திருமாவளவனுக்கு எதிராக செல்வப்பெருந்தகை செயல்படுகிறார் – விசிக குற்றச்சாட்டால் திமுக கூட்டணியில் சலசலப்பு

99 0

சென்னை: ​திரு​மாவளவனுக்கு எதி​ராக செல்​வப்​பெருந்​தகை செயல்​படு​வ​தாக விசிக குற்​றம்​சாட்​டி​யுள்​ளது. மேலும், காங்​கிரஸ் குறித்த விசிக நிர்​வாகி​யின் கருத்து திமுக கூட்​ட​ணி​யில் சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

திமுக கூட்​ட​ணி​யில் இருந்து சில கட்​சிகள் வெளி​யேறி​னாலும், அதற்கு ஈடாக பாமகவை கூட்​ட​ணி​யில் இணைப்​ப​தற்​கான நடவடிக்​கையை தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை மூலம் திமுக செய்து வரு​வ​தாக கூறப்​படு​கிறது. இதையொட்​டி, பாமக நிறு​வனர் ராம​தாஸை சந்​தித்த பிறகு , “2011-ம் ஆண்டு போல் விசிக​வும், பாமக​வும் ஒரே கூட்​ட​ணி​யில் இருக்க வேண்​டும்” என செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​திருந்​தார்.செல்​வப்​பெருந்​தகை​யின் கருத்தை கடுமை​யாக விமர்​சித்து தனி​யார் தொலைக்​காட்சி விவாத நிகழ்ச்​சி​யில் விசிக துணை பொதுச் செய​லா​ளர் வன்​னியரசு பேசி​ய​தாவது: காங்​கிரஸ் கட்​சிக்கு அதிக தொகு​தி​களை ஒதுக்​கு​கின்​றனர். தமிழகத்​தில் காங்​கிரஸ் வலிமை​யாகவா இருக்​கிறது. எங்​களுக்கு அதிக தொகு​தி​களை ஒதுக்க வேண்​டும் என கூறுகிறோம். நான் கூட்​டணி கட்​சியை குறைத்து மதிப்​பிட​வில்​லை.அதே​நேரம், காங்​கிரஸின் வலிமை குறித்து தமிழகத்​தில் கருத்​துகணிப்பு நடத்​தி​னால் உண்மை தெரிய​வரும். தமிழகத்​தில் காங்​கிரஸுக்கு என்ன இருக்​கிறது? அகில இந்​திய அளவில் ராகுல்​காந்தி என்​னும் தலை​வர் சிறப்​பாக செயல்​படு​கிறார். அதன் தொடர்ச்​சி​யாகவே காங்​கிரஸை பார்க்க வேண்​டி​யிருக்​கிறது. விசிக​வுக்கு செல்​வப்​பெருந்​தகை தலை​வர் இல்​லை. இன்று அவர் ஒரு கட்​சி​யில் இருப்​பார், நாளை ஒரு கட்​சிக்கு செல்​வார். இது​தான் அவருடைய கடந்த கால வரலாறு. விசிக குறித்து பேச அவருக்கு தார்​மீக உரிமை இல்​லை. பாஜக, பாமகவோடு சேர மாட்​டோம் என விசிக தலை​வர் தெளி​வாக கூறிய நிலை​யில், பாமகவோடு சேருங்​கள் என சொல்​வது அவர் வேலை​யல்ல. பாஜக​வும், காங்​கிரஸும் சேர வேண்​டும் என நாங்​கள் சொன்​னால் அவர் ஏற்​றுக் கொள்​வா​ரா. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

இதன் தொடர்ச்​சி​யாக காங்​கிரஸார் சமூக வலைதள பதிவு​களில், “2014 மக்​கள​வைத் தேர்​தலில் தனித்து களம் கண்ட காங்​கிரஸ் கட்​சி​யின் வாக்கு சதவீதம் 4.37. அதே​நேரத்​தில் மக்​கள் நல கூட்​டணி என்ற பெயரில் விசிக​வின் வாக்கு சதவீதம் 0.77. யார் வலிமை என்று இப்​போது புரி​கிற​தா. வன்​னியரசின் இந்த பேச்சை முதலிலேயே கட்​சித் தலை​வர் தடுத்து நிறுத்த வேண்​டும்” என கண்​டனக் குரல்​களை எழுப்பி வரு​கின்​றனர்.

விசிக​வில் இருந்து கருத்து வேறு​பாட்​டால் வெளி​யேறிய செல்​வப்​பெருந்​தகை, காங்​கிரஸ் தலை​வ​ரான பிறகே திரு​மாவளவனை சந்​தித்து வாழ்த்து பெற்​றார். அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் பேசிய செல்​வப்​பெருந்​தகை, “2024 மக்​கள​வைத் தேர்​தலில் திரு​மாவளவனை வெற்றி பெறச் செய்ய காங்​கிரஸ் தொண்​டர்கள உழைப்​பார்​கள்” என தெரி​வித்​திருந்​தார். ஏற்​கெனவே கட்​சி​யில் இருந்​து, காங்​கிரஸ் கட்​சிக்கு தலை​வ​ராக செல்​வப்​பெருந்​தகை வந்​த​தில் எவ்​வித சங்​கட​மும் இல்லை என விசிக பொதுச்​செய​லா​ளர் துரை.ரவிக்​கு​மாரும் தெரி​வித்​திருந்​தார்.

இவ்​வாறு இரு தரப்​பினரும் இணக்​க​மாகி ஓராண்டே ஆன நிலை​யில், தற்​போது வெடித்​துள்ள மோதல் எங்கு வரை செல்​லும் என்​பதை பொறுத்​திருந்தே பார்க்​க வேண்​டும்​ என அரசி​யல்​ நோக்​கர்​கள்​ கூறுகின்​றனர்​.

Related Post

”தமிழக அரசே.. விஜயை சுதந்திரமாக பேச விடுங்க” காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை

Posted by - September 23, 2025 0
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுதந்திரமாக பேசவும், பயணிக்கவும் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். வாக்குத் திருட்டுக்கு…

“எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல” நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!

Posted by - March 3, 2025 0
கச்சத்தீவு விவகாரம், தமிழ்நாடு மீன்பிடி சட்டத்திருத்தம் என திமுக-விற்கு எதிரான கருத்துக்களை நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் பேசியுள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்து…

“சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை, எங்கே போனார் அப்பா.?“

Posted by - July 19, 2025 0
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு திருவாரூரில் பேசியபோது, திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். ‘மக்களை…

“உனக்கு என்ன பிரச்சினை, போடா!” – சீமானின் ஆவேசப் பேச்சு: கொலை மிரட்டல் வழக்குப் பதிவு!

Posted by - November 24, 2025 0
10 நாட்களில் 5 கோடி பேருக்கு SIR படிவங்களைக் கொடுக்க முடியுமென்றால், ஜாதி வாரி கணக்கெடுப்பு  நடத்த முடியாதா? – சீமான் கேள்வி புதுச்சேரி: கொளத்தூர் தொகுதியில்…

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Posted by - December 2, 2022 0
கோவையை தமிழக அரசு புறக்கணிப்பதாக குற்றஞ்சாட்டி முன்னாள் அமைச்சர் வேலுமணி சார்பில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *