’’திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோமா? விசிக எந்த முடிவையும் எடுக்கும்’’- தூள் பறந்த திருமாவளவன் பேச்சு!

95 0

எல்லோரும் தேர்தலுக்கு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். பாசிச பாஜக அரசு சாதுரியமாகக் காய் நகர்த்தி வருகிறது. இதனை நாம் எதிர்த்தே ஆக வேண்டும்- விசிக.

திமுகவை மட்டுமே நம்பி நாங்கள் இல்லை. தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விசிகவால் எடுக்க முடியும். திமுக கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பதால் நமக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தொண்டர்களுக்கான முகநூல் நேரலையில் வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் இருந்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஏப்ரல் 22ஆம் தேதி கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்

’’22ஆம் தேதி மறுசீரமைப்புப் பணிக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் அனைத்து நபர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏற்கெனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளால், வர முடியாத சூழல் இருக்கலாம். ஆனாலும் வர வேண்டியது முக்கியம். தவிர்க்கவே முடியாத நிலையில், தலைமையகத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.

24 மணி நேரமும் தொண்டர்களுடன் இருக்கவே ஆசைப்படுகிறேன். ஆனால் முன்னுரிமை அடிப்படையில் கலந்தாய்வுக் கூட்டப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளது.

குடும்ப நிகழ்ச்சிக்கு அழைப்பதை நிறுத்துங்கள் என்று நிர்வாகிகளுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும், அது நடைபெறுவதில்லை. ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட விழாக்களுக்கு அழைத்தால் எப்படி வருவது? என்னுடைய உடல் நலனுக்காகக் கூடக் கேட்கவில்லை. கட்சிப் பணிகளுக்காகவே கேட்கிறேன்.

சாதுரியமாகக் காய் நகர்த்தும் பாஜக

எல்லோரும் தேர்தலுக்கு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். பாசிச பாஜக அரசு சாதுரியமாகக் காய் நகர்த்தி வருகிறது. இதனை நாம் எதிர்த்தே ஆக வேண்டும்.

தமிழ்நாட்டு அளவில் பாஜக வலிமை பெறக்கூடாது என்று கருதுகிறோம். ஆனால் அவர்கள் ஆக்டோபஸ் கரங்களால் நாடு முழுவதும் பற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோமா?

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பதால் நமக்கு எதிராக, உதிரிகளைக் கொண்டு அவதூறு பரப்புகிறார்கள். திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோம் என்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.

இந்த அற்பர்களின் அவதூறுகளை நாம் கடந்து சென்றாலும், இயக்கத்தோழர்கள் அதில் தெளிவு பெற வேண்டும். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விசிகவால் எடுக்க முடியும். அதுவொன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை.

சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபாடு காட்டவில்லை

எல்லாக் கதவுகளையும் திறந்து வைத்திருப்பது, ஒரே நேரத்தில் பலரோடும் பேரம் பேசுவது, பேரல் பலிக்கிற இடத்தில் கூட்டணியைத் தீர்மானிப்பது என்பதெல்லாம் பெரிய ராஜ தந்திரம் இல்லை. அதுவொரு சந்தர்ப்பவாத அரசியல். அதில் நாம் ஈடுபாடு காட்டவில்லை.

எந்த நிபந்தனையும் இல்லாமல் கூட்டணியில் நாம் தொடர, ஒரு துணிவு வேண்டும். தொலைநோக்குப் பார்வை வேண்டும். இதை உணர்ந்து விசிக நிர்வாகிகள் நடந்துகொள்ள வேண்டும். எதிர்வினையாற்றும்போது, தலைமையின் உணர்வைப் புரிந்து நடக்க வேண்டும். திமுக கூட்டணியை பலவீனமாக்கும் முயற்சியில் ஈடுபடுவோரின் உணர்வுகளுக்கு இரையாகாமல், கவனமாக இருங்கள்’’.

இவ்வாறு தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Related Post

பேருந்து ஓட்டும்போது செல்போன்.. அரசு ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத் துறை பகீர் எச்சரிக்கை!

Posted by - December 23, 2024 0
அதனை மீறி செல்போன் பயன்படுத்தியபடி அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வருகின்றன. செல்போன் பயன்படுத்தும் அரசு பேருந்து ஓட்டுநர்களை போக்குவரத்துத் துறை…

திண்டுக்கல்: குப்பையில் வீசப்பட்ட பெண் சிசுக்கள்; நாய்கள் குதறிய அவலம் – நடந்தது என்ன?!

Posted by - July 31, 2023 0
திண்டுக்கல், மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் அருகே மாநகராட்சி சார்பில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று காலையில் அந்தக் குப்பைத் தொட்டியை நாய்கள் சூழ்ந்து நின்று…

உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி – ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”

Posted by - May 26, 2025 0
டெல்லிக்கு போனதாக புலம்பியது போதும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் கதறுவதை தமிழ்நாடே ரசிப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி…

அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?

Posted by - May 31, 2025 0
ஆதவ் அர்ஜுனா அதிமுகவை கிண்டலடித்த வீடியோ வைரலான நிலையில், அதற்கு பதிலடி எங்கிருந்து வந்துள்ளது தெரியுமா.? சீமானிடமிருந்து. ஆம், அவர் ஆதவ் அர்ஜுனா குறித்த முக்கிய தகவலை…

“அட கடவுளே” நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில்.. AK-க்கு என்னாச்சு..? நாளை Birthday வாச்சே..!

Posted by - April 30, 2025 0
பத்ம பூஷன் விருது பெற்றுள்ள நடிகர் அஜித் குமார் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு அப்பலோ மருத்துவமனைக்கு சென்றிருக்கும் அஜித்குமாருக்கு என்ன…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *