டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?

141 0

முதலமைச்சர் ஸ்டாலினின் அண்மையில் டெல்லி சென்று வந்த நிலையில், சென்னை மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

டாஸ்மாக் முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த, சென்னை மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்?

தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பிய டாஸ்மாக் வழக்கை விசாரித்து வரும் அமலாகக்த்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை மண்டல அமலாக்கத்துறை இணை இயக்குநர் பியூஷ் குமார் யாதவ் மற்றும் துணை இயக்குநர் கார்த்திக் தசாரி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் கனிம வளக் கொள்ளை  தொடர்பான வழக்குகளிலும் விசாரணை அதிகரிகளாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட வழக்கையும், பியூஷ் குமார் மற்றும் கார்த்திக் விசாரித்து வந்தனர்.

முதலமைச்சர் டெல்லி பயணம்:

டாஸ்மாக் அலுவலகம், முதலமைச்சரின் உறவினரான ஆகாஷ் பாஸ்கரன் வீடு என, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை அடுத்தடுத்து அதிரடியான சோதனைகளில் ஈடுபட்டு வந்தது. குறிப்பாக டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதோடு, டாஸ்மாக்கில் முறைகேடு செய்யப்பட்ட பணம் ஆகாஷ் பாஸ்கரன் வாயிலாக, சினிமாவில் முதலீடு செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதில் உதயநிதியின் தலையீடு இருப்பதாகவும் சிலர் இணையத்தில் தீவிரமாக களமாடி வந்தனர். இத்தகைய பரபரப்பான சூழலில் தான், 3 ஆண்டுகளாக இல்லாத வகையில், கடந்த மாதம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:

மூன்று ஆண்டுகளாக பங்கேற்காத நிதி ஆயோக் கூட்டத்தில் இப்போது மட்டும் முதலமைச்சர் பங்கேற்பது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர். வழக்குகளில் இருந்து தனது அரசையும், மகனையும் காப்ப்பாற்றிக் கொள்ளவே முதலமைச்சர் டெல்லி செல்வதாக விமர்சித்து இருந்தனர். ஆனால், மாநிலத்திற்கான நிதி தொடர்பான கோரிக்கைகளை வைக்கவே டெல்லி சென்றதாக, முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். இந்நிலையில் தான், தமிழ்நாட்டில் டாஸ்மாக், செந்தில் பாலாஜி மற்றும் கனிமவளக் கொள்ளை தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த, அமலாக்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிடப்பில் போடப்படும் வழக்குகள்:

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், டாஸ்மாக் வழக்கில் பல அதிரடியான திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக முக்கிய அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் அந்த வழக்குகளின் விசாரணை முடங்கும் அல்லது தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், டாஸ்மாக் வழக்கை தற்போதைக்கு பெரிதாக்க மத்திய அரசு விரும்பவில்லையா? அல்லது திமுக உடன் திரை மறைவில் ஏதேனும் ஒப்பந்தங்கள் உறுதியாகியுள்ளனவா? என ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன. அதேநேரம், அதிகாரிகள் மாற்றம் என்பது திமுகவினருக்கு சிறிது காலத்திற்கு நிம்மதியை தரும் என கூறப்படுகிறது.

Related Post

கப்சிப் விஜய்.. அரசியல் பக்குவம் இல்லையா? காட்டிகொடுத்த மாநாடு

Posted by - August 22, 2025 0
Vijay: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் விஜய், மதுரையில் நடத்திய பெரிய அரசியல் மாநாடு தற்போது வைரலாக பேசப்படுகிறது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள்…

அன்புமணிக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்..!

Posted by - April 10, 2025 0
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை உள்ளது – மருத்துவர் ராமதாஸ் விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பு…

கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்… தேர்தல் பணிகளை துரிதப்படுத்துங்கள்… நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அட்வைஸ்

Posted by - January 23, 2024 0
கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் – கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்க…

கரூர் துயர சம்பவம்! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. 41 குடும்பங்களை தத்தெடுக்கும் விஜய்..

Posted by - October 13, 2025 0
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் வீடியோகால் மூலம் விஜய் பேசினார்.…

திருமாவளவனுக்கு எதிராக செல்வப்பெருந்தகை செயல்படுகிறார் – விசிக குற்றச்சாட்டால் திமுக கூட்டணியில் சலசலப்பு

Posted by - July 5, 2025 0
சென்னை: ​திரு​மாவளவனுக்கு எதி​ராக செல்​வப்​பெருந்​தகை செயல்​படு​வ​தாக விசிக குற்​றம்​சாட்​டி​யுள்​ளது. மேலும், காங்​கிரஸ் குறித்த விசிக நிர்​வாகி​யின் கருத்து திமுக கூட்​ட​ணி​யில் சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. திமுக கூட்​ட​ணி​யில் இருந்து சில…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *