மீண்டும் சீண்டும் பாக்., அமைச்சர் – ”எல்லையில் ஏதாச்சும் செய்வாங்க” கண்டுக்காத இந்தியா

199 0

எல்லையில் இந்தியா மோசமாக செயல்படக் கூடும் என்பதால் பாகிஸ்தான் இருமுனை போருக்கு தயாராக வேண்டும் என, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பேசியுள்ளார்.

தாலிபன்கள் உடனான மோதலுக்கு மத்தியில் இந்தியாவின் அச்சுறுத்தலும் இருப்பதாக, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

பாக்.,அமைச்சரின் சர்ச்சை கருத்து:

ஆஃப்கானிஸ்தான் உடனான எல்லைப் பிரச்னையில் மீண்டும் இந்தியாவையும் தொடர்புப்படுத்தி, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “எல்லையில் இந்தியா மோசமாக செயல்படக்கூடும். ஆஃப்கானிஸ்தான் உடனான எல்லை மோதலுக்கு மத்தியில் பாகிஸ்தான் இருமுனை மோதலுக்கும் தயாராக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.  எல்லையில் இந்தியாவால் ஏதேனும் தாக்குதல் நிகழக்கூடுமா? என நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு, “இல்லை, கண்டிப்பாக அந்த வாய்ப்பு இருக்காது என கூற முடியாது. அதற்கு வலுவான வாய்ப்புகள் உள்ளன” என பதிலளித்துள்ளார்.

இருமுனை போர்:

தொடர்ந்து, இருமுனை போர் வெடித்தால் அதனை எப்படி எதிர்கொள்ளலாம் என்பது குறித்து பிரதமர் உடன் ஏதேனும் ஆலோசனை நடத்தினீர்களா? என செய்தியாளர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, “ஆம், திட்டங்கள் கைவசம் உள்ளன. அது குறித்து பொதுவெளியில் விவாதிக்க முடியாது. ஆனால், எந்தவொரு சூழலுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என பேசியுள்ளார். முன்னதாக இந்த வார தொடக்கத்தில் ஜியோ செய்திகளுக்கு அளித்த பேட்டியில்,  ”ஆஃப்கானிஸ்தானின் தாலிபன் அரசாங்கம் இந்தியாவின் சார்பில் ஒரு மறைமுக போரில் ஈடுபட்டுள்ளது. தாலிபானின் முடிவுகள் டெல்லியால் ஆதரிக்கப்படுவதால், போர் நிறுத்தம் நீடிக்குமா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது” என கவாஜா குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தியா சொல்வது என்ன?

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் பழக்கம் நன்கு அறியப்பட்டதாகும் என்றார். மேலும், “மூன்று விஷயங்கள் தெளிவாக உள்ளன. ஒன்று, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை ஆதரிக்கிறது மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கிறது. இரண்டு, அதன் சொந்த உள் தோல்விகளுக்கு அண்டை நாடுகளைக் குறை கூறுவது பாகிஸ்தானின் பழைய வழக்கம். மூன்று, ஆப்கானிஸ்தான் அதன் சொந்த பிரதேசங்களின் மீது இறையாண்மையைக் கொண்டிருப்பதில் பாகிஸ்தான் கோபமாக உள்ளது” என்று சாடினார். இந்த சூழலில் தான் இந்தியா எல்லையில் ஏதேனும் மோசமாக செய்யக்கூடும் என்று, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பேசியிருக்கிறார்.

பிரச்னை என்ன?

எல்லை தாண்டிய மோதல்களில் ஏராளமான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புதன்கிழமை இரவு இஸ்லாமாபாத் மற்றும் காபூல் 48 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை அடுத்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை வந்தது.  இரு அண்டை நாடுகளுக்கும் இடையே ஒரு வாரமாக நீடித்த வன்முறையைத் தொடர்ந்து தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.

Related Post

நண்பேண்டா.. மோடியின் முதுகில் குத்தும் ட்ரம்ப்? உறவுக்கு கை கொடுத்து, துரோகத்திற்கு வலை?

Posted by - September 12, 2025 0
இந்தியா உடனான உறவை ஒருபக்கம் பாராட்டியபடியே, உலக நாடுகள் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கும் இரட்டை நிலைப்பாட்டு பணிகளை அதிபர் ட்ரம்ப் முன்னெடுத்துள்ளார். INDIA US Trade: ரஷ்யாவிடம்…

“இருமுனைப் போருக்கு தயார்“; மீண்டும் இந்தியாவை வம்புக்கிழுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

Posted by - November 14, 2025 0
இந்தியாவுடன் மறைமுகப் போரை நடத்தி வருவதாக ஏற்கனவே கூறிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், தற்போது போருக்கு தயாராக இருப்பதாகக் கூறி மீண்டும் இந்தியாவை வம்பிழுத்துள்ளார்.…

“பதிலடி கொடுத்தே ஆகணும்“ ட்ரம்பிடம் கூறிய புதின் – ரஷ்யாவின் அடியை தாங்குமா உக்ரைன்.?!

Posted by - June 5, 2025 0
ரஷ்யாவிற்குள் வெகு தூரம் ஊடுருவி ட்ரோன் தாக்குதலை நடத்திய உக்ரைனுக்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் தெரிவித்துள்ளார்.…

Hero Splendor Electric: இந்தியாவின் நம்பர் ஒன் பைக்.. ஸ்ப்ளெண்டரை மின்சார எடிஷனில் களமிறக்கும் ஹீரோ – 180KM ரேஞ்ச்

Posted by - September 16, 2025 0
Hero Splendor Electric: இந்திய பைக் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஸ்ப்ளெண்டர் மாடலை, மின்சார எடிஷனில் அறிமுகப்படுத்த ஹீரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. Hero Splendor…

தலைக்கு தில்ல பாத்தியா.! ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு அஞ்சாமல் 10 நிபந்தனைகள் விதித்த ஈரான்; அது என்ன.?

Posted by - April 7, 2026 0
அமெரிக்கா-ஈரான் போரை நிறுத்துவதற்கு பாகிஸ்தான் அனுப்பிய வரைவு திட்டத்தை நிராகரித்த ஈரான், ட்ரம்ப்பின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல், பதிலுக்கு 10 நிபந்தனைகள் விதித்துள்ளது. அவை என்ன.? பார்க்கலாம். ஈரான்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *