சி.எஸ்.கே. – 6 விக். வித்தியாசத்தில் ஆர்சிபி-யை வென்றது

Posted by - March 23, 2024 0
174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று சவாலான இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர் ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ள…

கடைசி பந்து வரை உச்சக்கட்ட பரபரப்பு… 5வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது தல தோனி படை..!

Posted by - May 30, 2023 0
மழையால் 15 ஓவர்களில் 171 ரன்கள் சேர்க்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சென்னை அணி, கடைசிப்…

IPL 2024 : 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வென்றது பஞ்சாப் கிங்ஸ்…

Posted by - May 2, 2024 0
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு ஜானி பேர்ஸ்டோ சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்கு…

நான் ஃபினிஷர் தான்டா..! தோனியின் 5 வருட காத்திருப்பு, மூச்சு விடும் சென்னை – ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் மாற்றம் என்ன?

Posted by - April 15, 2025 0
தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த சென்னை அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *