தித்திக்கும் தீபாவளிக்கு ‘தேனூறும் ஜிலேபி’ ரெடி!

212 0

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் திண்டுக்கலில் கடந்த 4 தலைமுறைகளாகத் தயாரிக்கப்பட்டு வரும் தனித்துவமான ஜிலேபி மக்களிடையே பிரபலமாகி வருகிறது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்.

திண்டுக்கல் நாகல் நகர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள சேஷா ஐயர் மிட்டாய் கடை, ஆண்டு முழுவதும் பல இனிப்பு மற்றும் காரவகை தின்பண்டங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அவர்கள் தயாரிக்கும் ஜிலேபி-க்கு எனத் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களிலும், பிறந்தநாள் போன்ற இல்ல விழாக்களிலும் இவர்கள் தயாரிக்கும் ஜிலேபிக்களை மக்கள் ஆர்வமுடன் ஆர்டர் செய்து மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். இதன் காரணமாகத் திண்டுக்கலுக்கு பெயர்போன பூட்டு, பிரியாணி, சிறுமலை வாழைப்பழம் ஆகியற்றின் வரிசையில் 4 தலைமுறைகளாகச் சுவை மாறாமல் தயாரித்து விற்பனை செய்யப்படும் சேஷா ஐயர் மிட்டாய் கடையின் ஜிலேபியும் இடம்பிடித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

உளுந்து, அரிசியை நன்கு ஊறவைத்து அரைத்து மாவாக்கி, துணியைப் பயன்படுத்தி அதனை எண்ணெயில் வட்ட வடிவில் பிழிந்தெடுக்கின்றனர். பொன்நிறத்தில் வெந்தபின் அவற்றைத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ள சர்க்கரை பாகில் ஊறவைத்து, நன்கு வடிகட்டிய சர்க்கரை பாகை அதன் மேல் ஊற்றுவதன் மூலம் சுவைமிகுந்த ஜிலேபி தயாரிக்கப்படுகிறது.

எந்தவித ரசாயனமோ, வண்ண பொடிகளோ கலக்காமல் மிகவும் சுகாதாரமான முறையில் சுவைமிகுந்த ஜிலேபிக்கள் தயாரிக்கப்படுவதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி வாங்கி உண்பதாகக் கூறுகின்றனர் இக்கடையின் பணியாளர்கள்.

தாத்தா தொடங்கிய தொழிலைக் கைவிட மனமில்லாமல் குடும்ப தொழிலை நான்காவது தலைமுறையாக முன்னெடுத்து செல்வதாகக் கூறுகிறார் சேஷா ஐயர் மிட்டாய் கடை உரிமையாளர் பிரியா லட்சுமி. தாத்தாவின் கைவண்ணம் மாறாமல் குடும்ப தொழிலை செய்வது மனதிற்கு மகிழ்ச்சியை அளித்தாலும், தங்கள் தொழில் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடிகிறது என்ற எண்ணம் அதிலும் அதிக மனநிறைவை அளிக்கிறது எனப் பெருமிதம் நிறைந்த முகத்துடன் கூறுகிறார் பிரியா லட்சுமி.

Related Post

முடிவுக்கு வரும் முக்கியமான 3 சீரியல்கள்.. அண்ணன் தங்கை பாசத்திற்கு பூசணிக்காய் உடைத்த இயக்குனர்

Posted by - August 17, 2024 0
சின்னத்திரை மூலம் மெகா தொடராக ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து சீரியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள்…

சன் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Posted by - July 17, 2023 0
சன் டிவி சீரியல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் மனதை கவர்ந்துள்ளது. எதிர்நீச்சல், கயல், சுந்தரி, திருமகள் போன்ற சீரியல்கள் TRPல் பட்டையை கிளப்பி…

கதிர் சட்டையை பிடித்து குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி… எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

Posted by - October 9, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது, பெயருக்கு ஏற்றால் போல் பல சவால்களை தாண்டி எதிர்நீச்சல் அடித்து தர்ஷனை திருமணத்தை முடித்துவிட்டார் ஜனனி. அறிவுக்கரசி திருமணத்தை நடத்தி முடிக்க…

முதல் சீசனில் டி.என்.ஏ டெஸ்ட்… இதுல என்னவா இருக்கும்? பாரதி கண்ணம்மா 2 சீரியல் புது அப்டேட்!

Posted by - February 6, 2023 0
பாரதியாக புதிதாக களம் இறங்குகிறார் சிபு சூர்யன். ரோஜா சீரியலில் அர்ஜுன் சாராக இவர் செய்த சாகசங்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சின்னத்திரை ரசிகர்களின் பேச்செல்லாம் பாரதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *