‘ஜனநாயகன் பொங்கல் இல்லை’ சென்சார் வழக்கில் திடீர் திருப்பம்.

61 0

ஜனநாயகன்’ படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்க நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். தணிக்கை வாரியத் தலைவர் மேல்முறையீடு செய்த நிலையில், விசாரணை நடைபெற்றது.’ஜன நாயகன்’ படம் தொடர்பான பிரச்னைகளை, சீலிடப்பட்ட கவரில் தணிக்கை வாரியம் தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் நீதிபதி பி.டி.ஆஷா கேட்டறிந்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளித்தார்.நீதிபதி வெளியிட்ட தீர்ப்பில், “ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானது. அந்தப் புகாரை ஊக்கப்படுத்த முடியாது. ஒரு உறுப்பினரின் புகாரை கொண்டு படத்தை எப்படி மறு ஆய்வுக்கு அனுப்ப முடியும். படத்திற்கு யுஏ சான்றிதழ் அளித்த பிறகு தலைவருக்கான அதிகாரம் முடிந்தது. மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. விரைந்து யுஏ தணிக்கைச் சான்றிதழ் அளிக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியத் தலைவர் சார்பில் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், “மனுவாக தாக்கல் செய்துவிட்டு தெரிவியுங்கள், விசாரணைக்கு ஏற்பது குறித்து பரிசீலிக்கப்படும். பிற்பகல் விசாரணைக்கு எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.அதன்படி இந்த வழக்கு தொடர்பான விசாரணை உயர்நீதிமன்றத்தில் மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. அப்போது, ‘இன்றைய தினமே மேல் முறையீடு செய்ய என்ன அவசரம்?’ என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு தணிக்கை வாரியம் தரப்பில், “எங்களுக்கு உரிய கால அவகாசம் வழங்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தணிக்கை வாரிய தலைவரின் அதிகாரம் குறித்து நீதிபதி முடிவெடுத்துள்ளார். ஆனால் இது குறித்து விரிவாக விவாதித்திருக்க வேண்டும். நியாயமான அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.அதன்பின் பரிசீலித்திருக்க வேண்டும். படத்தை மறு ஆய்வு செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோராத நிலையில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்போது தலைமை நீதிபதி, “தணிக்கை வாரியத்துக்கு எதற்காக உரிய கால அவகாசம் வழங்காமல் 24 மணி நேரத்தில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதற்கான அவசியம் என்ன?” என கேள்வி எழுப்பினார். சென்சார் வாரியம் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கொடுக்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கை வரும் 21-ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி வரும் 21-ம் தேதி வரை படம் வெளியாக வாய்ப்பில்லை.

Related Post

7 நாட்களில் Dude படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - October 24, 2025 0
அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம் Dudeஇப்படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார்…

இந்த முறை அணுகுண்டு வெடியாக இருக்கும்.. அனிருத் நெகிழ்ச்சி

Posted by - January 31, 2023 0
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இணைந்தது குறித்து அனிருத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து…

Intro உருவாக்கிக் கொடுத்து, வீழ்ந்து கிடந்த அரவிந்த்சாமிக்கு Come Back கொடுத்தது யார் தெரியுமா?

Posted by - December 18, 2024 0
ரஜினியின் தளபதி படம் மூலம் அறிமுகமானவர் அரவிந்த்சாமி. அப்படத்தில் கலெக்டர் வேடத்திலும் அவருக்கு தம்பியாகவும் நடித்திருந்தார். அதன் பின், மணிரத்னத்தின் ரோஜா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் அரவிந்த்சாமி. இதில், மதுபாலா,…

கதறிய விஜய் டிவி பிரியங்கா! பிக் பாஸ் போனதே தப்பு, ஆனால்..

Posted by - November 25, 2022 0
பிரியங்கா விஜய் டிவி பிரியங்காவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சின்னத்திரையில் தற்போது இருக்கும் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் அவர். மாகாபா ஆனந்த் உடன் சேர்ந்து அவர் விஜய்…

எஸ்.கே-வின் படத்தால் செம அப்சட்டில் கமல்ஹாசன் – அப்படி என்ன தான் நடந்தது..?

Posted by - March 14, 2024 0
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அமரன் படத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் கமல்ஹாசன் செம அப்சட்டில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *