“எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல” நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!

131 0

கச்சத்தீவு விவகாரம், தமிழ்நாடு மீன்பிடி சட்டத்திருத்தம் என திமுக-விற்கு எதிரான கருத்துக்களை நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் பேசியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களாக நிர்வாகிகள் பலரும் விலகி வந்த நிலையில், அக்கட்சியின் முக்கிய பேச்சாளரான காளியம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு விலகினார். இது நாம் தமிழருக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

எங்களுக்காக யாரும் இல்ல:

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய பிறகு காளியம்மாள் நிருபர்களுக்கு முதன்முறையாக பேட்டி அளித்தார். ராமேஸ்வரத்தில் அவர் கூறியதாவது, தமிழர்கள் கடலோர மக்களை ஒரு ஓரமாக ஒதுக்கிப் பார்க்கிறார்கள். எங்களுக்கான பெரிய பங்களிப்பு கிடையாது. ராஜ்யசபாவில் எங்களுக்காக பேசுறதுக்கு ஆளு கிடையாது. மக்களவையில் எங்களோட குறைகளைப் பேசுறதுக்கு யாரும் கிடையாது.

ஒரு சட்டத்தைத் திருத்துறாங்கனா கடலோர முறைப்படுத்துதல் சட்டம், நீர்கொள்கை, மீன்பிடி கொள்கையா இருக்கட்டும் யாரை கேட்டு அந்த கொள்கையை உருவாக்கியிருக்கீங்க? தேசிய மீன்வளக் கொள்கையை உருவாக்கியிருக்கிறது மத்திய அரசு. அதற்கு யாருடன் விவாதிக்கப்பட்டது. எந்த மக்களுடன் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது?

யாரை கேட்டு திருத்துனீங்க?

தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் திருத்தம் செய்றாங்க. அது யாரை கேட்டா திருத்துனீங்க? மீன்பிடிக்கப் போறது நாங்க. கேரளாவுல இருக்குற மீனவர்கள் கடலுக்கு பட்டா கேட்குறாங்க. எங்களுக்கே பட்டா இல்லாமல் நாங்க தவிக்குறோம். நாங்கள் மாற்றாந்தாய் பிள்ளைகளாக கூட நடத்தப்படவில்லை. ஏதிலிகள் போல நடத்தப்படுகிறோம். எங்களுக்கான எந்த உரிமையும் கிடையாது, சலுகையும் கிடையாது. மீன்வளத்துறை அமைச்சர்னு ஒரு பதவி. அதுவும் எங்களுக்கு இல்லை. எங்களோட பிரச்சினையை யார் இப்போது பேசப்போகிறார்கள்?

கடல்குடி மக்களா பிறந்தது குத்தமா?

ஒரு தாயை இழந்த பிள்ளையப் போல நாங்கள் இருக்கிறோம். இதுதான் யதார்த்தமான உண்மை. எங்களுக்கான உரிமையை கூட பெற முடியாத மக்களாகத்தான் நாங்கள் இருக்கிறோம். என் வீட்டுக்காரர் இலங்கையில் இருந்து வந்த பிறகு 60 நாள் நான் சிகிச்சை கொடுத்தேன். ஒவ்வொரு பெண்களும் என்ன பாவம் செய்தோம்? கடல் குடி மக்களாக பிறந்தது குத்தமா?

கச்சத்தீவு

எங்களோட கச்சத்தீவை கொடுத்துவிட்டு, எங்களோட நிலத்திற்கு நாங்கள் போகும்போது நீங்கள் அத்துமீறி வருகிறீர்கள்? என்கிறார்கள். இந்த எல்லைக் கோட்டை யாரு போட்டீங்க? இந்திய – இலங்கை அரசும் போடுவீங்களா? எங்களுக்கான பிரதிநிதித்துவத்திற்காகவாது எங்களை உட்கார வச்சுருக்கனும்ல? இது யாரால் வரையறுக்கப்பட்டது?

இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாள் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. அவர் தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல் கூறப்பட்டது. ஆனால், அவர் திமுக-வில் இணைய இருப்பதாகவும், அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலம் தமிழ்நாடு மீன்பிடி சட்டத் திருத்தம், கச்சத்தீவு விவகாரம் என திமுக-விற்கு எதிராக காளியம்மாள் பேசியுள்ளார்.

Related Post

“திமுக கோட்டை எல்லாம் தூள் தூளாயிடுச்சு, அது இனிமே எங்க கோட்டை“ – டெல்டா குறித்து இபிஎஸ் பேச்சு

Posted by - July 23, 2025 0
டெல்டா மாவட்டங்கள் இனி திமுகவின் கோட்டை அல்ல, அந்த கோட்டை எல்லாம் தூள் தூளாக நொறுக்கப்பட்டுவிட்டதாக தஞ்சையில் பேசிய எடப்பாடி பழனிசாமி விமர்சனம். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை…

தீர்ப்பு வழங்கியதற்காகவே மோசமாக விமர்சிக்கின்றனர்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

Posted by - October 6, 2025 0
சென்னை: வழக்குகளில் தீர்ப்பு வழங்கியதற்காக நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பின்புலம் குறித்து சமூக வளைதளத்தில் மோசமாக விமர்சிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார் தெரிவித்துள்ளார். யூடியூப்…
Gemini Generated Image t4hwvit4hwvit4hw

500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?

Posted by - March 30, 2026 0
தங்கம், வெள்ளி, பணம், கார்கள்… தவெக தலைவர் விஜயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? தவெக தலைவர் விஜயின் அசையும் சொத்து மதிப்பு ரூ.404 கோடி (404,58,57,196)…
tvk viajy

எம்மதமும் சம்மதம்! திருச்சி வாக்கு சேகரிப்புக்கு நடுவே வழிபாடு! மதநல்லிணக்கத்தை செயலில் காட்டிய விஜய்

Posted by - April 20, 2026 0
தவெக தலைவர் விஜய் தனது திருச்சி கிழக்கு தேர்தல் பரப்புரையின் போது தேவாலயம், தர்கா மற்றும் கோவிலில் வழிபாடு செய்தார். தவெக தலைவர் விஜய் திருச்சியில் இன்று…

தமிழக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது திமுக அரசின் கடமை : அண்ணாமலை

Posted by - May 21, 2025 0
தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, தமிழகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது திமுக அரசின் கடமை என்று பாஜக தேசிய பொதுக்குழு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *