Generated Image January 09 2026 5 10PM

‘ஜனநாயகன் பொங்கல் இல்லை’ சென்சார் வழக்கில் திடீர் திருப்பம்.

67 0

ஜனநாயகன்’ படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்க நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். தணிக்கை வாரியத் தலைவர் மேல்முறையீடு செய்த நிலையில், விசாரணை நடைபெற்றது.’ஜன நாயகன்’ படம் தொடர்பான பிரச்னைகளை, சீலிடப்பட்ட கவரில் தணிக்கை வாரியம் தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் நீதிபதி பி.டி.ஆஷா கேட்டறிந்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளித்தார்.நீதிபதி வெளியிட்ட தீர்ப்பில், “ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானது. அந்தப் புகாரை ஊக்கப்படுத்த முடியாது. ஒரு உறுப்பினரின் புகாரை கொண்டு படத்தை எப்படி மறு ஆய்வுக்கு அனுப்ப முடியும். படத்திற்கு யுஏ சான்றிதழ் அளித்த பிறகு தலைவருக்கான அதிகாரம் முடிந்தது. மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. விரைந்து யுஏ தணிக்கைச் சான்றிதழ் அளிக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியத் தலைவர் சார்பில் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், “மனுவாக தாக்கல் செய்துவிட்டு தெரிவியுங்கள், விசாரணைக்கு ஏற்பது குறித்து பரிசீலிக்கப்படும். பிற்பகல் விசாரணைக்கு எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.அதன்படி இந்த வழக்கு தொடர்பான விசாரணை உயர்நீதிமன்றத்தில் மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. அப்போது, ‘இன்றைய தினமே மேல் முறையீடு செய்ய என்ன அவசரம்?’ என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு தணிக்கை வாரியம் தரப்பில், “எங்களுக்கு உரிய கால அவகாசம் வழங்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தணிக்கை வாரிய தலைவரின் அதிகாரம் குறித்து நீதிபதி முடிவெடுத்துள்ளார். ஆனால் இது குறித்து விரிவாக விவாதித்திருக்க வேண்டும். நியாயமான அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.அதன்பின் பரிசீலித்திருக்க வேண்டும். படத்தை மறு ஆய்வு செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோராத நிலையில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்போது தலைமை நீதிபதி, “தணிக்கை வாரியத்துக்கு எதற்காக உரிய கால அவகாசம் வழங்காமல் 24 மணி நேரத்தில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதற்கான அவசியம் என்ன?” என கேள்வி எழுப்பினார். சென்சார் வாரியம் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கொடுக்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கை வரும் 21-ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி வரும் 21-ம் தேதி வரை படம் வெளியாக வாய்ப்பில்லை.

Related Post

ஷங்கருக்காக இணைந்த லோகேஷ் கனகராஜ், மணி ரத்னம், முருகதாஸ், கவுதம் மேனன்.. வெளிவந்த புகைப்படம்

Posted by - August 4, 2023 0
ஷங்கர் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படுபவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 மற்றும் கேம் ஜெஞ்சர்…

அதிரடி ஆக்சன் காட்சிகள்.. எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ஹிப் ஹாப் ஆதியின் கடைசி உலகப் போர் பட ட்ரெய்லர்!

Posted by - September 12, 2024 0
 இந்த படத்தை தயாரித்து, இயக்கி நடித்ததுடன் இசையும் அமைத்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி.. நடிகர் ஹிப் ஹாப் தமிழா தயாரித்து இயக்கி நடித்துள்ள கடைசி உலகப் போர்…

11 வயது வித்தியாசமுள்ள நடிகனுக்கு ஜோடியாகும் பிரியா பவானி ஷங்கர்.. யார் அந்த நடிகர் தெரியுமா

Posted by - August 14, 2023 0
பிரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவிற்கு சின்னத்திரையில் இருந்து என்ட்ரி கொடுத்த நட்சத்திரங்களில் ஒருவர் பிரியா பவானி ஷங்கர். இவர் மேயாத மான் படத்தில் கதாநாயகியாக நடித்து…

ஐந்து நாட்களில் ஜெயிலர் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - August 15, 2023 0
ஜெயிலர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிச்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத்…

லியோ பட பாடலில் கை வைத்த சென்சார் போர்டு… விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

Posted by - September 11, 2023 0
அக்டோபர் 19 ஆம் தேதி லியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன..   விஜய் நடித்துள்ள லியோ படத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *